தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

நவம்பர் 27! சர்ச்சையைக் கிளப்பிய கனடிய எம்.பி.யின் பாராளுமன்ற உரை!



கார்த்திகை 27இல் கனடிய மண்ணில் மாவீரர் நாள்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 05:59.23 PM GMT ]
கனடாவில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடி உள்ளத்தில் உணர்வு பொங்க கலங்கிய கண்களோடு மாவீரர்களுக்கு உருக்கமாக அகவணக்கம் செலுத்தினார்கள்.
தமிழர் நினைவு அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ரொறன்ரோ மேற்குப் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு ஈழத்தமிழர் தேசியக் கொடி மற்றும் கனடிய தேசியக் கொடிகள் ஏற்றுதலோடு ஆரம்பித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அடுத்து இசைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லப் பாடல் மக்களின் மனதை உருக்கி அஞ்சலிக்காக தயார் படுத்தியது.
மாவீரர் குடும்ப உறுப்பினர் சார்பில் சுடர் விளக்கை ஏற்றி வைத்த பின் நெஞ்சை நெகிழ்விக்கும் வணக்க இசையுடன் மாவீரரை கண்முன் நிறுத்தும் காட்சிகள் திரையில் ஓடிக்கொண்டிருக்க மக்கள் உருக்கமாக நீண்ட வரிசையில் நின்று மலரஞ்சலி செய்தார்கள்.
கணீர் என்ற குரலில் ஒலித்த மாண்புமிகு தேசியத் தலைவரின் மாவீரர் உரைப் பகுதிகள் மக்களை வசியப்படுத்தி ஆட்கொண்டது.
இந்த நிகழ்வில் மூத்த தலைவரும் தாயகத்தின் விடிவிற்காய் அயராது உழைத்து வருபவருமான தங்கவேலு அவர்கள் தொடக்க உரை ஆற்றினார்.
தாயக உறவுகளின் மறுவாழ்வு ஒன்றே ஈழத்தில் நிரந்தர விடியலைத் தேடித்தரும் என்றும் அதற்காய் தொடர்ந்து புலம்பெயர் தமிழர் உறுதியோடு உழைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
மேலும் ஈழவேந்தன் அவர்கள் உட்பட பலரும் உரையாற்றினார்கள்.
தமிழர் நினைவு அறக்கட்டளை சார்பாக நிறைவுரை ஆற்றிய ரெஜி சபாரத்தினம்,
மாவீரரின் தியாகங்களை மனதிற் கொள்வோம். அவர்களின் கனவுகளை நனவாக்க உறுதிகொள்வோம். மாவீரர் புகழ் மாலைகளை விரும்பியவர்கள் அல்ல.
மாவீரரின் உன்னத தியாகங்களை நாங்கள் மதிப்பதானால் அவர்களுக்கு எளிமையாக நெஞ்சுருகி அஞ்சலி செய்வோம்.
அஞ்சலிக்காகவே லட்சக்கணக்கில் பணம் செலவிட்டு நமக்கு நாமே புகழ் தேடாமால் இன்று தாயகத்தில் அனாதைகளாய் தேடுவாரற்று வாழ வழியின்றி தவிக்கும் அந்த
மாவீரரின் குடும்பங்களை அரவணைப்போம், தாங்கிக்கொள்வோம், அவர்களுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுப்போம்.
போரினால் அநியாயமாக தமது வாழ்வைத் தொலைத்து நிற்கும் விதவைகள் ஊனமுற்றோர் வாழ வழியற்றோர் அனைவருக்கும் நாங்கள் உதவ வேண்டும்.
அந்த மாவீரர்களைப் போல் இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது அவர்களின் அர்ப்பணிப்பைப் பின்பற்றி நாமும் உண்மையான தூய மனத்தோடு போட்டி பொறாமை சுயநலமின்றி பணியாற்ற வேண்டும்.
எமது செயற்பாடுகளில் முழுமையான வெளிப்படைத் தன்மையும் அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் உருவானதுதான் தமிழர் நினைவு அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையானது உங்கள் எதிர்பார்ப்புக்கிணங்க உறுதியாக தூய்மையாக செயற்படும் என்று உறுதி அளிக்கின்றேன். என்று கூறினார்.
தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் நிகழ்வில் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில்,
எங்களுக்குக்கான காலம் வந்துவிட்டது. ஆயுதப்போராட்ட காலத்தைப் போல இன்றைய ஜனநாயக அறவழிப் போராட்டத்திலும் மீண்டும் தமிழனம் விரக்தியை விட்டு வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு போராட வேண்டும்.
பலமிக்க ஒரு போராட்ட சக்தியாக விளங்கிய ஈழவிடுதலைப் போராட்டம் இலக்கை அடைய வேண்டுமானால் தலைவரின் கருத்திற்கேற்ப மாறுபட்ட வடிவங்களோடு தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

http://www.tamilwin.com/show-RUmszBRcKZms3.html


நவம்பர் 27! சர்ச்சையைக் கிளப்பிய கனடிய எம்.பி.யின் பாராளுமன்ற உரை!
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 07:14.40 PM GMT ]
தமிழ் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தமிழ் ஈழ மக்களுக்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் நாளான நவம்பர் 27ம் நாள் தொடர்பில் கனடிய பாராளுமன்றத்தில் கடந்த 26ம் திகதி   உரையாற்றியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு ராதிகா தமிழீழ மாவீரர்களுக்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியளிப்பதாக, கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ப்ளானே கூறியுள்ளார்.
மேலும், இது ஒரு முக்கியமான நாள் மற்றும் நினைவு கூற வேண்டிய நாள் எனக் கூறியதற்காக அனைத்து கனடிய மக்களிடமும், முக்கிய பிரமுகர்களிடமும் ராதிகா சிற்சபைஈசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மாவீரர் தினம், தீவிரவாத அமைப்பான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மறைந்த தினம் என்றும் கூறியுள்ளார், மேலும் கனடிய வீரர்கள் இறந்த நாளை, தீவிரவாதிகள் இறந்த நாளுடன் ஒப்பிட்டு கூறியது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்,

இதனையடுத்து நேற்று, ராதிகா அனுப்பிய மின்னஞ்சலில், தான் எந்தவித தீவிரவாத அமைப்பிற்கும், கலவரத்திற்கும் ஆதரவளிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

கனடிய பாராளுமன்றத்தின் முதல் தமிழ் உறுப்பினரான நான், உலக முழுவதும் வசிக்கும் தமிழ் மக்களுக்கும், கனடிய தமிழ் மக்களுடனும் சேர்ந்து போரில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் ராதிகா மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளை ஒப்பிடும் ராதிகாவின் செயல் இறந்த கனடிய வீரர்களை அவமதிப்பதாகும்: டீபக் ஒபராய்
ஒரு பயங்கரவாத அமைப்பின் இறந்த உறுப்பினர்களோடு கனடிய கொள்கைளிற்காகவும் கனடாவின் நலனிற்காகவும் மடிந்த போர் வீரர்களோடு ஒப்பிடுவது தவறு என்பதை ராதிகா உணர வேண்டுமென டீபக் ஒபராய் குறிப்பிட்டுள்ளார்.
ராதிகா மாவீரர் தினம் குறித்து கனடியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கண்டித்த கனடிய வெளிவிவகார அமைச்சு, மனிதவுரிமை விவகாரங்களிற்கான அமைச்சின் செயலாளரான டீபக் ஒபராய் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர்களிற்கு இலங்கையில் பிரச்சினையுண்டு ஆனால் அதற்காக கனடியப் போர் வீரர்களின் நினைவு தினத்தை தமிழ் வீரர்களின் நினைவு தினத்தோடு ஒப்பிடுவது தவறானது என்றும் இது போர் வீரர்களை அவமதிக்கும் ஒரு ஒப்பீடு என்றும் தெரிவித்துள்ளார்.

 
 
http://www.tamilwin.com/show-RUmszBRcKZms4.html

Geen opmerkingen:

Een reactie posten