தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 juli 2013

இராணுவத்திற்கு அவமரியாதை செய்யவில்லை: சஞ்சீவ புஷ்பகுமார்

யாழ்ப்பாணத்தில் புத்தக விழா! சிங்கள இனவாதிகளுக்கு தமிழ்மொழி மீது அக்கறை வந்ததா? : சீமான் ஆவேசம்!
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 08:56.49 PM GMT ]
யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்த வருமாறு அங்கு வாழும் தமிழர்கள் கேட்டுக் கொண்டதாகவும், அது குறித்து தங்களது உறுப்பினர்களின் கருத்தறிய வரும் எதிர்வரும் 27ம் திகதி சென்னை தியாகராயர் நகரில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி) கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சீமான் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் இந்த புத்தக விழாவை நடத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தருவதற்கு யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம், யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியன மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் இந்திய துணைத் தூதரகமும் முன்வந்திருப்பதாக, தனது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த புத்தக விழாவை செப்டம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தமிழினத்தை திட்டமிட்டு ஏமாற்றும் சிங்கள பெளத்த இனவாத இலங்கை அரசின் மோசடியாகும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குப் பகுதியில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் அமைதியாகவும், மகிழ்வுடனும் வாழ்கின்றார்கள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.

இதன் பின்னணியில் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்து வரும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய (கொமன்வெல்த்) மாநாட்டில் கலந்துகொள்ள வரும் அயல் நாட்டு தலைவர்களுக்கு படம் போட்டுக்காட்ட இப்படிப் பட்ட ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்கிறது இலங்கை அரசு.

தமிழ் மொழியின், அதன் வரலாற்றின் காலப் பெட்டகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகத்தை எரித்து சாம்பலாக்கிய சிங்கள இனவாதிகள் தமிழ்ப் புத்தக விழா எடுக்க அனுமதிக்கிறார்களா?

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள நகரங்கள், கிராமங்களின் பெயர்களையெல்லாம் சிங்கள மொழியில் மாற்றிக் கொண்டிருக்கும் இனவாத அரசுக்கு தமிழ் மொழி மீது அக்கறை வந்துள்ளதா?

முள்வேலி முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 2 இலட்சம் மக்களை தங்கள் வாழ்விடங்களில் குடியேற்றாமல், காடுகளை அழித்து புதிதாக கிராமங்களை உருவாக்கி தங்க வைக்கும் அந்த சிங்கள இனவாதிகளுக்கு தமிழனின் மொழி மீது அக்கறை பிறந்துள்ளதா? சர்வதேசத்தை ஏமாற்ற திட்டமிடப்படும் இந்த நாடகத்திற்கு பபாசி துணை போகலாமா?

ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி தமிழினத்தின் வாசிப்பு ஆர்வத்தை பெருக்கி வரும் பபாசி அமைப்பு, தமிழினத்தை அழித்தொழித்த ஒரு இனவாத அரசின் பிடியில் சிக்கி, நாளும் அழிக்கப்பட்டு வரும் ஒரு இனத்தின் நிலையை உலகிற்கு கூற, ஈழத்தில் நடந்துவரும் தமிழின அழித்தல் தொடர்பான புத்தகங்களை மட்டுமே விற்கும் புத்தகக் காட்சியை நடத்த முன்வர வேண்டுமே தவிர, தமிழினத்தை திட்டமிட்டு அழித்த சிங்கள பவுத்த இனவெறி அரசின் கபட நாடகத்திற்கு துணைபோகக் கூடாது.

இதற்காக ஒரு கூடத்தைக் கூட்டும் திட்டத்தை பபாசி கைவிட வேண்டும். தமிழினத்தை அழித்த உங்கள் நாட்டில் தமிழ்ப் புத்தக விழாவை நடத்த நாங்கள் வெட்கப்படுகிறோம் என்று யார் உங்களுக்கு அழைப்பு விடுத்தார்களோ அவர்களுக்கு பதில் அனுப்புங்கள். அதுவே தமிழினத்தின் நியாயமான உணர்வை வெளிப்படுத்தும்’’என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு அவமரியாதை செய்யவில்லை: சஞ்சீவ புஷ்பகுமார்
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 08:31.53 PM GMT ]
இராணுவத்திற்கு அவமரியாதை செய்யவில்லை என ப்ளைங் பிஸ் திரைப்படத்தின் இயக்குனர் சஞ்சீவ புஷ்பகுமார் தெரிவித்துள்ளார்.
எனது திரைப்படத்தின் மூலம் படையினருக்கு அவதூறு ஏற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. சொந்த அனுபவங்களையே நான் திரைப்படமாக எடுத்திருக்கின்றேன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் எனக்கு தொடர்பில்லை. கலைத்துவமான படைப்பை அரசாங்கம் வித்தியாசமாக நோக்குகின்றது என சஞ்சீவ குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை குறித்த திரைப்படம் இராணுவத்தினரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் குறித்தத் திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க்பட்டுள்ளது.
இதேவேளை, கலைத்துறையிலும் அரசாங்கம் இராணுவ மயப்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளதாக சுதந்திர ஊடக மையம் குற்றம் சுமத்தியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten