தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

மாவீரர்களை சிங்களம் சிதைப்பதற்கு தேர்தல் மாயையில் தாயகம்!- அருட்தந்தை இம்மானுவேல்

அமைச்சர் ரிசாத்தின் தீர்மானம் சனிக்கிழமை எடுக்கப்படும்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 05:24.58 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் (முஸ்லிம்) காங்கிரஸ் எதிர்வரும் சனிக்கிழமையன்று தீர்மானிக்கவுள்ளது.
கட்சியின் உயர்பீடக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளது.
ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் நேற்று சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்தனர்.
கடந்த திங்கட்கிழமை கட்சியின் உயர்பீடம் எடுத்த முடிவுக்கு அமையவே இந்த விலகல் இடம்பெற்றது.
அதேநேரம் இன்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேனவுக்கா. மஹிந்தவுக்கா? தமது ஆதரவு என்பது தொடர்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியூதீன் தலைமையில் கட்சியின் உயர்பீடம் ஹபரணையில் கூடி முடிவெடுக்கவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKZno0.html

மாவீரர்களை சிங்களம் சிதைப்பதற்கு தேர்தல் மாயையில் தாயகம்!- அருட்தந்தை இம்மானுவேல்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 11:21.26 PM GMT ]
எமது மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் தியாகம் செய்த வீர மறவர்களை நினைந்து அவர்கள் மூலமாக புத்துயிர் பெறுவதற்காக ஒன்றாக கூடியிருக்கிறோம் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் தெரிவித்தார்.
இலங்கையில் தேர்தல் மாயைகள் இவைகளை கடந்து சிந்திக்கும் காலத்தை அண்மித்து விட்டோம், அதற்கு எம் மாவீரர்கள் துணை நிற்பார்கள் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய மாவீரர் தின சிறப்புச் செவ்வியில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKZno4.html

Geen opmerkingen:

Een reactie posten