[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 04:29.53 PM GMT ]
2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த உத்தரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான தமக்கு விடுக்கப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றில் இன்று ஒளிபரப்பான அரசியல் நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் பொதுவேட்பாளர் நிலைக்கு பின்னால் சர்வதேச சக்திகள் உள்ளதாக இன்று காலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சுமத்திய குற்றச்சாட்டை மறுத்த மைத்திரிபால சிறிசேன இது பொதுமக்களை வேறு திசைக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார்.
இன்று காலை செய்தியாளர் சந்திப்பின் போது தம்மீது குற்றம் சுமத்திய அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி தொடர்பில் தம்மிடம் அதிருப்தியை வெளியிட்டவர்கள் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgt4.html
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முடிவை 25ம் திகதி அறிவிப்பாராம்!
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 04:22.05 PM GMT ]
இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015ம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பலர் பொது எதிரணியின் பக்கம் தாவி வருகின்றனர்
இந்நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என அமைச்சர் டக்ளஸிடம் எழுப்பப்பட்ட கேள்விக் கு எதிர்வரும் 25ம் திகதி என் முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தென்னிலங்கையில் தொடர்ச்சியாக கட்சி தாவல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், ஊடகவியலாளர்கள் மேற்படி கேள்வியை எழுப்பினர்.
அதாவது ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் தொடக்கம் மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் வரையில் னைவரும் பொது எதிரணிக்கு தாவி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருடன் மிக நல்லுறவை பேணிய உங்கள், நிலைப்பாடு என்ன? கட்சி தாவும் எண்ணப்பாடு ஏதேனும் உள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்ட அமைச்சர் டக்ளஸ், எதிர்வரும் 25ம் திகதி பெரியளவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவிருக்கிறேன். அதன்போது என் நிலைப்பாடு என்ன? என்பதை நான் வெளிப் படுத்துவேன் என கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgt3.html
Geen opmerkingen:
Een reactie posten