தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

யாழ்.குடாநாட்டில் தொடரும் கனமழையினால் மக்கள் இடப்பெயர்வு!



யாழ்.குடாநாட்டில் தொடரும் கனமழையினால் தாழ்நில பகுதிகளில் இன்று காலை வெள்ளம் புகுந்துள்ள நிலையில் தாழ்நிலப்பகுதி மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகியிருக்கின்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்க மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
குடாநாட்டில் நேற்று மாலை தொடக்கம் இன்றைய தினம் பிற்பகல் வரையில் கனமழை பெய்துள்ளது. இதனால் நாவாந்துறை, சூரியவெளி அரியாலையின் சில பகுதிகள் என தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் மக்களின் குடிமனைகளுக்குள் புகுந்திருக்கும் நிலையில் சுமார் 200ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயரும் நிலையில் இருப்பதாக தெரியவருகின்றது.
குறிப்பாக நாவாந்துறை, சூரியவெளி பகுதிகளில் மக்களின் குடியிருப்புக்களுக்குள் வெள்ளநீர் புகும் நிலையில் இருப்பதனால் மக்கள் வீடுகளில் சமைக்க முடியாத நிலையும், தொடர்ந்தும் வீடுகளில் தங்கியிருக்க முடியாத நிலையும் உருவாகியிருப்பதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnt1.html

Geen opmerkingen:

Een reactie posten