தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

விடுதலைப் புலிகள் பற்றி மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகிறது

கொலையை மறைக்க பொய் சாட்சி வழங்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 05:46.32 AM GMT ]
2010 ஆம் ஆண்டு நடந்த கொலை ஒன்றை மறைக்க மரண விசாரணையின் போது பொய்யான சாட்சியத்தை வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, அந்த பிரதேசத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாகவே இவ்வாறு பொய்யான சாட்சியத்தை அளித்துள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் சடலம் ரயில் பாதையில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது. அவர் ரயிலில் மோதி உயிரிழந்ததாக மரண விசாரணையில் முடிவு செய்யப்பட்டது.
எனினும் மரணம் சந்தேகத்திற்குரியது என மரணமடைந்த நபரின் சகோதரர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
விசாரணைகளில் குறித்த மரணம் கூரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் தாக்கியதால் ஏற்பட்டது என கண்டறியப்பட்டது.
சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் ரயில் சாரதி எனக் கூறி பிரிதொரு நபரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZnx5.html


இலங்கையின் ஜனாதிபதியாக தன்னை நியமிக்குமாறு நீதிமன்றத்தை கோரும் அரசியல் கட்சி தலைவர்!
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 06:51.56 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வஜன வாக்கெடுப்பை நடத்தாது 18வது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளதாக அறிவிக்குமாறு வலியுறுத்தி தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவர் ரத்ன பண்டார மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதன் காரணமாக மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதிவியில் இருக்கும் தகுதியை இழந்து விட்டதாகவும் இதனால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் மனுதார் கோரியுள்ளார்.
அத்துடன் நீதிமன்றம் இலங்கையின் ஜனாதிபதியாக ஒருவரை பதவியில் நியமிக்க வேண்டும்.அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் இருக்கும் பிரதமர் அல்லது சபாநாயகரை நீதிமன்றம் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் மனுதார் கூறியுள்ளார்.
18வது அரசியலமைப்பு திருத்த சட்டம் சட்டத்திற்கு முரணானது என்பதால், ஜனாதிபதியின் அலுவலகமும் செயற்படும் தகுதியை இழந்துள்ளது. இதனால், இவர்களும் ஜனாதிபதியாக பதவியேற்கும் தகுதியை இழந்துள்ளனர்.
அதேவேளை ஜனாதிபதி பதவிக்கு அடுத்துள்ள தகுதியான நபர் எதிர்க்கட்சி தலைவர் என்ற போதிலும் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்க ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதால், அவரும் அதற்கான தகுதியை இழந்துள்ளார்.
இதனால், நாட்டின் நீதித்துறை இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான நபர் தன்னை விட வேறு யாருமல்ல எனவே தன்னை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் மனுதார் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை டிசம்பர் 8 ஆம் திகதி ஏற்க கூடாது என்ற கட்டாய இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்க வேண்டும் எனவும் ரத்ன பண்டார தனது மனுவில் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmoy.html


விடுதலைப் புலிகள் பற்றி மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகிறது
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 06:22.45 AM GMT ]
விடுதலைப் புலிகளின் வரலாற்றை கூறும் புதிய திரைப்படம் ஒன்று  வெளிவரவுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஈழப் போரில் உயிர் தப்பிய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மைன்பீல்டு (கண்ணிவெடி பகுதி) என்ற பெயரில் படம் ஒன்றைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் இயக்குனர் ஷிலாதித்யா போரா என்பவர் ஆவார். அவருக்கு இது முதல் படம். இந்த படத்தை அடுத்த ஆண்டு தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
படத்தின் கதையானது தமிழ் பட தயாரிப்பாளர் ஒருவரை பற்றியது. அவர் விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைச் சந்திக்கிறார். பிரபாகரனின் கருத்துகள் தயாரிப்பாளருக்கு ரொம்பப் பிடித்துப் போக, படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற தனது கனவை விட தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற கனவே மிக முக்கியமானது என பிரபாகரன் அவருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.
இதைத் தொடர்ந்து இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து 25 வருடங்கள் வரை தனது வாழ்வினைச் செலவிடுகிறார். அதன் பின்னர் அந்த இயக்கத்தின் கொள்கையை விளக்கும் படங்களைத் தயாரிக்கிறார் என்பதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவரான, படத்தின் தயாரிப்பாளர் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவரது அடையாளத்தை மறைத்தே படத்தில் காட்டவிருக்கிறார் இயக்குனர்.
இந்தியா- இலங்கை-விடுதலைப் புலிகள் என்ற கோணத்தைத் தாண்டி இது ஒரு மனிதன் குறித்த பதிவு. ஒருவரது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை வைத்து படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன.
ஆனால், இது ஓர் ஆவணப் படம் அல்ல என்கிறார் இயக்குனர். எதிர்வரும் பெப்ரவரி அல்லது மார்ச் 2015ல் படம் திரைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார் இயக்குனர்.
இலங்கை மற்றும் கேரளாவில் இதற்கான படப்பிடிப்பு நடக்கும். இது முதல் படமாக இருந்தாலும் தனக்கு மிக முக்கியமானது என்றும் இயக்குனர் போரோ கூறுகிறார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை கேங்ஸ் ஆப் வாசிபூர், பாம்பே, வெல்வெட் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜீவ் ரவி மேற்கொள்கிறார். பெரும்பான்மையான மணிரத்னம் படங்களில் பணியாற்றியுள்ள ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
படத்திற்கான ஒலிப்பதிவு பணிகளை ரசூல் பூக்குட்டி செய்கிறார். படத்தில் எந்த சார்பு நிலையும் எடுக்காமல், நடந்ததை அப்படியே பதிவு செய்வதாகக் கூறியுள்ளார் இயக்குனர்.

Geen opmerkingen:

Een reactie posten