2012 மே 15ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு வழங்கிய ஆலோசனைக்கமையவே இந்த விடுதலை வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றமும், கொழும்பு மேல் நீதிமன்றமும் வழங்கிய மூன்று தீர்ப்புக்கள் இரத்துச் செய்யப்படவில்லை. எனினும், பொன்சேக்காவிற்கான எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை மகிந்தர் இரத்துச் செய்துள்ளார். இந்த விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்காக வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக, சரத் பொன்சேக்கா தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் அந்த தீர்ப்புக்கள் சட்டரீதியாக தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன. இதனடிப்படையில் அடுத்த ஏழு வருடங்களுக்கு சரத் பொன்சேக்காவினால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு, மகிந்தரால் இக் காய் நகர்த்தல்(விடுதலை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய சதி நடவடிக்கையே. 7 வருடங்களுக்கு சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடமுடியாதது போக அவர் , இலங்கை இராணுவம் இழைத்த போர்குற்றங்கள் தொடர்பாக அடுத்த 7 வருடங்களுக்கு பேசவும் முடியாது. அப்படி அவர் ப.நடேசன் தொடர்பாக வாய் திறந்தால் மீண்டும் சிறை செல்லவேண்டி இருக்கும். இது நாள்வரை இத் தகவல் எதுவும் புரியாமல், பல ஊடகங்கள் சரத் பொன்சேகா விடுதலையானார் என்றும், மகிந்தரின் நல்ல உள்ளமும் தான் காரணம் என்று கூறிவருகிறார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten