தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

நிபுணர் குழுவில் ஜப்பான் பிரதிநிதி ஒருவரும் இணைக்கப்படலாம்! பீரிஸிடம் ஜனாதிபதி கடுப்பில்!

எல் நீனோவால் இலங்கைக்கு பாதிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 02:59.34 PM GMT ]
இலங்கை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எல் நீனோ எனும் கடுமையான காற்றினால் பாதிக்கப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் வடக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களுக்கும் காற்று வீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் நாட்களில் மத்திய மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல், சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclr0.html
நிபுணர் குழுவில் ஜப்பான் பிரதிநிதி ஒருவரும் இணைக்கப்படலாம்! பீரிஸிடம் ஜனாதிபதி கடுப்பில்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 12:34.35 AM GMT ]
காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூவர் குழுவில் ஜப்பான் பிரதிநிதியொருவரை இணைத்துக் கொள்ளாததற்காக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடுமையாக சாடியுள்ளார்.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மூவர் குழுவில் ஜப்பான் பிரதிநிதியொருவரை இணைத்துக் கொள்வதற்காக அவசர அவசரமாக ஜப்பான் தூதரகத்தை நாடியுள்ளார்.
அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து முடிப்பதற்குள், மூவர் குழு நியமனம் வெளியாகியுள்ளது.
ஏமாற்றமடைந்த ஜப்பான் தூதரக அதிகாரிகள் இதனை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.
இதனால் சீற்றமடைந்த அவர் ஜீஎல் பீரிஸை கடுமையாக சாடியுள்ளார்.
இதேவேளை இன்னொரு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஜப்பான் பிரதிநிதியொருவரின் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclr7.html

Geen opmerkingen:

Een reactie posten