தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம்!



இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தானிகராக கண்டி காரியாலத்தில் கடமையாற்றிய பிரதி உயர்ஸ்தானிகர் நடராஜ், யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
அவரின் மூன்று வருடகால சேவை பூர்த்தியை அடுத்து யாழ்ப்பாணத்துக்கான இடம்மாற்றம் இடம் பெற்றுள்ளது
அவருக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த 27 ஆம் திகதி மாலை நுவரெலிய கிரேன் ஹோட்டலில் நடைபெற்றது.
இதன் போது விசேட அழைப்பின் பேரில் முன்னாள் நீதி மற்றும் மறுசீரமைப்பு பிரதியமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான வீ.புத்திர சிகாமணி, அரிட்மெட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சசி மாதவன் மற்றும் பிரதி அமைச்சர் இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நுவரெலிய வர்த்தகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
இதன் போது நடராஜ் அவர்களின் சேவை மலையகத்தை போல யாழ்ப்பாணத்திலும் சிறப்பாக தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmw1.html

Geen opmerkingen:

Een reactie posten