தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

நில உரி­மையின் அவ­சி­யத்தை உணர்த்தும் 'மீரி­ய­பெத்த' அவலம்!

பொது வேட்பாளராக போட்டியிட கரு ஜயசூரியவிற்கு ஐ.தே.கட்சியின் அனுமதியில்லையாம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 02:24.58 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக கரு ஜயசூரிய நிறுத்தப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், ஐ.தே.கட்சியின் தலைமை அதற்கு எந்த அனுமதியும் வழங்காது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரு ஜயசூரிய பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தான் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக அந்த கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலைமையில் கரு ஜயசூரியவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் கட்சி இரண்டாக பிளவுப்படும் என்பது ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக போட்டியிட போவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கரு ஜயசூரியவை தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.

எனினும் அது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் இது சம்பந்தமாக பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeq6.html
மீரியபெத்த மண்சரிவு மீட்புப் பணிகள் கைவிடப்பட்டன: அமைச்சர் அமரவீர
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 02:40.46 PM GMT ]
கொஸ்லந்த, மீரியபெத்த மண்சரிவில் புதையுண்டோரை மீட்கும் பணிகள் கைவிடப்பட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை இன்று மாலை தெரிவித்துள்ளார்.
மண்சரிவில் புதையுண்டவர்கள் என்று கருதப்படுவோரின் உறவினர்கள் வழங்கிய எழுத்துமூல கோரிக்கையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே புதையுண்டவர்கள் காணாமல் போனவர்கள் என்ற கருதப்பட்டு அவர்களுக்கு ஒரு மாதக்காலத்துக்குள் மரணச் சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டமையால் உறவினர்கள் மீட்புப் பணிகளை நிரந்தரமாக நிறுத்த உடன்பட்டனர்.
எனினும் பின்னர் வந்த தகவலின்படி மரண சான்றிதழ்கள் இரண்டு வருடங்களின் பின்னரே வழங்கப்படும் என்பதன் காரணமாக உறவினர்கள், புதையுண்டவர்களை மீண்டும் தோண்ட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்தநிலையிலேயே உறவினர்களின் எழுத்துமூல கோரிக்கையின் பேரில் மீட்புப் பணிகள் கைவிடப்பட்டதாக அமைச்சர் அமரவீர அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeq7.html

நில உரி­மையின் அவ­சி­யத்தை உணர்த்தும் 'மீரி­ய­பெத்த' அவலம்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 03:48.51 PM GMT ]
பதுளை மாவட்­டத்­தி­லுள்ள கொஸ்­லந்தை பிர­தே­சத்தில் மக்கள் புதை­யுண்டு போனார்கள் என்­கிற செய்தி உல­கத்­த­மி­ழி­னத்தை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.
மீரியபெத்தவில் லயன்­களில் வாழ்ந்து வந்த தோட்­டத்­தொ­ழி­லாளர் குடும்­பத் தைச் சேர்ந்த 300 பேர் மண் சரிவில் மாண்டு போன­தாக உட­ன­டி­யாக வெளி­வந்த செய்­திகள் கூறின.
ஆயினும் அரச செய்­தியோ, வேறு வித­மாக அமைந்­துள்­ளது. தோட்ட நிர்­வாகம், புவி ஆய்வுத் திணைக்­களம், அரசு என்­பன இதற்கு தாங்கள் பொறுப்­பில்லை என்­ப­து போல் நழுவல் அறிக்­கை­களை வெளி­யி­டு­கின்­றன.
தாம் விடுத்த எச்­ச­ரிக்­கையை தோட்ட நிர்­வாகம் செவி­ம­டுக்­க­வில்­லை­யென்று ஒரு தரப்பும், அப்­ப­டி­யாயின் அம்­மக்­களைக் குடி­ய­மர்த்தத் தேவை­யான நிலத்­தினை அரசு ஒதுக்கித் தர­வில்­லை­யென்று மறு­த­ரப்பும், மர­ணித்த சட­லங்கள் மீது நின்று குதர்க்கம் பேசு­கின்­றன.
வட - கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்­களோ, சொந்த நிலத்தை பறி­கொ­டுக்­கின்றனர். மலை­யகத் தமி­ழரோ, வாழ்ந்த மண்ணில் புதை­யுண்டு போகின்றனர். இந்­நிலை மாற வேண்டும்.
இது வெறு­மனே நிவா­ரணப் பிரச்­சினை அல்ல. மலை­யக மக்­களின் அடிப்­படை வாழ்­வு­ரிமைப் பிரச்­சினை புதை­யுண்டு போகக்­கூ­டாது. நீண்­ட­கா­ல­மா­கவே நிலவி வந்த, இம்­மக்­க­ளுக்கும் நிலத்­திற்கும் இடை­யி­லான பிர­தான முரண்­பாடு, தொழிற்சங்கத் தலை­வர்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்­துள்­ளது என்­ப­துதான் நிஜம்.
இலங்­கை­யி­லுள்ள, ஸ்தாப­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு பெரும் தொழி­லாளர் வர்க்­கத்தைச் சார்ந்­த­வர்­களே மலை­யக மக்கள்.
இவர்­க­ளுக்கு குந்­தி­யி­ருக்க பாது­காப்­பான ஒரு நிலம் இல்லை.
அந்த மக்­க­ளுக்கு சொந்த குடி­நிலம் வேண்­டு­மென்று குரல் எழுப்ப, அதற்­காகப் போராட, அதே மக்­களின் வாக்­கு­களைப் பெற்று மந்­தி­ரி­க­ளாகும் எவ­ருக்கும் அக்­க­றை­யில்லை.
இரண்டு வரு­டத்­திற்கு ஒரு­முறை, இம்­மக்­களின் 50 ரூபாய் கூலி (450 இலி­ருந்து 500 ஆக) உயர்­விற்­காக அர­சோடு பேரம்­பே­சு­வதே அர­சி­ய­லாகி, இம்­மக்­களின் விதி­யாகி விட்­டது.
பெருந்­தே­சிய இன­வாத அர­சு­களைப் பொறுத்­த­வரை, இம்­மக்­களை தூக்கி நிமிர்த்த வேண்டும் என்­கிற அவ­சியம் எப்­போதும் இருந்­த­தில்லை. அந்தத் தேவையும் அவர்­க­ளுக்­கில்லை.
லால் பகதூர் சாஸ்­தி­ரி­யோடு ஒப்­பந்தம் போட்டு, காடு மலை­களைக் கள­னிகள் ஆக்­கிய அதி­மா­னு­டர்­களைத் துரத்­தி­ய­டிக்கும் வேலை­க­ளையே சிறி­மாவோ ஆட்சி அன்று முன்­னெ­டுத்­தது.
அம்­மக்­களின் வாக்­கு­களைப் பெறுவோர், பாரா­ளு­மன்றில் தமக்கு ஆத­ர­வாக இருந்­தாலே போதும் என்­ப­துதான் பெருந்­தே­சிய இன­வாத ஆட்­சி­யா­ளர்­களின் பெரு­வி­ருப்பு. அதற்கு இசை­வாக பல மலை­யகத் தலை­வர்கள் அர­சோடு இணைந்து செயற்­ப­டு­கின்­றார்கள்.
தம்­மைப்போல், வரு­கிற ஜனா­தி­பதி தேர்­தலில் அர­சினை ஆத­ரித்து, காணி­யு­ரிமை, மாகா­ண­சபை உரிமை போன்று சகல உரி­மை­க­ளையும் பெற்று பெரு­வாழ்வு வாழ, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வர வேண்­டு­மென அறி­வுரை வேறு கூறு­கி­றார்கள் சிலர்.
முதலில் மலை­யக மக்­க­ளுக்கு குடி­யி­ருக்க நிலமும், வீடும் அர­சி­ட­மி­ருந்து பெற்­றுத்­தர இவர்கள் முன்­வர வேண்டும்.
அதனை விடுத்து விடு­தலைப் புலிகள் போன்று சந்­தர்ப்­பங்­களை தவற விடக்­கூடா­தென கூட்­ட­மைப்­பிற்கு ஆலோ­சனை வழங்­கு­வதைத் தவிர்க்க வேண்டும்.
இரா­ணுவச் சம­நிலை நில­வி­வந்த வேளை­யில்தான் போர்­நி­றுத்­தத்தை பிர­க­டனம் செய்து, பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டார்கள் தமி­ழீழ விடு­தலைப் புலிகள். இதில் எங்கே அவர்கள் சந்­தர்ப்­பத்தைத் தவற விட்­டார்கள் என்று புரி­ய­வில்லை.
அரசு தரு­வதை ஏற்­றுக்­கொண்டு (அது எதையும் இது­வரை தந்­த­தில்லை என்­பது வேறு கதை) போவது அர­சியல் சந்­தர்ப்­ப­வாதம்.
அதற்கு, சொந்­த­மாக ஒரு அர­சியல் கட்சி தேவை­யில்லை. அதை­விட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யு­டனோ அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டனோ இணைந்து விடு­வது மிகவும் பொருத்­த­மான செய­லாக இருக்கும்.
தெளி­வாகச் சொல்­லப்­போனால், 20,-21 ஆம் நூற்­றாண்டின் நவீன அடி­மைகள் இம் மலை­யக மக்கள். இது கசப்­பான, சாசு­வ­த­மான உண்மை. நில­மற்ற மனி­தர்­களை வேறெப்­படி அழைக்­கலாம்!.
குர்திஸ் இனப்­போ­ரா­ளி­க­ளு­டனும், பலஸ்­தீன மக்­க­ளு­டனும், பொது­வெ­ளியில் தம்மை இணைத்து அடை­யா­ளப்­ப­டுத்தும் அனைத்துத் தரப்­பி­னரும், மலை­யக தமிழ் மக்­க­ளுக்­காக குர­லெ­ழுப்ப முன்­வ­ர­வேண்டும். இம்­மக்­களின் அவ­லத்தை உல­கிற்கு உணர்த்த வேண்டும்.
சாதி-­ம­தங்­க­ளுக்கு அப்பால், ஒரு இனத்தின் 'தொழி­லாளர் வர்க்கம்' மிகக் கொடூ­ர­மாக, 150 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஒடுக்­கப்­படும் குரூரம், 'சோஷலிசக் குடி­ய­ரசு' என்று சுய தம்­பட்டம் அடிப்­பது இலங்­கை­யில்தான் நடக்­கி­றது.
துயர் பகிர்ந்து, பத்­தோடு பதி­னொன்­றாகக் கடந்து செல்லும் நிகழ்­வல்ல இம் மண் சரிவும், இந்த உழைக்கும் மனி­தர்­களின் இழப்பும்.
இம்­மக்­களின் நிரந்­தர விடி­விற்­காக, அனைத்து ஒடுக்­கப்­படும் மக்­களும் ஓர­ணியில் திரள வேண்டும்.
இந்தப் பூவு­லகில் இன ஒடுக்­கு­முறைக் கும், வர்க்க ஒடுக்­கு­மு­றைக்கும் ஒரே நேரத்தில் முகம் கொடுப்­பது மகா கொடுமை.
இனி­யா­வது (!) இந்த அதி­யுன்­னத, பெரு­வலி சுமக்கும் மானு­டர்­க­ளுக்­காக என்ன செய்­யப்­போ­கிறோம்?.
சீனாவின் நீர்­மூழ்கிக் கப்­பல்கள் அடிக்­கடி கொழும்­பிற்கு வரு­வதால், படைத்­துறைத் தள­ப­தி­களும், பாது­காப்பு செய­லா­ளர்­களும் அங்­கு­மிங்கும் ஓடுப்­பட்டுத் திரி­கி­றார்கள். இவர்­க­ளுக்கு மலை­யக மக்­களின் உயிர்­வாழும் உரி­மைப் ­பி­ரச்­சினை குறித்து சிந்­திப்­ப­தற்கு நேர­மி­ருக்­காது. ஜன­வ­ரியில் தேர்தல், மார்ச்சில் ஐ.நா.வில் கண்டம் என்­ப­துதான் அரசின் தலை­யாய பிரச்­சினை.
அதே­வேளை சென்ற வருடம் அந்­தமான்- நிக்­கோபார் தீவு­க­ளுக்கு அண்­மையில் ஓடிப்­பி­டித்து விளை­யா­டிய சீன நீர்­மூழ்­கிகள், இப்­போது நேர­டி­யா­கவே கொழும்பில் தலைகாட்­டு­வதால், பெரும் குழப்­பத்தில் ஆழ்ந்­துள்ள இந்­தியத் திரு­நாட்­டிற்கு, மீரி­ய­பெத்த பற்­றிய அக்­கறை இருக்­காது. அந­கா­ரிக தர்­ம­பா­லா­விற்கு முத்­திரை வெளி­யிட்டு, கொழும்பு அதி­கார மையத்­தினை தாஜா பண்­ணு­வ­தற்கே அவர்­க­ளுக்கு நேரம் போதாது.
மியன்­மாரில் (பர்மா) விட்ட இராஜ­தந்­திரத் தவறை, மீண்டும் இலங்கை விவ­கா­ரத்தில் விடக்­கூ­டா­தென திட்­ட­மிட்டு செயல்­படும் இந்­தியா, மஹிந்த அர­சோடு மிகவும் நெருங்­கி­வ­ரவே முயற்­சிக்கும்.
தென் சீனக் கடலில் உள்­ளது போன்று, நீர்­மூழ்கிக் கப்­பல்­களை நிறுத்தும் சுரங்கத் தளங்கள் இலங்­கையில் இல்­லை­யென்று தெரிந்­தாலும் இந்­தி­யாவின் அச்­சத்­திற்கு வேறுசில காரணங்களும் உண்டு.
உல­கப்­பொ­ரு­ளா­தார உரை­யாடல் வெளிக்­க­ள­மா­னது இந்­தி­யாவில் மையம் கொண்­டுள்ள இவ்­வே­ளையில், பிர­தமர் நரேந்­திர மோடியின் 'பொருண்­மிய பலம் கொண்ட இந்­தியா' என்­கிற எதிர்­கா­லக்­க­னவு குறித்து, 17 பல்­தே­சியக் கம்­ப­னி­களை வைத்து ஆரா­யப்­படும் நிகழ்வே இன்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகப் பேசப்­ப­டு­கி­றது.
மலாக்கா நீரி­ணையைக் கடந்து சீனா வின் பட்­டுப்­பா­தை­யை­ ஆ­ழ­மாக அத்­தி­வா­ர­மிட முன் இலங்­கை­யையும், மாலை­தீ­வி­னையும் 'பகை­முரண்'  இன்­றிச் ­ச­மா­ளித்­த­வாறு பிராந்­திய அளவில் தன்னை பொருண்­மிய ரீதி­யாகப் பலப்­ப­டுத்தும் அவ­ச­ரத்தில் இந்தியா உள்ளது போலிருக்கிறது.  அது குறித்து, அடுத்த வாரம் பார்ப்போம்.
இத­யச்­சந்­திரன்
http://www.tamilwin.com/show-RUmszBTdKXery.html

Geen opmerkingen:

Een reactie posten