தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 juli 2013

வடக்கு தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடைபெறாவிட்டால் மீண்டும் ஈழப் போர் வெடிக்கும்: ஐ.தே.க

தொலைபேசி வெளிச்சத்தில் மீன் வியாபாரம் செய்யும் யாழ். மீனவர்கள்- யாழில் திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் கைது
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 07:47.24 AM GMT ]
யாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரையிலுள்ள மாலை நேர மீன் சந்தைக்கு மின்சார இணைப்பினைப் பெற்றுத்தருமாறு மீனவர்களும் அச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக் கடற்ரையில் மாலை வேளையில் மீன் சந்தை இயங்கி வருகின்றது. இம் மீன் சந்தைக்கு பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் செல்கின்றனர்.
மானிப்பாய் பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட இச் சந்தையில் காலையில் குத்தகை அறவிடப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சந்தைக்கு மின் வெளிச்சத்தினை ஏற்படுத்த எவரும் முன்வரவில்லை.
இரவில் தொலைபேசி வெளிச்சம், வாகன வெளிச்சங்களில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் தமது வியாபாரம் பாதிப்படைவதாக மீனவர்களும் வர்த்தகர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழில் திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் கைது
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் இன்று காலை 6.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.தாவடிப் பகுதியில் திருடிய மூன்று ஆடுகளை விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர்களே இவ்வாறு யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். பொலிஸ் நிலைய எஸ்.ஐ.ஜெயன்த தலைமையிலான குழுவினருக்கு, சிவில் பாதுகாப்புக் குழுவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆடுகளைத் திருடியதாக சந்தேகிக்கும் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன், மூன்று ஆடுகளையும், அதனைக் கொண்டுசென்ற வடி ரக வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
தாவடி வடக்கு கொக்குவிலைச் சேர்ந்த பரராஜா ரூபகுமார், மற்றும் இந்திரகுமார் பிரதீப், சுன்னாகத்தைச் சேர்ந்த இலங்கநாதன் கண்ணதாஸ் ஆகிய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் நாளைய தினம் யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடைபெறாவிட்டால் மீண்டும் ஈழப் போர் வெடிக்கும்: ஐ.தே.க
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 07:27.59 AM GMT ]
வடக்கில் தேர்தல் நீதியாகவும் நியாயமான முறையிலும் நடைபெறாது போனால், இலங்கையில் மீண்டும் ஒரு ஈழப் போர் உருவாகும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
அரசு அந்த நிலைமையை உருவாக்கும் வகையில் செயற்படக் கூடாது என அந்த கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் கீர்த்தி ஸ்ரீ மஞ்சநாயக்க தெரிவித்தார். இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக மக்களை ஏமாற்றி வருகிறது. எனினும் அரசாங்கம் நினைப்பதை செய்து விட முடியாது.
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை உலகநாடுகளே அவதானித்துக் கொண்டிருக்கின்றன. இந்த விடயத்தில் அரசாங்கம் நாட்டின் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்ற முடியாது.
இதுவரை வடக்கின் பொலிஸ் அதிகாரத்துடன் தேர்தலை நடத்துவதாகக் அரசாங்கம் கூறவில்லை இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என்பதை காணமுடிகிறது.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள், மாகாண சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் தமது எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பி வந்தனர், எனினும் இந்தியா அவர்களின் வாய்களை அடைத்துவிட்டது.
எதனை செய்தாவது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசாங்கத்தினர் செயற்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் மக்களிடம் கெஞ்சி வாக்குகளை கேட்கின்றனர்.
தொடர்ந்தும் ஆட்சியை தம்மால் நடத்த முடியாது என்று அரசாங்கத்திற்கு புரிந்து விட்டது. தேர்தலில் தோல்வியடைந்தால், குடும்ப அரசியல் பாதிக்கப்பட்டுவிடும் என்பதும் ஆட்சியாளர்களுக்கு தெரியும். இதனால் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற நினைக்கின்றனர்.
மேலும் இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு ஆட்சியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சி காணப்படுகிறது.
இந்த மோசமான ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை பாதாளத்திற்கு இட்டுச் சென்றுள்ளதோடு சர்வதேசத்தையும் ஏமாற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர்.
அதனை மேலும் தொடர்வதற்கு எவரும் இடமளிக்க மாட்டார்கள் எனவே மிக விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்றினை எதிர்பார்க்க முடியும் இதற்கு மக்களே துணையாக இருப்பார்கள் என தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten