தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

மகிந்தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் உரையாடியுள்ளார்கள்!

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஸவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் தீர்வுகாண வேண்டிய பிரச்சினைகளையிட்டு நேற்றுக் காலை(09) தொலைபேசி மூலம் உரையாடியதாக, கூறப்படுகிறது. பேசப்பட்ட விடயங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்கள் விடயம் மற்றும், காட்மண்டில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் மோடியின் பிரசன்னம் ஆகியவையும் அடங்கியிருந்ததாக கூறப்பட்டது.
தடைகள் விதிக்கப்பட்ட மீனவர்கள், இந்திய சிறைகளில் தமது சிறைதண்டனையை அனுபவிப்பர் எனும் உடன்பாட்டுடன் கைதிகளை பரிமாறிக்கொள்ள ராஜபக்ஸ விரும்பியதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் தற்போது தான் மோடி ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten