தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juli 2013

கொமன்வெல்த் மாநாட்டு அமர்வில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பார்: இலங்கை தெரிவிப்பு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை அனுப்ப முயற்சித்தவர்கள் கைது
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 06:27.56 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் ஆட்களை அனுப்ப,  உதவிய குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவனல்லை, நீர்கொழும்பு மற்றும் நகுலுகமுவ பிரதேசங்களில் வசித்து வருபவங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் திக்வெல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபா பெறுமதியான காசோலை மூன்று, கடவுச் சீட்டு மற்றும் உபகரணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் கடந்த 5ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு 60 பேரை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டு அமர்வில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பார்: இலங்கை தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 05:25.48 AM GMT ]
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவி பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் சார்பில் இளவரசர் சார்ள்ஸ் அமர்வுகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரித்தானியாவின் சார்பில் யார் பங்கேற்பார்கள் என்பது பற்றிய இறுதித் தீர்மனம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் தங்களது பிரதிநிதிகளை இலங்கை அமர்வுகளுக்கா அனுப்பி வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்கு இந்த அமர்வு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten