[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 06:05.01 AM GMT ]
கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் .நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது;
கடந்த காலங்களில் எனது அமைச்சுப் பதவியில் இருந்து பல்வேறு சேவைகளை செய்திருக்கின்றேன். ஒரு பொறுப்பான அமைச்சராக இந்த நாட்டையும் மக்களையும் பாதுகாத்து என்னாலான சேவைகளை செய்திருக்கின்றேன்.
எனினும் இந்த அரசாங்கத்தில் ஒரு சந்தர்ப்பத்திலேனும் திருப்திகரமானதாகவும் சந்தோசமாகவும் சேவையாற்றவில்லை. என் அரசியல் வரலாற்றில் பல துன்பங்களுக்கு அப்பால் ஒரு இலக்கினை நோக்கி பயணிக்க நாங்கள் முன்வந்துள்ளோம்.
ஜனாதிபதி முறைமையினை நீக்கி பாராளுமன்றிற்கான அதிகாரங்களை பெற்றுக் கொண்டு நாட்டில் நிரந்தர ஜனநாயகத்தினை ஏற்படுத்த நாம் துணிந்துள்ளோம். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நாட்டை வளர்க்கும் ஒரே இலக்கினை அடைவதற்காக எனது அமைச்சுப் பதவியினையும் சலுகைகளையும் துறந்து மக்களுக்காக முன்வந்துள்ளேன்.
எனது அரசியல் வரலாற்றில் நான் சொத்து சேர்க்கவில்லை. மக்களின் சொத்துக்களையோ அல்லது சலுகைகளையோ பறித்தெடுக்கவில்லை.
அதேபோல் இன்று நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறியிருப்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதோ உள்ள தனிப்பட்ட விரோதத்தினாலோ அல்லது முரண்பாடுகளினாலோ அல்ல.
எனக்கு ஆட்சி முறைமை மீதே வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிற்குள் பொருந்தாத நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை தொடர்ந்தும் கொண்டு நடத்துவது அர்த்தமற்றது. அதனை இனிமேலும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நாம் இப்போதும் பொறுத்து இருந்தால் நமது மக்களும் சீரழியும் போது வேடிக்கை பார்த்தால் வரும் கால சந்ததியினர் எம்மையே திட்டுவார்கள்.
மேலும் இந்த நாட்டில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மக்கள் விடுதலை முன்னணியினர் பிரளையும் ஒன்றிணையும் ஏற்படுத்துவதற்கு காரணம் இந்த ஜனாதிபதி முறைமையேயாகும். அதிகாரப் பகிர்வின் ஊடாக உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்குமாயின் போராட்டங்கள் ஏற்பட்டிருக்காது.
அன்று இந்த நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் நாம் 17 பேர் அரசுடன் இணைந்தோம். அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றோம்.
மேலும் இந்த நாட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. அதனோடு எமக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை. ஆனால் அதை அனைத்தையும் சீரழிக்கப் பார்க்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறை மீதே எமது விரோதம் உள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினால் இந்த நாடு பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றது. மக்கள் இச் சதுரத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். தேசப்பற்று, தேசியம் என பேசுவது வெறும் வாய் வார்த்தைகளாகவோ கற்பனைச் சொற்களாகவோ இருக்கக்கூடாது.
தேசப்பற்று என்பது இந்த நாட்டினை காப்பாற்றுவதாகவும் மக்களை காப்பாற்றவும் எடுக்கும் அர்ப்பணிப்பாகும். சொத்துக்களையும் புகழையும் விடவும் மக்களின் ஆதரவே தேவையானது. மக்களின் ஆதரவு இன்றி வேறு எது எம்மிடம் இருந்தும் அவை அர்த்தமுள்ளதாக அமையாது.
இந்த நாட்டையும் மக்களையும் காப்பாற்றக் கூடிய தலைவர் ஒருவரை சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தெரிவு செய்துள்ளோம். இவரின் மூலம் எண்ணி 100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கி நாட்டின் சுயாதீனத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு நான் உறுதிபூண்கிறேன்.
நாட்டில் மீண்டும் 17வது திருத்தச் சட்டத்தினை கொண்டு வந்து 18ம் திருத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
இந்த நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் மிக நீண்டகால வரலாற்றினை கொண்டவை. ஆனால் இன்று நிறைவேற்று முறைமையினை நீக்குவதற்காக இவ்விரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து களமிறங்கியுள்ளன.
இவ் இரண்டிற்கும் பலம் சேர்க்க ஏனைய கட்சிகளும் ஒன்றிணையவுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
இன்று நாங்கள் ஒன்றிணைதிருப்பது ஆரம்பம் மட்டுமே. அதேபோல் அரசில் இருந்து இன்று மட்டுமல்ல போகப்போக எதிர்வரும் காலத்தில் பெருமளவானோர் வெளியேறுவர். இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் யார் மிஞ்சுவார் என்பதை வரும் காலத்தில் பார்க்க முடியும்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgo6.html
பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது: எதிர்க்கும் சுப்பிரமணியன் சுவாமி
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 06:13.10 AM GMT ]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் கூறியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளி்யிட்டுள்ளது.
மதிமுக சார்பில் வரும் நவம்பர் 27 ம் திகதி அன்று ´தியாகத் திருநாள் பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம்´ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள வைகோவின் மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வைகோவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சுவாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இந்திய அரசியல் சட்டம் 256-ன் படி ‘மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துக்குத் தடையாகவோ, பாரபட்சப்படுத்தும் வகையிலோ மாநில அரசின் நிர்வாகம் செயல் படக்கூடாது’ என்பதை சுட்டிக்காட்டி பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgo7.html
Geen opmerkingen:
Een reactie posten