தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

யாழ். பல்கலை. மாணவனை கடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் அச்சம்!

மூன்றாக உடையும் முஸ்லிம் காங்கிரஸ்! அதிர்ச்சியில் ஹக்கீம்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 04:21.26 PM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் ஓரிரு நாட்களுக்குள் மூன்றாக உடைந்து சிதறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் அமைச்சர் பஷீர் சேகுதாவூது தலைமையில் கட்சியின் ஒரு குழுவினர் அரசுடன் நேரடியாக ஐக்கியமாகும் முடிவில் உள்ளனர். இதன் மூலம் தங்களுக்கு சுயலாபங்களை அடைந்து கொள்ள முடியும் என்று இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இன்னொரு குழுவினர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கத் தலைப்பட்டுள்ளனர். பைசல் காசிம், அஸ்லம் மற்றும் ஹரீஸ் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே பொருத்தமான தருணம் வரும்வரை எந்தப்பக்கத்துக்கும் ஆதரவு தெரிவிக்காமல் காலத்தைக் கடத்தும் யுக்தியைக் கையாள கட்சித் தலைவர் ஹக்கீம் முடிவெடுத்துள்ளார். இதற்கு ஆதரவாக செயலாளர் ஹசனலி, எம்.எஸ். தௌபீக் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹக்கீமின் அணியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடாக ஆளுங்கட்சியுடன் பேரம் பேசல் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் எதிர்வரும் புதன்கிழமைக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிளவு குறித்த தகவல்கள் உத்தியோகபூர்வமாக வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgt2.html
யாழ். பல்கலை. மாணவனை கடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் அச்சம்!
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 04:15.24 PM GMT ]
யாழ்.பல்கலைக்கழக 3ம்வருட கலைப்பீடத்தின் ஊடகப்பிரிவு மாணவனை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மை சம்பவங்களை குறித்த மாணவனின் பெற்றோர் இன்றைய தினம் மனந்திறந்து வெளிப்படுத்தியிருப்பதுடன் தங்கள் மகனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர். 
மேற்படி சம்பவம் தொடர்பில் பெற்றோர் கூறுகையில்,
நேற்றைய தினம் மாலை 7.30மணயளவில் எங்கள் வீட்டுக்கு சிலர் வந்தார்கள். அவர்கள் கையில் கைத்துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள்.
மேலும் என் மகன் எங்கே? என்னும் சற்று அதட்டும் தொனியில் கேட்டார்கள். ஆனால் அவர்கள் தங்களை யார்? என கூறவில்லை.
அதனோடு அவர்கள் முகமறைப்பு தலைக்கவசங்களை அணிந்திருந்தனர். அவர்கள் உ ள்ளே வருகின்றார்கள். என்பதை அறிந்ததும் எங்கள் மகனை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டோம்.
பின்னர் மகனுடைய மச்சான் மற்றும் சகோதரன் ஆகியோரை பிடித்து வைத்துக் கொண்டு அவர்களை கொண்டுபோகப்போகிறோம். மகனை உடனே கொண்டுவாருங்கள் என கேட்டார்கள்.
பின்னர் நாங்கள் அயலவர்களை உதவிக்கு அழைத்தோம். உடனே அவர்கள் வந்தார்கள். அதிகளவில் அவர்கள் வந்ததும் மர்மநபர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார்கள்.
அதனால் நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம்.
மேலும் மனிதவுரிமை ஆணைக்குழு மற்றும் பொது அமைப்புக்களுக்கு விடயம் தொடர்பாக முறைப்பாடு கொடுக்கவும் தீர்மானித்திருக்கிறோம்.
ஆனால் விடுமுறை தினம் என்பதனால் திங்கட்கிழமையே மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு கொடுக்க முடியும் எனவும் கூறினர்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgt1.html

Geen opmerkingen:

Een reactie posten