அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
இவர்கள் இன்று அல்லது நாளை தமது பதவியை துறந்து விட்டு எதிரணியில் இணைவார்கள் எனக் கூறப்படுகிறது.
அதேவேளை பொது வேட்பாளர் அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இருவரில் ஒருவருக்கு ஆதரவளிப்பதா அல்லது தனித்து வேட்பாளரை நிறுத்துவதா என்பது குறித்து தீர்மானத்தை எடுப்பதற்கு மேலும் ஒரு கலந்துரையாடலை கட்சிக்குள் நடத்துவது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று முடிவு செய்துள்ளது.
பொது வேட்பாளர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் தீர்மானம் ஒன்றை அறிவிக்க முடியும் என முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது.
தேர்தல் நடப்பதற்கு இன்னும் போதுமான காலம் இருப்பதால் தீர்மானத்தை எடுக்கவும் போதிய காலம் இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft1.html
Geen opmerkingen:
Een reactie posten