தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

கோத்தபாயவை மட்டும் தான் நான் அழைத்து வந்தேன்! மகிந்த!


போரை முடிவுறுத்தவே கோத்தபாய ராஜபக்ஸவை அழைத்து வந்தேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மக்களும் பண்டாரநாயக்கக்களுமே பசில் ராஜபக்ஸ மற்றும் சமல் ராஜபக்ஸ ஆகியோரை அரசியலில் களமிறக்கினர். 1977ம் ஆண்டு முதல் முதலாக சிறிமாவோ பண்டாரநாயக்க, பசில் ராஜபக்ஸவிற்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கினார்.

சிறிமவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பசில் ராஜபக்ஸவுக்கு இடமளித்தனர்.
போரை முடிவுறுத்தவே கோத்தபாய ராஜபக்ஸவை அழைத்து வந்தேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மக்களும் பண்டாரநாயக்கக்களுமே பசில் ராஜபக்ஸ மற்றும் சமல் ராஜபக்ஸ ஆகியோரை அரசியலில் களமிறக்கினர். 1977ம் ஆண்டு முதல் முதலாக சிறிமாவோ பண்டாரநாயக்க, பசில் ராஜபக்ஸவிற்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கினார். சிறிமவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பசில் ராஜபக்ஸவுக்கு இடமளித்தனர்.


சிறிமாவோ பண்டாரநாயக்கவே, சமல் ராஜபக்ஸ பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முதலில் வாய்ப்பு வழங்கினார். பசில், சமல் ஆகியோரை அரசியலிலுக்குள் நான் அழைத்து வரவில்லை. யுத்தத்தை முடிவுறுத்த நம்பிக்கையான ஒருவரிடம் பாதுகாப்புச் செயலாளர் பதவியை ஒப்படைக்க வேண்டியேற்பட்ட போது, கோத்தபாய ராஜபக்ஸவை தாம் அழைத்து வந்தேன்.

நாட்டை மீளவும் பின்நோக்கி நகர்த்த இடமளிக்கப்பட முடியாது. மக்கள் புத்திசாதூரியமானவர்கள். சரியான தீர்மானங்களை எடுப்பார்கள். அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் சென்ற சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் சந்திரிக்காவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி குற்றம்சுமத்தியுள்ளார்.
30 Nov 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1417349118&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten