[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 06:25.35 AM GMT ]
இதன்காரணமாக அவர்களின் திறமையினை கட்டியெழுப்பும் பயிற்சித்திட்டம் ஒன்று நடைபெற்று வருவதாக யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, ராஜபக்ஷவினர் மீது தனிப்பட்ட ரீதியில் பொறாமை கொண்டுள்ளார் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் 15 ம் திகதி முதல் நடைபெற்றுவரும் இப்பயிற்சியில் ஒவ்வொரு பிரதேச செயலகங்களில் இருந்தும் இரண்டு கிராம சேவையாளர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு பயிற்சி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் இப்பயிற்சியானது, கொழும்பில் உள்ள இலங்கை அபிவிருத்தி நிர்வாக பயிற்சி நிறுவகத்தில் இருந்து நேரடி வீடியோ காட்சி ஊடாக நிறுவகத்தின் திறமை வாய்ந்த வளவாளர்களால் வழங்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இவ்வாறான பயிற்சியானது யாழ் மாவட்டத்தில் முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அனைத்து மட்ட அரசாங்க உத்தியோகத்தர்களும் பயன்பெறும் வகையில் அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழவகைகளுக்கு சந்தை வாய்ப்பு: ரெய்மன்ட் மெகிஸ்
யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழவகைகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக ஒஸ்ரியா நாட்டின் தெற்காசிய நாடுகளின் வெளிவிவகார பொறுப்பதிகாரி ரெய்மன்ட் மெகிஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் பல இடங்களுக்கும் சென்று பலவேறு தரப்பினரையும் சந்தித்து யாழ்ப்பாணத்தின் சமகால நிலை தொடர்பில் கேட்டறிந்த ரெய்மன்ட் மெகிஸ் யாழ். அரச அதிபரை சந்தித்தே போதே இவ்வாறு உறுதியளித்ததாக அரச அதிபர் தெரிவித்தார்.
யாழ். குடா அழகான பிரதேசம் என வர்ணித்த ரெய்மன்ட் மெகிஸ், யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையினை ஊக்கவிக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இங்கே முதலிட ஊக்கவிக்க வேண்டுமெனவும் குறிப்பிடதாக யாழ்.அரச அதிபர் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் மற்றும் மிதிவெடியகற்றும் நடவடிக்கை தொடர்பிலும் ஒஸ்ரியா நாட்டின் தெற்காசிய நாடுகளின் வெளிவிவகார பொறுப்பதிகாரி கேட்டதாகவும் யாழ்.அரச அதிபர் தெரிவித்தார்.
ராஜபக்ஷவினர் மீது மங்கள சமரவீரவுக்கு தனிப்பட்ட ரீதியில் பொறாமை: டிலான் பெரேரா
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 07:18.23 AM GMT ]
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பில் நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிற்கு நற்பெயரும், பொருளாதார ரீதியாக பல நன்மைகளும் கிடைக்கக் கூடிய பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மங்கள சமரவீர அதன் உறுப்பு நாடுகளிடம் விடுத்துள்ள கோரிக்கையை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மங்கள சமரவீரவின் இந்த கோரிக்கையானது, ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடா என்பதை அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெளிவுப்படுத்த வேண்டும். இது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு இல்லை என்பதை அவர்கள் நாட்டு மக்களுக்கு கூறவேண்டும்.
தான் விரும்பிய அமைச்சு பதவியை கொடுக்காத காரணத்தினால், மங்கள சமவீர, ராஜபக்ஷவினரும் கோபமும், பொறாமையும் கொண்டுள்ளார்.
தனது தனிப்பட்ட விடயத்தை காணரமாக கொண்டு, நாட்டுக்கு நற்பெயர் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை சீர்குலைக்க முயற்சிக்கக் கூடாது. நாடு என்ற வகையில் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten