தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 juli 2013

வட மாகாண சபைத் தேர்தலில் தனித்தா போட்டியிடுவது?: குழப்பத்தில் டக்ளஸ்

நீதிமன்றிற்கு அழைத்துச் சென்ற இராணுவச் சிப்பாய் தப்பியோட்டம் - வவுனியா வாகன விபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலி
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 07:14.24 AM GMT ]
நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைச் சிப்பாய் ஒருவரே இவ்வாறு சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த படைச் சிப்பாய் கைது செய்யப்பட்டிருந்தார்.
சிலாபம் நீதிமன்றிற்கு அழைத்துச் சென்ற போது குறித்த படைச் சிப்பாய் தப்பிச் சென்றிருந்தார்.
நீதிமன்றிற்கு அழைத்துச் சென்ற போது குறித்த படைச்சிப்பாய் தப்பிச் சென்றுள்ளார்.
  • வவுனியா வாகன விபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலி; நால்வர் காயம்
யாழ்ப்பாணம் - கண்டி ஏ 9  வீதியின் வவுனியா, நவகமுவ பிரதேசத்தில் இராணுவ கெப் ரக வாகனமொன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மேற்படி வாகனம், வீதிக்கு குறுக்காக பயணித்துக் கொண்டிருந்த பிரதேசவாசி ஒருவர் மீது மோதிவிடாமல் வீதியோரமாக நிறுத்திவிட்டு மீண்டும் பயணிக்க ஆரம்பிக்கும் தறுவாயில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான வாகனம், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில், கிளிநொச்சி படைத் தலைமைகயத்தின் 24ம் கெமுனு படைப்பிரிவைச் சேர்ந்த கேணசேகர (வயது 29) மற்றும் அதே படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 20வது கஜபா றெஜிமண்டைச் சேர்ந்த தென்னகோன் (வயது 25) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நான்கு இராணுவ வீரர்களும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் நவகமுவ பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

வட மாகாண சபைத் தேர்தலில் தனித்தா போட்டியிடுவது?: குழப்பத்தில் டக்ளஸ்
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 09:23.06 AM GMT ]
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரச கூட்டணியில் இணைந்தா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பில் ஈ.பி.டி.பி. இன்னும் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் இணைந்தே வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பி. போட்டியிடும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசுடன் இணைந்து தாம் போட்டியிடப் போவதாக அமைச்சர் ஒருவர் வெளியிட்ட தகவல்களில் எந்த உண்மையும் இல்லை.தேர்தலில் கூட்டணி அமைத்தா அல்லது தனித்தா போட்டியிடுவது என்பது தொடர்பில் கட்சியின் பொதுக் குழு மற்றும் மத்திய குழு தொடர்ந்து ஆராயந்து வருகிறது.
இன்னும் சில தினங்களில் மக்கள் விரும்புகின்ற, அவர்கள் ஏற்றுக்கொள்கின்ற சாதகமான தீர்மானம் எடுக்க்ப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
தேர்தலில் தனித்தா அல்லது கூட்டணி அமைத்தா போட்டியிடுவது என்பது தொடர்பில் கட்சிக்கும் இரண்டுவகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதனாலேயே இறுதி முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் ஆராயந்து வருகிறோம். மக்கள் கருத்துக்களையும் கருத்தில் எடுத்துள்ளோம்.அனைத்து விடயங்களையும் தெளிவாக ஆராயந்து இன்னும் சில தினங்களில் கட்சியின் உறுதியான முடிவை அறிவிப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten