தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

உன் பெயர் தேவை...!

பொதுபல சேனா மைத்திரிபாலவுக்கு ஆதரவு! ஜனாதிபதி பணிப்புரை
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 03:42.14 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் பகிரங்க ஆதரவை மைத்திரிபால சிரிசேனவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் மாநாட்டிற்காக நேபாளம் புறப்பட்டுச் செல்ல முன்னர் இது தொடர்பில் ஞானசார தேரரிடம் நேரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடலுக்கு ஞானசார தேரர், சுற்றிலும் கறுப்புக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஆடம்பர வாகனத்தில் அதிரடிப்படை பாதுகாப்புடன் அலரிமாளிகைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதுள்ள சூழ்நிலையில் பௌத்த மேலாதிக்க அரசாங்கத்தை நிறுவ வேண்டுமானால் பொதுபல சேனா அமைப்பு தந்திரோபாய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இதற்காக தனது கொள்கைகளில் சிறிது தளர்வுப் போக்கினை வெளிக்காட்ட வேண்டும்.
மேலும் பொதுபல சேனாவிற்கு சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிக்காட்டுகின்றனர். இதனை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது பொது பல சேனா தனது ஆதரவை மைத்திரிபாலவுக்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மேலும் அரசாங்கம் தொடர்பிலும் சிறிது விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகள் மைத்திரிபால சிரிசேன தரப்பிற்கு கிடைப்பதை தடுக்கலாம். மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பௌத்த சிங்கள வாக்குகள் தொடர்பில் தந்திரோபாய நகர்வின் ஊடாக அவற்றை அரசாங்கத் தரப்பிற்கு பெற்றுக் கொள்ள இன்னொரு நகர்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனை ஞானசார தேரர் மற்றும் அவருடன் வருகை தந்திருந்த திலந்த விதானகே ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து வரும் வியாழக்கிழமை பொதுபல சேனா ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தனது ஆதரவை மைத்திரிபால சிரிசேனவிற்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவிக்கவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYet0.html

உன் பெயர் தேவை...!
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 03:05.41 AM GMT ]
இன்று எமக்கு நெஞ்சுரம் பிறந்த நாள்
நேற்றைய வரலாற்றை மறைத்து
நெளிந்து வாழும் ஈனம் எதற்கு
எம் குலத்திமிரை கோடிக்குள்வைத்து விட்டு
கொடுக்கானுக்கும் கோடறிக்காம்புகளுக்கும்
வாழத்துப்பாடாவா இந்த வாய்
அது வேண்டா
மன்னவா!
பண்டாரவன்னியனுக்கு பின் வந்துதித்த வல்லவா!
வென்றே வாழ்ந்த வீர வரலாற்றை
மீண்டும் தமிழர்க்கு தந்தவா! தலைவா!
எங்கள் தலைநிமிர்வே!
இன்றென்ன இனி ஏழேழு பிறப்புக்கும்
தமிழர் தலைவன் நீதான்
வேலுப்பிள்ளை பார்வதிக்கு நன்றி
தொன்மைத்தமிழனுக்கு ஓர் வரலாற்று வாரிசை தந்தீர்
செல்வந்தனாய் செழித்தவனாய்
உல்லாசபுரிகளில் சல்லாபிப்பவனாய்
எல்லா இன்பமும் வாய்த்த வாழ்வு அழைத்தபோதும்
முள்ளில் நடக்கும் விடுதலைப்பயணம் ஏற்றவனை
மானுடம் எப்படி மறக்கும்
கால வயிற்றில் இருந்து இம்மண்ணில் நீ காலடிவைத்தாய்
கால மொழி படித்தாய்
கால வலி படித்தாய்
சங்கநிலம் சகதி ஆனதறிந்தாய்
மெல்ல மெல்ல உன் மூச்சில் நெருப்பு வளர்ந்தது.
அதுவரை நீ அகிம்சைதானே
தந்தை செல்வாவின் விசுவாசிதானே
அங்கேதானே தமிழர் அடிமையாவதன் கதை படித்தாய்
ஆயுதம் என்ன உன் அம்மாவின் வயிற்றில் இருந்தா வந்தது
இல்லையே!
அகிம்சையின் உச்சத்தை திலீபனைவிட
வேறு இந்த பூமியில் காட்டமுடியுமா
அவன் உன் தம்பி அல்லவா
நீ ஆயுதத்தை மட்டுமே அவனுக்கு குழைத்து ஊட்டியிருந்தால்
எப்படி அவனால்
ஊன்வற்றி உடல் மெலிந்து பன்னிருநாள்
பட்டிணி கிடந்து இனத்துக்காய் சாக முடியும்
நீதான் தமிழரின் உண்மைத் தலைவன்.
நீ இன்று பிறந்த நாள்
உனக்கு வாழ்த்துப்பாடுவதல்ல என் நோக்கும்
வரலாற்றின் உன்னை வைத்துப்பார்ப்பதே!
முள்ளிவாய்க்காலோடு உன் பெயருக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று
முற்றத்தில் சுருண்டுபடுத்து நாய் கனவில் சிரித்ததுபோல்
தம் உள்ளக்கிடக்கைகளை அவசரப்பட்டு அவிழ்த்தவர்கள் பலர்.
ஈழத்தமிழர்க்கு அடு;த்த தலைவனாய் ஆகலாமென
பூளை சாற கடவாயில் வீணி ஒட்டியிருக்க எழும்பி வந்தவர்களும் பலர்
மணலாற்றுக்காட்டின் நடுவில்
ஒரு நாள் தனியே இருக்கவிட்டாலே உயிர்கசிய ஒப்பாரிவைத்து
உடல்வெளிறும் கூட்டத்துக்கெல்லாம்
உன் அரியணை கேட்டதென்றால் வரலாற்றுச் சிரிப்பு
இதைவிட வேறன்ன இருக்கமுடியும்.
இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் உன் பெயர் தேவை
பிறக்கும் பிள்ளையின் மனதில் ஒரு உண்மைத் தலைவனை உறையவைக்க
இயற்கை என் நண்பன் என்பதை இன்னொருவன் உணர
இலட்சிய உறுதியை ஒழுக்கத்தை கட்டியெழுப்பும் சூத்திரத்தை கற்பிக்க
பொன்னியின் செல்வனை இன்னொருமுறை படிக்க
தமிழர் ராஜ வம்சம் என்ற ரகசியத்தை சொல்ல
வம்சத்தையே வாரிசுகளையே தன்
மண்ணுக்காய் தரும் பேரிதயத்தை பிறப்பிக்க
ஐவகை நிலத்தையும் அற்புதமாய் அரசோச்ச
எதிரிகளின் தலைவன் எவன் என்பதை தீர்மானிக்க
உதிரிகளை கூட ஒவ்வொரு அணிகளாய் ஆக்க
பெண்ணின் பெருமை பேச
அதிகம் பேசாத ஆற்றலை சொல்ல
சோம்பேறிகளின் முகத்தில் சுடறேற்ற
வல்வெட்டித்துறையை வரும் சந்ததிகள் வணங்க
புதிய புறனானூற்றின் முதல்வரியை தொடங்க
வளரும் காவாலிகளை கட்டுக்குள் கொண்டுவர உன் பெயர் தேவை.
நினைத்துப் பார்க்கின்றேன்.
நீ புரட்சிக்கு தயாரான ஒவ்வொரு நிமிடமும்
நீ புயலான ஒவ்வொரு கணமும் உன் மனநிலையை
நினைத்துப்பார்க்க முடியாத உயரத்தில் நீ இருக்கின்றாய்
அச்சம் இல்லா விட்டால் வீரனாகலாம் என்பது தவறு
வீரனாவதற்கான பரீட்சை வழிகாட்டி நீதான்
அச்சம் களைதல் ஒரு அம்சம் அவ்வளவுதான்
மிச்சமாய் இருக்கிற ஆயிராமாயிரம் தகுதிகளால்தான் நீ வீரன்
உன்னிடமிருந்த ஒவ்வொரு போராளிகளும் மாபெரும் தலைவர்கள்
அவர்களுக்கு நீ தலைவன்
உன் குண்டு கட்டிய வட்டப் பொறுப்பாளன் திண்ணையில் இருந்த
அண்ணை என்று சொல்லி நாட்டிய ஆயிரம் காரியங்களைதான்
இன்று
ஏசியில் குஸனில் இருந்துகொண்டு செய்யமுடியாமல்
பலர் தடுமாறுகிறார்கள்.
உலகம் உணர்ந்த வல்லமை உன்னுடையது.
உலகம் உன்னை ஒரு வல்லரசு படையின்
தலைவன் என்று சொல்லவில்லை.
அது தன்மானப்பிரச்சனையாக இருந்தது.
அதனால்தான் தமிழ் வல்லரசோடு திரை மறையில் நின்று மோதினார்கள்.
உனது காலத்தில் ஈழம் உலகத்தின்
வல்லரசாக இருந்தது என்று நாம் வரலாற்றில் எழுதி வைப்போம்
உண்மைகளை எழுதத்தவறுகிற ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் நம் சந்ததிகள் ஏமாற்றப்பட்டுவிடும்
சிங்களத்துக்கு இப்பொழுது உன் பெயர்
அவசரமாயும் அடர்த்தியாயும் தேவையாய் இருக்கிறது
ஏன் எதிர்காலங்களில் நீயும் தேவையாய் இருக்கும்
ஆசியாவுக்கும் அகிலத்துக்கும் கூட
அவ்வப்பொழுது நீயும் உன் பெயரும் தேவையாய் இருக்கும்
நீ இறந்து விட்டதாக சொல்லி எதிரிகள் மகிழ்வது
இத்தோடு ஏழோ எட்டாவது தடவையாக இருக்கலாம்
நீ இறந்து விடவேண்டுமென எதிரிகள் கனவு கண்டது
பலகோடி தடவையாக இருக்கலாம்
உன் ஜென்ம எதிரிகள் தனித்து உன்னோடு மோதவில்லையே
தறுதலைகள்
கட்டையன் நெட்டையன் சுருட்டையன்
குஞ்சம் வைத்தவன் பூஞ்சல் கண்ணன்  என்று
எல்லாத்தையும் கெஞ்சி வந்துதானே
கோதாவில் இறங்கினான்
வெட்கம் கெட்டவன்
முப்பது வருடத்தில் ஒரு தடவையேனும் சொந்த புத்தியில்
உன்னை சொறிந்து கூட பார்க்கவில்லை இனவாதிகள்.
காலிக்கடற்கரையில் காற்று வாங்கும் ஒருவன் உன் பெயரை சொன்னால்
காமைல் ஓடி எட்டிநின்று
தமிழனுக்கு ஏகப்பட்ட மரியாதைகள் செய்தான்
இப்பொழுது நீ இல்லையென்றெண்ணி
அம்பாம்தோட்டை பறட்டைகளும் குட்டைகளும் கூட
எங்கள் அடிவளவுக்குள் வந்து குரைக்கிறது
குட்டிபோடவும் பார்க்கிறது.
நீ என்ற பிரமாண்டம் எல்லையற்ற பிரவாகம்
எங்களின் மன எழுச்சியின் அடையாளம்
தூங்குமுன் புறப்படுமுன் உச்சரிக்கும் மந்திரம்போல நீ
தமிழர்களின் நிஜ நாயகன் நீ!
புயலும் புஜமும் நீ
புதுமையும் பூர்வீக அடையாளமும் நீ
எதிரிகள் உன்னை எப்படி எறிந்தாலும் நீ எங்களுக்குள்ளேயே விழுகின்றாய்
அதனால் நீ என்றைக்கும் தமிழர் தலைவன்!
ஈழக்கிழவன்
அறுபதாவது அகவையில் பிரபாகரன்! பிறந்தநாள் கொண்டாடும் உலகத் தமிழர்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளில் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு இன்று அறுபதாவது பிறந்ததினம்.
தலைவரின் பிறந்ததினத்தை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் கேக் வெட்டி அமோகமாக கொண்டாடுகின்றனர்.
மேலும் தலைவரின் அறுபதாவது பிறந்தநாளுக்கான புதிய கவிதைகளையும், புதிய பாடல்களையும் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYety.html

Geen opmerkingen:

Een reactie posten