தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் காலம் மலர்ந்துள்ளது: விக்ரமபாகு கருணாரட்ன

ஸ்ரீ.ல.சு கட்சியில் மைத்திரிபால தொடர்ந்தும் இருந்திருந்தால் கொலை செய்யப்பட்டிருப்பார்: டட்லி சிறிசேன
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 02:42.22 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் இருந்திருந்தால் கொலை செய்யப்பட்டு வீதியில் எறியப்பட்டிருப்பார் என அவரது சகோதரர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஆட்சி முறைமை இந்த நிலைமையிலேயே காணப்படுகின்றது.
மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட காரணத்திற்காக கட்சியை விட்டு விலகிச் சென்றதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
எனினும் மைத்திரியுடன் நெருக்கமாக செயற்பட்ட சகோதரர் என்ற ரீதியில் உண்மை நிலைமையை நான் அறிவேன்.
ஊரில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இதே நிலைமையே. இது ஓர் அதிசயமான ஆட்சி முறைமை.
நாம் உயிருடன் இருக்கும் வரையில் இவ்வாறான ஓர் ஆட்சி முறைமைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.
பதவிகளை துறந்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே மைத்திரிபால சிறிசேன கட்சியை விட்டு விலகினார்.
இந்த ஆட்சி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதே மைத்திரிபாலவின் நோக்கமாக அமைந்துள்ளது என டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் அண்மையில் நடைபெற்ற மைத்திரிபால ஆதரவாளர் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYes7.html
மகிந்தவின் சர்வாதிகாரத்தை ஒழிக்க பொதுவேட்பாளருக்கே ஆதரவு: பிக்குகள் முன்னணி
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 03:21.45 AM GMT ]
நாட்டில் ஜனநாயகத்தினை ஏற்படுத்தி சர்வாதிகாரத்தை ஒழிக்க பொதுவேட்பாளருக்கே ஆதரவு வழங்குவோம் என ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பு தேசிய நூதனசாலை மண்டபத்தில் ஐக்கிய பிக்குகள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போது கினாவே ஆனந்த அனுநாயக்க தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த அரசின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். 
நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையினை நீக்க வேண்டும்.
நாட்டில் ஜனநாயகத்தினை ஏற்படுத்தவேண்டும் என்பதனையே ஆரம்பத்தில் இருந்து நாம் தெரிவித்து வந்தோம். அனால், எதுவும் இதுவரை நடைபெறவில்லை.
இவை நடைபெற ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால ஆறிசேனவுக்கு ஆதரவு வழங்கி பொது எதிரணியினை வெற்றிபெறச் செய்வோம்.
மேலும், இராணுவ கட்டுப்பாட்டினையும் அடக்குமுறையையும் தாண்டி பொது எதிரணியினை ஆதரிக்க வேண்டியுள்ளது.
எனவே, பொது வேட்பாளரின் வெற்றிக்காக சகல மட்டத்திலும் மக்களை அணிதிரட்டி பொது எதிரணியின் வெற்றிக்காக சகல வழிகளிலும் செயற்படுவோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYetz.html
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை பாதுகாப்பு அமைச்சின் வசம்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 02:26.27 AM GMT ]
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையின் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளது.
காங்கேசன்துறையில் உள்ள இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 104 ஏக்கர் காணியுடன் அனைத்துச் சொத்துக்களும் பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளது.
படையினரின் தேவைக்காக வலி.வடக்கு உட்பட யாழ்ப்பாணம் முழுவதும் பல இடங்களில் காணிகளை சுவீகரிக்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாகவே இந்தச் சுவீகரிப்பும் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை முழுமையாக பாதுகாப்பு அமைச்சால் சுவீகரிக்கப்பட்ட செய்தியை இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்தச் சுவீகரிப்பு எதற்காக இடம்பெற்றது எனத் தமக்குத் தெரியப்படுத்தவில்லை என கூட்டுத்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சுவீகரிக்கப்படும் காணி மற்றும் கட்டங்களுக்கான இழப்பீட்டை தமது கூட்டுத்தாபனத்துக்கு வழங்க பாதுகாப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சால் சுவீகரிபட்டுள்ள நிலையில் அதன் பணியாளர்கள் அனைவரும் தமக்கான சுயவிருப்பு ஓய்வுக்காலப் பணிக்கொடையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை மீளவும் இயங்க வைக்கும் நோக்கில் சிறிது காலத்துக்கு முன்னர் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.
மேலும் தனியார் ஒருவருக்கு இதனைக் குத்தகை அடிப்படையில் சிமெந்து உற்பத்திக்காக கொடுப்பதெனவும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் குடாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுப்பைக் கருதியும், நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டும் இந்த முயற்சிக்கு எதிர்ப்புக்கள் எழுந்தன.
இதனால் அந்த முயற்சி தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYes6.html
சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் காலம் மலர்ந்துள்ளது: விக்ரமபாகு கருணாரட்ன
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 02:20.26 AM GMT ]
சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் காலம் மலர்ந்துள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடிய ஓர் ஆட்சி முறைமையை உருவாக்க வேண்டும்.
அரசாங்கம் பொதுவாக நாட்டின் அரசியல் அமைப்பு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள், அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டு வருகின்றது.
பலவந்தமான அடிப்படையில் நாட்டின் பல்வேறு துறைகளை அரசாங்கம் பலவீனப்படுத்தி வருகின்றது.
மக்கள் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டுமென கருதுகின்றனர்.
நாடாளுமன்றம், நீதிமன்றம் மற்றும் அதிகாரிகளை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
வெளியுறவுத்துறை கடுமையான அரசியல் மயப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வேண்டப்பட்டவர்களே ராஜதந்திர சேவையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விக்ரமபாகு தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYes5.html

Geen opmerkingen:

Een reactie posten