தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

ஐ.நா.வுடன் மீண்டும் தொடங்கும் மோதல்!

அரசாங்கத்தை விட்டு விலகுமாறு மு.காங்கிரஸ் தலைமைக்கு உறுப்பினர்கள் அழுத்தம்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 02:54.59 AM GMT ]
அரசாங்கத்தை விட்டு விலகுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு, கட்சியின் உறுப்பினர்கள் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தை விட்டு விலகி பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்க வேண்டுமென கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானம் குறித்து இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்காத காரணத்தினால், ஆளும் கட்சிக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதனால் கட்சியின் வாக்கு பலம் வீழ்ச்சியடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்சி என்ற ரீதியில் பொறுமையுடன் செயற்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தைக் கொண்டு அபிலாஸைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக அரசாங்கம் மெத்தனப் போக்கைப் பின்பற்றினால் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeoy.html
மட்டக்களப்பில் வேலை பெற்றுத் தருவதாக பணம் மோசடி: ஸ்ரீ.சு.கட்சி அமைப்பாளருக்கு வலை வீச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 03:01.19 AM GMT ]
மட்டக்களப்பில் வேலை பெற்றுத் தருவதாக மக்களிடம் பணமோசடி செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணி அமைப்பாளரை விசேட குற்றப் புலனாய்வுத் துறையினர் தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்லடி,வேலூர் பகுதியில் அப்பாவி மக்களிடம் வேலை பெற்றுத்தருவாக கூறி, சுமார் 27 இலட்சம் ரூபாவினை பெற்று தலைமறைவாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இளைஞர் அணி அமைப்பாளர் எம்.சுஜாந்த் என்பவரையே விசேட குற்றப்புலனாய்வுத் துறையினர் தேடி வருகின்றனர்.
தலைமறைவாகியுள்ள குறித்த நபர், தற்போது மட்டக்களப்பு தேர்தல் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்துவின் பாதுகாப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeoz.html
யாழ்.பொன்னாலை காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்!- மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எனக்கூறிய நபர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 03:44.18 AM GMT ]
யாழ். பொன்னாலைச் சந்திக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இனம்காணப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சடலம் நேற்று மாலை பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொன்னாலைச் சந்தியிலிருந்து சம்பில்துறை செல்லும் பிரதான வீதியில் ஒரு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள காட்டுப் பகுதியில் கடற்கரை ஓரமாக அழுகிய நிலையில் சடலமொன்று கிடப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
பின்னர் பொதுமக்கள் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்துககு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த நபர் உயிரிழந்து சில வாரங்களாக இருக்கலாமென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சடலம் இன்று மல்லாகம் மாவட்ட நீதிபதி முன்னிலையில் மீட்கப்படுமென்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலானை மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எனக் கூறிய நபர் கைது
பாணந்துறை வாலனை மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி என தன்னை கூறிக்கொண்ட நபரை குருணாகல் கலேவல பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வலானை மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எனக் கூறிக்கொண்ட சந்தேக நபர் குருணாகல்– தம்புள்ளை பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த சில சாரதிகளை அச்சுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeo1.html
ஐ.நா.வுடன் மீண்டும் தொடங்கும் மோதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 06:10.11 AM GMT ]
இலங்­கையில் போரின் போதும், போர் முடி­வுக்கு வந்த பின்­னரும் இடம்­பெற்ற மனி­த­ உ­ரிமை மற்றும் மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­யகம் மேற்­கொள்ளும் விசா­ர­ணைகள் முக்­கிய கட்­டத்தை எட்­டி­யுள்­ளன.
இத்­த­கைய மீறல்கள் குறித்த சாட்­சி­யங்­களை எழுத்து மூலம் சமர்ப்­பிப்­ப­தற்கு ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­யகம் வழங்­கிய கால­ எல்லை கடந்த மாதம் 30ஆம் திக­தி­யுடன் முடி­வுற்­றுள்ளது.
இந்த எழுத்­து­மூல சாட்­சி­யங்­களை ஆராய்ந்து, அடுத்தகட்ட விசா­ர­ணை­களின் மூலம் அவற்றின் உண்­மைத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்திக் கொண்டு, மீறல்கள் குறித்த அடிப்­படை ஆதா­ரங்­களை முன்­வைக்கும், இரண்­டா­வது கட்டப் பணிக்குள் ஐ.நா. விசா­ரணைக் குழு நுழைந்­தி­ருக்­கி­றது.
ஐ.நா. மனிதஉரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில், இலங்கை அர­சாங்கம் இது­கு­றித்து மீண்டும் சந்­தே­கங்­க­ளையும், கேள்­வி­க­ளையும் எழுப்­பி­யி­ருக்­கி­றது.
கடந்­த­ வாரம் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பில் சில வெளி­நாட்டுப் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்­தி­ருந்தார்.
இலங்கை தொடர்­பாக ஐ.நா. மனிதஉரி­மைகள் பேரவை நடத்தும், விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் நாடு­களின் தூது­வர்கள், ஐ.நாவின் இலங்­கைக்­கான பிர­திநிதி ஆகி­யோ­ருடன், இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லியத் தூது­வரும் இந்த சந்­திப்­புக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
இந்த சந்­திப்­பின் ­போது, ஐ.நா. விசா­ர­ணைகள் பக்­கச்­சார்­பாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும், சில­த­ரப்­பி­ன­ருக்கு ஆத­ர­வாக ஐ.நாவின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ள­தா­கவும், போலி­யான சாட்­சி­யங்­களைச் சமர்ப்­பிக்கும் முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தா­கவும் அமைச்சர் பீரிஸ் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.
அது­மட்­டு­மன்றி, ஐ.நா. விசா­ர­ணைக்­குழு எவ்­வாறு செயற்­ப­டு­கி­ற­தென்ற கேள்­வி­யையும் அவர் எழுப்பத் தவ­ற­வில்லை.
ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட, இலங்­கையில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்து, ஐ.நா. மனிதஉரிமை ஆண­யாளர் பணி­ய­கத்தை விசா­ரிக்கக் கோரும் தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் ஏற்றுக் கொள்­ள­வில்லை.
ஜெனீ­வா­விலும், பின்னர் பல்­வேறு அரங்­கு­க­ளிலும் இலங்கை அர­சாங்கம் அதனை மிகவும் வெளிப்­ப­டை­யா­கவே கூறி­விட்­டது.
கடந்­த ­வாரம் நடந்த சந்­திப்­பின் ­போது, அமைச்சர் பீரிஸ் அத­னையும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.
ஐ.நா. விசா­ர­ணையை நிரா­க­ரித்து விட்­டாலும், அது எப்­படி, எங்கே நடக்­கி­றது என்று உரி­மை­யோடு கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார் அமைச்சர் பீரிஸ்.
இது ஐ.நா. மீது இலங்கை கொண்­டுள்ள உரி­மையின் அடிப்­ப­டை­யி­லா­னது என்று கூறு­வதை விட, ஐ.நா. விசா­ர­ணையை நம்­ப­கத்­தன்­மை­யற்­றது என்று காட்டும் முயற்­சி­யா­கவே கருத வேண்டும்.
தாம் நிரா­க­ரித்­து­ விட்ட ஒரு சர்­வ­தேச விசா­ரணை விவ­கா­ரத்­துக்குள் அர­சாங்கம் திரும்பத் திரும்ப மூக்கை நுழைக்க முனை­கி­றது என்­பது அமைச்சர் பீரிஸின் இந்தக் கருத்­து­க­ளி­லி­ருந்து புரிந்­து­கொள்­ளத்­தக்­க­தாக உள்­ளது.
இலங்­கையில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா. விசா­ர­ணைகள் தீவிரம் பெற்­றி­ருப்­பதை இலங்கை அர­சாங்­கத்­தினால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒரு விட­ய­மா­கவே இருக்­கி­றது.
இந்த விசா­ரணை அறிக்கை இலங்கை மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கோ அல்­லது எவ­ரை­யேனும் சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் நிறுத்­து­வ­தற்கோ வழி­வ­குக்கும் என்று அஞ்­சு­கின்ற சூழலும், அதற்­கான வாய்ப்­பு­களும் இப்­போது இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.
ஆனால், இந்த விசா­ரணை அறிக்கை சர்­வ­தேச அளவில் ஒரு முக்­கிய ஆவ­ண­மாக இருக்கப் போகி­றது.
இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­களை அம்­ப­லப்­ப­டுத்தும், அதற்கு நியாயம் வழங்கக் கோரும் ஒரு அறிக்­கை­யாக அமையப் போகி­றது.  அதில் அர­சாங்­கமும், விடு­தலைப் புலி­களும் குற்­றம்­சாட்­டப்­ப­டலாம். ஏனென்றால், இரு­த­ரப்­பும்தான் போரில் ஈடு­பட்­ட­வர்கள்.
அர­சாங்கம் தமது படைகள் எந்தப் போர்க்­குற்­றங்­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை என்றே கூறி­வ­ரு­கி­றது.  என்­றாலும், அண்­மைக்­கா­லத்தில் அது­பற்றி விசா­ரிக்கத் தயா­ரென்று உதட்­ட­ளவில் மட்டும் கூறி­யி­ருக்­கி­றது. அதற்­கான முயற்­சிகள் இன்­னமும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.
அதே­வேளை, விடு­தலைப் புலிகள் போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்­டனர் என்று அர­சாங்கம் கூறு­கி­றது. ஆனால், அதை­யும்­கூட, சர்­வ­தேச குழு விசா­ரிப்­பதை அர­சாங்கம் ஏற்­க­வில்லை.
இலங்கை அரசின் எதிர்ப்­பு­க­ளையும் மீறி, இலங்­கைக்கு ஆத­ர­வான நாடு­களின் தடை­க­ளையும் மீறி இப்­போது சர்­வ­தேச விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.
இந்தச் சூழ­லில்தான் அர­சாங்கம், அந்த விசா­ர­ணை­க­ளையும், அதில் சாட்­சி­ய­ம­ளிப்­போ­ரையும், குற்­றம்­சாட்டத் தொடங்­கி­யுள்­ளது.
ஐ.நா. விசா­ர­ணை­களை ஏற்­கவும் முடி­யாது, அதற்கு ஒத்­து­ழைக்­கவும் முடி­யாது என்று கூறிய அர­சாங்கம், ஒரு­கட்­டத்தில் இந்த விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிப்போர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று மிரட்­டவும் தயங்­க­வில்லை.
பின்னர், ஐ.நா. விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிப்போர் மீது எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டா­தென்று அர­சாங்கம் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. இருந்­தாலும், பல்­வேறு வழி­மு­றை­களின் ஊடாக, சாட்­சி­ய­ம­ளிக்கும் முயற்­சிகள் குழப்­பப்­பட்­டன.
சாட்­சியமளிப்­ப­தற்­கான சில படி­வங்களை வைத்­தி­ருந்­தா­ரென்று கிளி­நொச்­சியில் ஒருவர் கைது செய்­யப்­பட்டார்.  அவர் போலி­யான சாட்­சி­யங்­களைத் திரட்­டு­வ­தற்கு முற்­பட்­டா­ரென்று குற்­றம்­சாட்டி, குற்­றப்­ புல­னாய்­வுத் ­து­றை­யி­னரின் தடுப்­புக்­கா­வலில் இருந்து வரு­கிறார்.
இதனை முன்­வைத்தே, போலி­யான சாட்­சி­யங்கள் ஐ.நாவுக்கு சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தாக குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார் அமைச்சர் பீரிஸ்.
ஐ.நா. விசா­ரணைக் குழுவை நாட்­டுக்குள் அனு­ம­தித்­தி­ருந்தால், இத்­த­கைய நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. இப்­போது ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ர­ணை­களை மேற்­கொள்­வது போல அதுவும், பகி­ரங்­க­மாக சாட்­சி­யங்­களைப் பெற்­றி­ருக்கும். ஆனால் அர­சாங்கம் அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை.
இத்­த­கைய சூழலில், ஐ.நாவுக்கு சாட்­சி­ய­ம­ளிக்கும் படி­வங்­களை வைத்­தி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்து, ஒரு­வரைக் கைது செய்­தது சர்­வ­தேச அளவில் விச­னங்­களைத் தோற்­று­வித்­துள்­ளது. உண்­மையில் ஐ.நா. அத்­த­கை­ய­தொரு சாட்­சியப் படி­வத்தை வெளி­யி­ட­வில்லை. அது உள்­ளூரில் தயா­ரிக்­கப்­பட்­டது.
போரினால் பாதிக்­கப்­பட்ட பெரு­ம­ள­வான மக்­க­ளுக்கு அது­பற்றிச் சாட்சி சொல்ல விரும்­பி­னாலும், அதற்­கான வழி­மு­றைகள் தெரி­யாது அல்­லது அதற்­கான போதிய கல்­வி­ய­றிவு இல்லை. அவ்­வா­றா­ன­வர்­களின் சாட்­சி­யங்­களைத் திரட்­டவே இது­போன்ற படி­வங்கள் உள்­ளூரில் அச்­சி­டப்­பட்­டி­ருக்­கலாம்.
இலங்கை அர­சாங்கம் இதனை ஒரு குற்­றச்­செ­ய­லாகப் பார்க்­கி­றது. ஆனால், ஐ.நாவோ அமெ­ரிக்­காவோ இதனை ஐ.நாவுக்கு ஒத்­து­ழைக்கும் ஒரு செயற்­பா­டா­கவே பார்க்­கி­ன்­றன.
ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர், இது­கு­றித்து டுவிட்­டரில் பதிவு செய்­துள்ள குறிப்பு ஒன்றில், ஐ.நாவுக்கு ஒத்­து­ழைக்க முற்­ப­டு­வோரை மௌன­மாக்க முற்­ப­டு­வது, ஐ.நா. மீதான ஒரு தாக்­குதல் என்­பதை இலங்கை அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்­டு­மென்று எச்­ச­ரிக்கும் பாணியில் கூறி­யி­ருக்­கிறார்.
ஒரு­பக்­கத்தில், ஐ.நா. விசா­ர­ணை­களை நடத்­து­வ­தா­கவும், இர­க­சி­ய­மான முறை யில் சாட்­சி­யங்­களை அளிப்­ப­தற்­கான கால­எல்­லையை நீடித்­துள்­ள­தா­கவும், அர­சாங்கம் குற்­றச்­சாட்­டு­களைக் கூறு­கி­றது.
மறு­பக்­கத்தில் ஐ.நாவுடன் ஒத்­து­ழைப்­போரை மௌன­மாக்க அர­சாங்கம் முனை­வ­தாக அமெ­ரிக்கா குற்­றம்­சாட்­டு­கி­றது.
அமெ­ரிக்­காவின் இந்தக் குற்­றச்­சாட்டை, நோர்­வேயின் முன்னாள் சமா­தானத் தூதுவர் எரிக் சொல்­ஹெய்மும் ஆத­ரித்­தி­ருக்­கிறார்.
இத்­த­கைய கட்­டத்தில், போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­றதா என்று விசா­ரிக்க காணா­மற்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிறப்பித்த உத்தரவு எந்தளவுக்கு நேர்மையானது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஏனென்றால், ஐ.நாவுக்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்பதற்காகவே, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக போர்க்குற்றங்கள் குறித்து எத்தனை பேர் துணிச்சலுடன் சாட்சியமளிக்க முன்வருவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு அரசாங்கம் நின்று கொண்டது. அதனை நிறைவேற்றி, செயற்படுத்த எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
இத்தகைய நிலையில், அரசாங்கம் தனது உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகளையும் வலுப்படுத்தாமல், சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளையும் பலவீனப்படுத்த முற்பட்டு வருகிறது.
இது, சர்வதேச அளவில் இலங்கைக்கு மேலும் கெட்ட பெயரைத்தான் தேடிக் கொடுக்குமே தவிர, அதனைக் காப்பாற்ற உதவப் போவதில்லை.
- சத்­ரியன்
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeo2.html

Geen opmerkingen:

Een reactie posten