தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

தெற்கில் நிலவும் குழப்ப நிலைமைகளினால் மீண்டும் புலிகள் தலைதூக்கக் கூடும்!- எல்லாவல தேரர்!

மைத்திரிபால அமெரிக்கா சென்று வந்தபின்னர் மாறிவிட்டார்- மஹிந்த ராஜபக்ச
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 03:07.24 AM GMT ]
மைத்திரிபால சிறிசேனெ, அமெரிக்கா ஹவாட் பல்கலைக்கழக விருதுக்காக சென்று வந்த பின்னர் மனம் மாறிவிட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் “2013 ஹெல்த் லீடர்” விருது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டது.
இதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்று வந்த பின்னரே அரசியலில் மனம் மாறியுள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று கூறுகிறது.
இதன்போது மைத்திரிபாலவுடன் இலங்கையின் அரசாங்கம் மாற்றம் குறித்து உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கலாம் என்பதே ஜனாதிபதியின் கருத்தாக அமைந்துள்ளது.
எனினும் 2011ம் ஆண்டு இலங்கைக்கான மெரிக்க தூதுவர் பெற்றீசியா புட்டின்ஸை சந்தித்த பின்னர் அந்த தகவலை மஹிந்தவுக்கு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே அமெரிக்கா இலங்கையின் உள்விடயங்களில் தலையிடுவதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார் என்பதையும் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பொறுத்தவரை அமரிக்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாக குற்றம் சுமத்தி வருகிறது.
முன்னர் சரத் பொன்சேகாவை பயன்படுத்தி அதில் தோல்விகண்ட பின்னர் தற்போது மைத்திரிபாலவை அமெரிக்கா தெரிவு செய்துள்ளதாகவும் அந்த முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் மைத்திரியை பின்னால் இருந்து இயக்குவது அமெரிக்காவாக இருந்தால், வரும் நாட்களில் பல சம்பவங்களை காணக்கூடியதாக இருக்கும். அவை, உண்மை சம்பவங்களை வெளிக்கொணருவதாக அமையும் என்றும் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnqy.html

புறா சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரி
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 03:22.05 AM GMT ]
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் “அபே ஜாதிக பெரமுன” (எங்கள் தேசிய முன்னணி)யின் கீழ் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார்.
இதனை மைத்திரிபால சிறிசேன உறுதி செய்துள்ளார். இதன்படி அவர் புறா சின்னத்தில் போட்டியிடுவார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மங்கள சமரவீர இந்த கட்சியை பதிவு செய்தார்.
இந்தநிலையில் ஜாதிக ஹெல உறுமய பொதுவேட்பாளர் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்று வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பொதுவேட்பாளர் மற்றும் சின்னம் என்பதை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி  கொள்ளத் தேவையில்லையென அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
கட்சியின் தனித்துவம் எந்தநேரத்திலும் பேணப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnqz.html
மக்களின் பலத்தினை நம்பியே களத்தில் குதித்துள்ளேன்! என்னை கைவிடவேண்டாம்!- மைத்திரி
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 03:29.35 AM GMT ]
இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறியுள்ளேன். ஜனாதிபதி மகிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ பணபலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தினை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம் எனவும் தெரிவித்தார். 
பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட மாகாண அமைப்பாளர்களை சந்தித்திருந்தார். இதன் போதே ஐக்கிய தேசிய கட்சியின் மேடையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேபோல் தனது உரையினை ஆரம்பிக்கும் போது வணக்கம், ஆயுபோவன், அஸ்ஸலாமு அலைக்கும் என மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தனது பேச்சை ஆரம்பித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறியுள்ளேன். நெல்சன் மண்டேலா மகாத்மா காந்தியின் கொள்கையினை பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தினை வென்றெடுப்பேன் என உறுதியளித்துள்ள மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மகிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ பணபலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தினை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம் எனவும் தெரிவித்தார்.
நான் நீண்ட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளேன். நான் பண பலத்திலும் அரசியல் செல்வாக்கிலும் அரசாங்கத்திற்கு வரவில்லை. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். மக்களின் பசி, வறுமை, துன்பம் அனைத்தையும் உணர்ந்தவன். இன்று வரையில் நான் அவ்வாறே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன்.
இன்று நான் பொது வேட்பாளராக களமிறங்கியவுடன் மக்கள் என்னை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரனா அல்லது ஐக்கிய தேசியக்கட்சி காரனா எனப் பார்க்கின்றனர். இதில் மக்கள் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது உருவாக்கியிருப்பது ஜனநாயக் கூட்டணி. அதன் வேலைத்திட்டம் மிகவும் பரந்தது. கடந்த காலங்களில் அரசாங்கம் கொடுத்த பொய் வாக்குறுதிகளை தகர்த்தெறிய ஜனநாயகத்தினை வென்றெடுக்க உருவாக்கியுள்ள புதிய கூட்டணி.
இலங்கையில் இன்று இருண்ட யுகம் நிலவுகின்றது. அன்று இந்தியாவில் தென்னாபிரிக்காவில் இவ்வாறான இருண்ட யுகம் நிலவியது. அன்று நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசம் சென்று பின்னர் தென்னாபிரிக்காவை ஜனநாயக நாடாக மாற்றியிருந்தார்.
மகாத்மா காந்தி இந்தியாவில் அஹிம்சைப் போராட்டத்தின் மூலம் விடுவித்தார். நான் மகாத்மாவோ அல்லது நெல்சன் மண்டேலாவோ அல்ல. ஆனால் நான் அவர்களின் கொள்கையினை பின்பற்றி இலங்கையினை சூழ்ந்துள்ள அராஜக ஆட்சியில் இருந்து நாட்டிற்கு விடுதலையினை பெற்றுக்கொடுப்பேன்.
2015ம் ஆண்டு ஜனநாயக ஆட்சிக்கான ஆண்டாக அமைய வேண்டும். மக்கள் தமது உரிமைகளை வெற்று மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழும் அரசாங்கமாக உருவாக வேண்டும். அதற்கு எமது கூட்டணி துணை நிற்கும்.
இன்று போராட்டம் ஏற்பட்டுள்ளது மகிந்த ராஜபக்ச என்று சர்வாதிகளுக்கும் ஜனநாயக வாதிகளுக்குமே.
எனவே இந்த ஆட்சியினை வென்றெடுக்க சகலரும் சகல கட்சிகளும் எம்முடன் இணைய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியினை மாற்றியமைக்க வேண்டும். இதுவே தனித்தனி கொள்கை கொண்ட புதிய கூட்டணி. இதில் 100 நாட்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது கொள்கையில் போராட வேண்டும். பின்னர் தத்தமது சுய கொள்கையில் செயற்பட முடியும்.
மகிந்த ராஜபக்சவை வீழ்த்த வேண்டிய பொது வேட்பாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சகலருக்கும் தெரிந்திருக்கும். மஹிந்தவின் பண பலம் அதிகார பலம் அனைவரையும் அழித்துவிடும்.
அவரைப்போல் பணபலமோ ஆயுத அதிகார பலமோ என்னிடம் இல்லை. நான் பொது வேட்பாளராக களமிறங்கியது எனது குடும்பத்தின் உயிரை பணயம் வைத்தே.
எனவே இன்று நான் என்னை பொது மக்களிடம் ஒப்படைத்துள்ளேன். எனக்கான பாதுகாப்பினை இனிமேல் பொது மக்கள் தான் வழங்க வேண்டும். இம்முறை என்னை ஆதரிக்க வேண்டியது நீங்கள் தான். எனவே என்னையும் எனது மனச்சாட்சியினையும் நம்பி எனக்கு வாக்களியுங்கள்.
இம்முறை நாம் தவறவிடக்கூடாது. ஜனநாயகத்தையும் உரிமைகளையும் வென்றெடுக்க சகல மக்களும் என்னுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnq0.html

தெற்கில் நிலவும் குழப்ப நிலைமைகளினால் மீண்டும் புலிகள் தலைதூக்கக் கூடும்!- எல்லாவல தேரர்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 02:59.22 AM GMT ]
தெற்கில் நிலவும் அரசியல் குழப்ப நிலைமைகளினால் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சித்து வருகின்றன.
அந்த தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ஒரு சில தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தெற்கு மக்களிடையே மட்டுமன்றி வடக்கு கிழக்கு மக்களிடையேயும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.
அரச தலைமையை பலவீனப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே இதன் நோக்கமாகும்.
இந்த பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் மீளவும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது முதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச சக்திகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.
நாட்டில் அரசியல் குழப்ப நிலைமைகளை ஏற்படுத்துவதன் மூலம் இந்த சக்திகள் மீளவும் வலுப்பெறும்.
இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை குழப்பங்களை ஏற்படுத்துவோர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தெற்கில் ஆடும் இந்த நாடகம் புலிகளுக்கு ஒட்சிசன் வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
மக்கள் புத்தி கூர்மையுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டுமென எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnp7.html

Geen opmerkingen:

Een reactie posten