தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

தேர்தல் குறித்து பேச டெல்லியிலிருந்து அழைப்பு வரவில்லை- சுமந்திரன்!

தேர்தல் குறித்து பேச புதுடெல்லியிலிருந்து அழைப்பு வரவில்லையெ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மலையக தமிழ் கட்சிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், செய்தியில் உண்மை கிடையாது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச எமக்கு எவ்வித அழைப்பினையும் இந்திய அரசாங்கம் விடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZlo3.html

Geen opmerkingen:

Een reactie posten