[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 11:43.08 PM GMT ]
முதலாவது பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான கே.வி.தவராசாவே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். முதலாவது பிரதிவாதியான யோகராஜா நிரோஜனுக்கு எதிராக சாட்சியம் இல்லாதபடியாலும் அவர் எந்தக் கட்டத்திலும் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சாட்சியம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவில்லை என்பதனால் அவரை விடுதலை செய்யும்மாறு சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் கோரி நின்றார்.
அணிந்திருந்த மேலங்கியில் புத்தர் பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததால் திருகோணமலை புகையிர நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஏழு வருடங்களுக்கு மேலாக அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டிய சட்டத்தரணி முதலாவது பிரதிவாதியை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும்படி சட்டமா அதிபருக்கு பரிந்துரை செய்யுமாறு சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.
எதிர்த்தரப்பு சட்டத்தரணியின் வேண்டுகோளை எதிர்க்கப்போவதில்லை என அரச தரப்பு சட்டத்தரணியான தமித்தினி டி சில்வா குறிப்பிட்டார். இதனையடுத்து சட்டமா அதிபரின் கருத்தை செப்டெம்பர் 30ம் திகதி அறிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலங்கியில் புத்தர் பெருமான்! திருகோணமலையில் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 12:00.10 AM GMT ]
இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
புகையிரத நிலையத்தில் பயணிக்கவிருந்த பெரும்பான்மை இன மக்களின் கோரிக்கையை அடுத்தே இவர்கள் இருவரும் பொலிஸாரினால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை புகையிரத நிலையித்தில் பொலிவியா நாட்டைச் சேர்ந்த இளைஞன் தனது பெண் நண்பியுடன் கொழும்பு செல்வதற்காக காத்திருந்துள்ளார்.
அவர்கள் இருவரும் அணிந்திருந்த ரீ சேரட்டில் புத்தர் பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதனை அவதானித்த சக பிரயாணிகள் இவர்களிடம் சென்று அணிந்திருந்த ரீ சேர்ட்டினை கழற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.
மொழி புரியாத இந்த வெளிநாட்டவர்களால் இதனை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அங்கு குழுமியவர்கள் அவர்களின் செயற்பாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
சம்பவத்தையடுத்து புகையிரத நிலைய பொலிஸ் அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டதை தொடர்ந்து ரீ சேர்ட் கழற்றப்பட்டதுடன், வெளிநாட்டவர்கள் இருவரும் விசாரணைக்காக திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten