தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 juli 2013

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வர​ன் போட்டியிடு​வது நாட்டுக்கு பயங்கரமானது: குணதாச அமரசேகர!

இலங்கையின் பொய் பிரசாரத்தால் கடும் அதிருப்தியில் இந்தியா
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 08:50.44 AM GMT ]
இந்தியாவின் புத்தகாயாவில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இந்திய மத்திய உளவுப் பிரிவான ரோ அமைப்பு இருப்பதாக இலங்கை அரசும், அரசின் கூட்டணிக் கட்சிகள் ஊடாக முன்னெடுத்து வரும் பொய் பிரசாரம் மற்றும் எதிர்ப்பு தொடர்பில், இந்திய அரசு கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக இராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா, ரஷ்யா என்கின்ற இரண்டு பெரிய பலுன் பந்துகள் தமக்கிருப்பதாக நினைத்து கொண்டு, ராஜபக்ஸ அரசு, தமக்கு பொய் சண்டித்தனத்தை காட்டி வருகிறது எனவும் அந்த பலுன் பந்துகளில் இருந்த காற்று வெளியேறிய பின்னர்தான், தனது சண்டித்தனத்தின் பாரதூரத்தை இலங்கை அரசு உணரும் என்றும் புதுடெல்லி அரசின் ராஜதந்திரி ஒருவர், வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா, சிங்கள ராவய அமைப்புகள் கடந்த வாரங்களில் சில தடவைகள் கொழும்பில் இருக்கும் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மேற்படி ராஜதந்திரி, சகல அடிப்படைவாத சக்திகளின் பின்னால் ராஜபக்ஸ அரசு இருப்பது இந்தியாவுக்கு நன்றாக தெரியும் எனக் கூறியுள்ளார்.
அதேவேளை இந்திய மக்களவையின் அனுமதியின்றியே, கச்சதீவு - சிறிமா -சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்டது. எனவே அதனை திரும்பப் பெறவேண்டும் என்று விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் காரணமாக இந்திய மத்திய அரசு பெரும் சௌகரியத்திற்கு முகாம் கொடுத்திருப்பதாகவும் அந்த இராஜதந்திரி கூறியுள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வர​ன் போட்டியிடு​வது நாட்டுக்கு பயங்கரமானது: குணதாச அமரசேகர
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 08:58.22 AM GMT ]
இந்தியாவின் றோ உளவுப் பிரிவின் ஆலோசனையும், இரா. சம்பந்தனின் அரசியல் தந்திரமும் இணைந்தே முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது என தேசியப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேசம் அங்கீகரிக்கப்படக்கூடிய விக்னேஸ்வரனை நியமித்ததன் மூலம் கூட்டமைப்பு தனது விடுதலைப் புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க முயற்சித்துள்ளது.
மாவை சேனாதிராஜா முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளின் ஆதரவாளர். முக்கியமாக இந்தியாவும் இதனை நன்கு அறிந்துள்ளது. எனவே மாவை சேனாதிராஜாவை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை இந்தியா விரும்பாது.
அதேவேளை இலங்கையில் தனித் தமிழீழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. இதனிடையே முன்னாள் நீதியரசரின் விக்னேஸ்வரனின் இரண்டு புதல்வர்களும் சிங்களப் பெண்களையே மணந்துள்ளனர்.
இது மட்டுமல்லாது அவர் உயர் பதவி வகித்த படித்தவர், இதனை கூட்டமைப்பினர் சர்வதேசத்திடம் எடுத்துரைப்பர். விக்னேஸ்வரனால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் படித்த புத்திஜீவி சர்வதேசத்துடன் ஒத்துப்போகக் கூடியவர் என்பதையும் கூட்டமைப்பு எடுத்துக் கூறும்.
எவ்வாறாயினும் இந்திய உளவுப் பிரிவின் ஆலோசனை, சம்பந்தனின் அரசியல் வியூகம் என்பன காரணமாக விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது, பயங்கரமானதும் நாட்டுக்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலைமையுமாகும்.
எனவே, ஜனாதிபதி இதனை தடுத்து நிறுத்த அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் பதவியோ அல்லது வெளிநாட்டு தூதுவர் பதவியையோ வழங்கி முதலமைச்சர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten