[ புதன்கிழமை, 17 யூலை 2013, 02:26.11 AM GMT ]
ஆசிரியர் ஒருவரால் தாக்குதலுக்குள்ளான நிலையில், 10 வயது மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்துள்ளார்.
நேற்று வவுனியாவில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் 5ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட 13ம் திருத்தச்சட்டம் மாத்திரமே ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்க அதிகாரப்பகிர்வை வழங்கி தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரே வழி என்று, புதிதாக வெளியான நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாணவன் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி வைக்குமாறு கூறியபின்னர் அம்மாணவனுக்கு கன்னத்தில் கடுமையாக தாக்கியதுடன் கோபம் தீராத காரணத்தால் அம்மாணவனின் முதுகில் குனிய வைத்து பலமாக குறிப்பிட்ட ஆசிரியர் தாக்கியுள்ளார்.
ஆசிரியரின் தாக்குதலால் மாணவன் பாதிப்படைந்த நிலையில் வவுனியாவில் உள்ள தனியார் வைத்திசாலையில் உடனடியாக சிகிச்சைக்கு சென்ற சமயம் தனியார் வைத்தியாலையின் வைத்திய அதிகாரி உடனடியாக பொது வைத்தியசாலையை நாடுமாறு பணித்துள்ளார்.
எனவே மாணவன் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவித்தார்.
13க்கு சார்பாக தயான் ஜெயதிலக்கவின் நூல் வெளியாகியுள்ளது! 13ம் திருத்தச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 02:34.42 AM GMT ]
இலங்கையின் இராஜதந்திரி தயான் ஜெயதிலகவினால் எழுதப்பட்ட நீண்ட யுத்தமும், உரைந்த சமாதானமும் என்ற நூலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யுத்தத்தினால் இராணுவம் பெற்ற வெற்றியை 13ம் திருத்தச் சட்டம் இல்லாது செய்துவிடும் என்று வாதிட முடியாது.
தற்போதுள்ள தீர்வுத்திட்டங்களில், அனைத்து தரப்புக்கும் தீர்வாக அமையக்கூடிய ஒரே விடயம் 13ம் திருத்தச்சட்டமே.
எனவே இந்த சட்ட திருத்தம் மாற்றப்படவோ, கைவிடப்படவோ கூடிய ஒன்று இல்லை என்று அவர் தமது நூலில் தெரிவித்துள்ளார்.
2ம் இணைப்பு
13ம் திருத்தச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!– தயான் ஜயதிலக்க
13ம் திருத்தச் சட்டம் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் விஞ்ஞானி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்கு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
13ம் திருத்தச் சட்டத்தை இல்லதொழிக்க முடியாது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளமாக 13ம் திருத்தச் சட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதன் மூலம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இடைவெளி கூடும்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மீள ஒருங்கிணை முடியாது.
பிரிவினைவாதத்திற்கு எந்த வகையிலும் இடமளிக்கக் கூடாது.
தயான் ஜயதிலக்க எழுதிய புதிய நூலொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
லோங் வோர் என்ட் கோல்ட் பீஸ் (Long War, Cold Peace) என்ற நூலில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten