தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 juli 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரிப்பு

ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென்ற கருத்து கண்டனத்திற்குரியது: பிரதமர்
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 02:48.28 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென சிலர் கோரி வருகின்றனர் எனவும், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றிற்கு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மட்டுமன்றி நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் ஆஜர்படுத்த வேண்டும்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நாடாளுமன்றின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப்பெற்றது. 30 ஆண்டுகளாக நீடித்த கொடூர போரை ஜனாதிபதி தைரியமாக இல்லதொழித்தார்.
இந்த முயற்சிக்கு பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ச பாரியளவில் ஒத்தழைப்ப வழங்கினர். இவர்கள் இருவரையும் சர்வதேச போர்க் குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்த எவருக்கும் இடமளிக்கக் கூடாது.
எவரேனும் இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்களை தீட்டினால் அதற்கு எதிராக மக்கள் பலத்தை பிரயோகிக்க நேரிடும்.
நாட்டின் சமாதானத்தை சீர்குலைப்பதற்கு வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதமர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • இலங்கைத் தலைவர்கள் இருவரையும் யுத்த நீதிமன்றத்தில் நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும்! சனல்4 பணிப்பாளர் மெக்ரே கனடாவில் தெரிவிப்பு
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும் என சனல் 4 தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார் என இலங்கைக்கு ஆதரவாக இயங்கும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவில் நோ பயர் ஸோன் என்ற சனல்4 தொலைக்காட்சி சேவையின் இலங்கையின் விவரணப் படம் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது அங்கு குழுமியிருந்தவர்கள் மத்தியிலேயே இந்தக் கருத்தை மக்ரே வெளியிட்டுள்ளார். என கூறியதாக அரசாங்கத்தின் சிங்கள வார இதழ் தெரிவித்துள்ளது.
இவ்விரு இலங்கைத் தலைவர்களும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லையென்று கனடாவில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார் என கூறியதாக அரசாங்கத்தின் சிங்கள வார இதழ் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 02:44.38 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினால் முன்வைக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
வடக்கு மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிபந்தனைகளை விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினரை முகாம்களுக்கு மட்டும் வரையறுத்தல் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
எனினும், வடக்கில் பக்கச்சார்பற்ற தேர்தலை நடாத்துமாறும், இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
858 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுதலை செய்யத் தயாரில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வட மாகாணசபைத் தேர்தலின் போது பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அவசர நிலைமைகளின் போது தேவை ஏற்பட்டால் இராணுவத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
தேசியப் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளத் தயாரில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten