தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

மக்­களின் துய­ரத்தில் அர­சியல் இலாபம் தேட முனை­யக்­கூ­டாது!

மகிந்தவுக்கு ஆதரவாக புதிய இடதுசாரி கட்சி உருவாக்கம்!- வெளிநாடுகளின் தூதுவர்களை சந்திக்க தயாராகும் ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 06:12.51 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படும் நோக்கில் புதிய இடதுசாரி கட்சியை ஒன்றை உருவாக்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இது சம்பந்தமாக இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்துடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாக மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டணி கட்சிகள், அந்த கட்சிகளில் இருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான அணிகளை அடக்கவும் அரசாங்கத்தில் உள்ள முற்போக்கான இடதுசாரி கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் இந்த புதிய இடசாரி கட்சி உருவாக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
முக்கிய அமைச்சர் ஒருவரின் ஆலோசனைக்கு அமைய ஜே.வி.பியின் கம்பஹா மவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் தலைமையில் இந்த புதிய கட்சி உருவாக்கப்பட உள்ளது.
இந்த கட்சியில் இணையும் நபர்களுக்கு பணத்தை வழங்க பல வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளின் தூதுவர்களை சந்திக்க தயாராகும் ஜனாதிபதி
இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராகி வருகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்யுமாறு ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் நடந்தவைகள், எதிர்காலத்தில் நாட்டில் ஏற்பட போகும் அரசியல் மாற்றங்கள் மற்றும் இராஜதந்திர கொள்கைகள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அரசாங்க தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeo3.html
பிரபா கணேசன் அரசியல் தேவைகளுக்காக கூட்டமைப்பை விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்: அரியம் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 06:41.05 AM GMT ]
பிரபா கணேசன் இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள சிற்றூண்டிச்சாலையின் சமையல்காரராகவும், உணவு உபசரிப்பாளராகவும் இருக்கின்றார் என்பது இப்போதுதான் எமக்குத் தெரியும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
பாராளுமன்றம் கலையும் காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் 110வது அமைச்சராக பதவியேற்ற தொலைத்தொடர்பு தொழிநுட்ப பிரதி அமைச்சர் பிரபா கணேசன் மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது கூறிய கருத்துத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றம் வருவது அங்குள்ள சிற்றூண்டிச்சாலையில் உணவு உண்பதற்கே என கூறியிருக்கின்றார்.
பிரபா கணேசனின் அரசியல் வரலாறு எப்படிப்பட்ட தென்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் த.தே.கூட்டமைப்பினைப் பற்றி, அதுவும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி கதைப்பதற்கோ, விமர்சிப்பதற்கோ இவருக்கு எந்த அருகதையும் இல்லை.
இவர் உப்புச்சப்பு இல்லாத அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மட்டக்களப்பிற்கு வருகை தந்து உப்புச்சப்பு இல்லாத விடயங்களைக் கூறுவதென்பது, அவருக்கும், அவரது அரசாங்கத்திற்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் த.தே.கூட்டமைப்பினரைப் பற்றி கதைக்க வேண்டிய தேவை அவருக்கில்லை என்பதனை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் எங்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை எங்கள் மக்களுக்காக ஒதுக்கி அதற்கான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம்.
அவ்வாறிருக்கையில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மக்களுக்கு பயன்படுத்தப்படாமல் திரும்பிப் போவதாக கூறியிருக்கின்றார்.
ஆகவே எந்த வருடத்தில், எந்தப் பாராளுமன்ற உறுப்பினரது நிதி மக்களுக்கு பயன்படாமல் திரும்பிப் போயிருக்கின்றது என்பதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
இவர் உடனடியாக மலையக மக்களின் இன்றைய தேவை என்ன என்பதனை அறிந்து, அது தொடர்பாக ஜனாதிபதியிடம் சென்று அந்த மக்களின் அவலங்கள் பற்றி எடுத்து கூறி அதனை தீர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் இதுவே இன்றைய தேவையாகும்.
எல்லோரும் த.தே.கூட்டமைப்பினரைப் பற்றி கதைக்கின்றார்கள் என்பதற்காக பிரபா கணேசனும் கதைப்பதென்பது பொருத்தமானதல்ல என்பதனை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆகவே தங்களின் சுயநல அரசியலுக்காக த.தே.கூட்டமைப்பினரை பற்றி கதைப்பதையோ, விமர்சிப்பதையோ 110வது அமைச்சராக இருக்கும் பிரபா கணேசன் தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeo5.html
மக்­களின் துய­ரத்தில் அர­சியல் இலாபம் தேட முனை­யக்­கூ­டாது
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 06:54.49 AM GMT ]
கொஸ்­லந்தை மீரி­ய­பெத்த பகு­தியில் ஏற்­பட்ட பாரிய மண்­சரிவு அனர்த்­தத்தில் சிக்­குண்ட மக்­களின் துயரம் இன்னும் தீர்ந்த பாடில்லை.
மண்­ணுக்குள் புதை­யுண்­ட­வர்­களை தேடி மீட்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் அதே­வேளை, பாதிக்­கப்­பட்ட மக்கள் பூனா­கலை தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். பாட­சா­லையில் சுமார் 200பேர் வரையில் தங்­கி­யுள்­ளனர்.
அதே­வேளை இவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை அனர்த்த முகாமைத்­துவ அமைப்பின் கீழ் இயங்கும் நிலை­யமும், படை­யி­னரும் மேற்­கொண்டு வரு­வ­தாகத் தெரி­விக்கப்­ப­டு­கின்­றது.
அதேவேளை, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சமூக தொண்டு நிறு­வ­னங்கள் மற்றும் தனியார் நிறு­வ­னங்கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், பொது அமைப்­புக்கள் எனப் பல்­வேறு தரப்­பி­னரும் நிவா­ரண உத­வி­களை வழங்கி வரு­கின்­றன.
மேலும் பல்­வேறு தரப்­பி­னரும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்குத் தேவையான நிவா­ர­ணங்­களை நேர­டி­யாகக் கைய­ளிக்கும் வகையில் எடுத்துச் சென்ற போதிலும் அதற்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் பொது­வாகக் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.
எவ்­வாறு இருந்த போதிலும் இம்­மக்கள் உப்புச் சிரட்டை தொடக்கம் அனைத்து தேவைகளுக்கும் பிற­ரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
ஒரு­வ­கையில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வீடு வாசல்கள், சொந்த பந்­தங்கள் என்று அனைத்­தையும் இழந்து எவ்­வாறு சொல்லொணாத் துன்­பங்­களை எதிர்­நோக்­கி­னார்­களோ அதே வகை­யி­லேயே மீரி­ய­பெத்த மக்­களும் இன்று அவ­லங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.
தற்­பொ­ழுது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பாது­காப்­பான இருப்­பிட வசதி மற்றும் அடிப்­படை வச­தி­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கடப்­பா­டாகும்.
அந்த வகையில் மீண்டும் நிலச்­ச­ரிவு ஏற்­ப­டாத பிர­தே­சங்கள் சரி­யான வகையில் ஆரா­யப்­பட்டு அங்கு வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­துடன், குறித்த மக்­க­ளுக்குத் தேவை­யான பொரு­ளா­தார வச­தி­களும் செய்து கொடுக்­கப்­பட வேண்டும்.
தற்­பொ­ழுது பல்­வேறு அமைப்­புக்­க­ளி­னாலும் நிறு­வ­னங்­க­ளி­னாலும் வழங்­கப்­பட்டு வரும் நிவா­ரண உத­விகள் அவர்­க­ளுக்குத் தற்­கா­லிக நிவா­ர­ணங்­க­ளாக அமை­யுமே தவிர நிரந்­தர நிவா­ர­ண­மாக அமைய மாட்­டாது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
அந்த வகையில் அர­சாங்கம் அவர்­க­ளுக்குப் பாது­காப்­பான குடி­யி­ருப்பு வச­தி­களை மேற்­கொள்­வது மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தொன்­றாகும். அது மாத்­தி­ர­மன்றி, மண்­ச­ரிவு அபா­ய­முள்ள இதர பகு­தி­களும் இணங்­கா­ணப்­பட்டு அவர்­க­ளுக்கும் துரி­த­மாக வீடு­களை அமைத்துக் கொடுப்­பது அவசியம்.
இதே­வேளை, மீரி­ய­பெத்த தோட்ட மக்கள் கோரிக்கை ஒன்­றையும் முன் வைத்­துள்­ளனர். அதா­வது, எப்­போதும் தாங்கள் காலா­கா­ல­மாக ஒன்­றி­ணைந்து வாழ்ந்­தது போல ஒற்­று­மை­யாக வாழ வழி செய்யும் வகையில் பாதிக்­கப்­பட்ட மீரி­யபெத்த மக்­களை ஓரி­டத்தில் குடி­ய­மர்த்­து­மாறும் எக்­கா­ரணம் கொண்டும் தங்­களை பிரித்­து­ வேறு இடங்களில் குடியமர்த்த வேண்டாம் எனவும் வின­ய­மாக வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.
இதேவேளை, பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஒரே ஏக்கம் தங்­க­ளுக்குத் துரி­த­மாக வீடு மனைகள் அமைத்து கொடுக்­கப்­ப­டுமா? அல்­லது அதி­கா­ரிகள் வந்து பார்­வை­யிட்­ட­தோடு அனைத்தும் முற்றுப் பெற்று விடுமா? என்­பதே ஆகும். அது மாத்­தி­ர­மன்றி, எவ்­வ­ளவு காலத்­திற்கு இவ்­வாறு நிர்க்­க­தி­யான நிலையில் குறித்த பாட­சா­லையில் தங்­கி­யி­ருப்­பது என்றும் அவர்கள் வினா எழுப்பி வரு­கின்­றனர். போது­மான அடிப்­படை வச­தி ­க­ளற்ற நிலையில் முகா­மி­லுள்ள குறித்த மக்கள் மீண்டும் சகஜ வாழ்க்கை வாழ்­வ­தற்­கான சூழலை எதிர்­பார்த்­த­வர்­க­ளாகக் காத் ­தி­ருக்­கின்றனர். அந்த வகையில் பாதிக்கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவையான அடிப்­படை வச­தி­களை மேற்­கொள்ள வேண்­டிய பாரிய பொறுப்பு அர­சாங்­கத்­தையும் குறித்த மக் களை பிர­தி­நி­தித்­துவ படுத்தும் அர­சியல்வா தி­க­ளையும் சார்ந்­த­தா கும்.
அனர்த்தம் ஏற்­பட்ட தினத்­தி­லி­ருந்து அன்­றாடம் பெரும் எண்­ணிக்­கை­யான அர­சியல் தலை­வர்கள் பாதிக்­கப்­பட்ட மக்­களை நேர­டி­யாகச் சென்று பார்­வை­யிட்டு வரு­வ­துடன், தம்­மா­லான நிவா­ரண உதவி­க­ளையும் வழ ங்கி வரு­கின்­றனர். பாதிக்­கப்­பட்ட மக்­களை நேர­டி­யாகச் சென்று பார்­வை­யிட்டு அவர்­க­ளுக்கு அனு­தாபம் தெரி­விக்க வேண்­டி­யது மனி­தா­பி­மா­ன­முள்ள அனை­வ­ரி­னதும் கடப்­ப­டாகும். இதில் இரு­வேறு கருத்­துக்­க­ளுக்கு இட­மி­ருக்க முடி­யாது.
அதே­வேளை, இதனை அர­சி­ய­லாக்கி அதில் ஆதாயம் தேடவும் மக்­களை பிரித்து அதில் குளிர் காயவும் ஒரு­சில அர­சி­யல்­வா­திகள் முயல்­வது மிகவும் விச­னத்­துக்­கு­ரி­ய­தாகும். அந்த வகையில் பாதிக்­கப்­பட்ட மக்­களை வைத்து அர­சியல் ஆதாயம் பெற எவ ரும் முயல்­வார்­க­ளே­யானால் அது எந்­த­வ­கை­யிலும் ஏற்றுக் கொள்­ளவோ ஜீர­ணிக்­கவோ கூடி­ய­தல்ல என்­பதை நினைவில் கொள்­வது அவ­சி­ய­மாகும்.
பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தங்கள் அர­சி யல் நல­னுக்­கா­கவும் தங்கள் இருப்பை தக்­க­வைத்துக் கொள்ளும் வகை­யிலும் ஒரு­சில அர­சியல்வாதிகள் மக்­களை பிரித்­தாளும் நட­ வ­டிக்­கை­களை மிகவும் கச்­சி­த­மாக மேற்­கொண்டு வரு­கின்­றனர்.
இதுவே தமிழ் சமூ­கத் தின் சாபக்­கே­டாக தொடர்ந்து வரு­கின்­றது. அந்த வகையில் இந்த நாட்டில் தமிழ் மக்கள் எந்த திக்கில் பாதிக்­கப்­பட்­டாலும் அவர்­க­ளுக்­காகக் குரல் கொடுக்கவேண்டியது தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து தரப்­பி­ன­ரதும் கடப்­பா­டாகும்.
தமிழ் மக்­களை பொறுத்­த­மட்டில் சகல வழி­க­ளிலும் அவர்கள் மிகுந்த அர­சியல் தெளிவு கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றனர். வெறு­மனே அர­சி­யல்­வா­தி­களின் முதலைக் கண்­ணீ­ருக்கும் பசப்பு வார்த்­தை­க­ளுக்கும் மதி­ம­யங்கி ஏமாறும் நிலையில் அவர்கள் இல்லை என்­பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குறித்த பிர­தே­சத்தில் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­ப­டு­மென்று 2005 ஆம் ஆண்டும் 2011ஆம் ஆண்டும் அடுத்­த­டுத்து இரு தட­வை கள் தேசிய கட்­டட ஆய்வு மையமும், அனர்த்த முகா­மைத்­துவ அமை ச்சர் மஹிந்த அம­ர­வீ­ரவும் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் கருத்தில் கொண்டி ருந்தாலோ அன்றேல், குறித்த குடி­யி­ருப்­புக்­களை பாது­காப்­பான இடத்­துக்கு மாற்­றி­ய­மைக்க எவரும் நட­வ­டிக்­கைகள் எடுத்­தி­ருந்தாலோ இந்த உயி­ரி­ழப்­புக்­களைத் தடுத்­தி­ருக்க முடியும்.
பொது­வா­கவே மலை­ய­கத்தில் காணப்­படும் லயன் குடி­யி­ருப்­புக்கள் பழைமை வாய்ந்­தவை மாத்­தி­ர­மன்றி, இயற்­கையின் சீற்­றங்­க­ளுக்கு பாது­காப்­பா­ன­வையும் அல்ல. எனினும், அதனை மாற்­றி­ய­மைத்து தோட்டத் தொழி­லா­ளர்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்வு காணும் போக்­கு­களைக் காண முடி­யாத நிலை­மை­களே தொட­ரு­கின்­றன.
எவ்­வா­றெ­னினும் மீரி­ய­பெத்த அனர்த்தம் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்குப் பாது­காப்­பான இடங்­களில் குடி­யி­ருப்­புக்கள் நிர்­மா­ணிக்­கப்­பட வேண்டும் என்ற அவ­சி­யத்தை மீண்டும் உயி­ரூட்டி உள்­ளது என்றே கருத வேண்­டி­யுள்­ளது.
இத­னி­டையே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்குத் தேவை­யான வீடு­களை அமைத்து கொடுக்க இந்­தியா தயா­ராக இருப்­ப­தாக கண்­டிக்­கான இந்­தியப் பிரதித் தூதுவர் ஏ. நட்­ராஜா தெரி­வித்­துள்ளார். அத்­துடன் தாய், தந்தையரை இழந்துள்ள பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்கி இந்தியாவுக்கு அனுப்பிவைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் இந்திய அரசு 2 ஆயிரம் வீடுகள் அமைத்து கொடுக்க இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. அந்த 2 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் ஒரு பகுதியாக மீரியபெத்த மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வீடுகளை அமைத்து கொடுப்பது தொடர்பிலும் ஆராயப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துரிதமாக வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்ததாகும். எனவே, மேலும் காலத்தை நீடிக்காத வகையில் குறித்த மக்களின் துயரைத் துடைக்க நடவடிக்கை எடுப்பது அனைத்து தரப்பினரதும் கடமை என்பதை நினைவு படுத்த விரும்புகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeo6.html

Geen opmerkingen:

Een reactie posten