பெரிய கல்லாறு பகுதியில் வாகன விபத்து!- மட்டு.சந்திவெளி ஓடத்துறைக்கு உயிர்காப்பு அங்கிகள் வழங்கிவைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 03:50.25 AM GMT ]
திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் மேற்படி வாகனமும் கடையும் சேதமாகியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மஞ்சள் கடவைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் நின்றமையால், பிரதான வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து கடையுடன் மோதியது.
இதன்போது, கடையில் இருந்தவர்களும், வாகன சாரதியும் தெய்வாதினமாக தப்பியுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மட்டு.சந்திவெளி ஓடத்துறைக்கு உயிர்காப்பு அங்கிகள் வழங்கிவைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் உள்ள ஓடத்துறைக்கு ஒரு தொகை உயிர் காப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இவை சந்திவெளி கிராமத்தலைவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு சந்திவெளி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பேரின்பமலர் மனோகரதாஸ் மற்றும் பிரதியமைச்சரின் ஊடாக இணைப்பாளர் ஜீவானந்தன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
சந்திவெளி –திகிலிவட்டைக்கான போக்குவரத்துகள் சந்திவெளி ஆற்றின் ஊடாக நடைபெற்றுவருகின்றது.
படகு சேவை மூலம் இடம்பெற்றுவரும் இந்த போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த உயிர்காப்பு அங்கிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்துவரும் நிலையில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்துள்ள நிலையில் இந்த பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களின் பயணம் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உயிர்காப்பு அங்கிகள் மிகவும் அவசிமான சூழ்நிலையில் இது தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இவை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfx0.html
மகிந்த - மைத்திரி கடும் போட்டி! தேர்தல் களத்தில் பீஷ்மர்கள் பலர்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 04:12.42 AM GMT ] [ வலம்புரி ]
மகாபாரதப் போரில் பாண்டவர்களை வெல்லச் செய்வதற்காக பார்த்தசாரதியாகிய கிருஷ்ண பரமாத்மா பட்ட கஷ்டங்களும் செய்த சூழ்ச்சிகளும் கொஞ்சமல்ல.
அவதார புருராகிய கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஏன் இத்துணை கஷ்டம் என்று யாரேனும் கேட்டால், கிருஷ்ணனுக்கு ஈடான பலமும் சக்தியும் ஞானமும் கொண்டவர்கள் துவாபர யுகத்தில் இருந்தது தான் காரணம் எனலாம்.
போரை நடத்தியாக வேண்டும் என்பது கிருஷ்ணனின் முடிவு அல்ல. அது இறைவனாகிய பரம்பொருள் விதித்த நியதி.
இந் நியதியை மீறி போரைத் தடுக்க வேண்டுமென கிருஷ்ணன் நினைத்தால் கூட, போரை நிறுத்த முடியாது. ஏனெனில் போரை நடத்தும் பணியை கிருஷ்ணன் செய்தானேயன்றி, போரை அவன் நடத்தவில்லை.
பாரதப் போர் நடந்தாக வேண்டும் என்பது பிறவா யாக்கைப் பெரியோன் என்று சிலப்பதிகாரம் போற்றும் சாட்சாத் பரமேஸ்வரனுடைய முடிவு.
எனவே சிவப்பரம்பொருளின் முடிவை நிறைவேற்ற வந்தவரே கிருஷ்ண பரமாத்மா. அதன் காரணமாகவே தன் சகோதரி சுபத்திரையின் புதல்வன் அபிமன்யுவின் உயிரைக் கூட கிருஷ்ணனால் பாதுகாக்க முடியவில்லை.
இதிலிருந்து போரை நடத்தும் சக்தி வேறு எங்கோ உள்ளது என்பது தெளிவாகிறது. இது ஒருபுறமிருக்க இலங்கையிலும் ஜனாதிபதித் தேர்தல் பாரதப் போர் போல நடக்கப் போகிறது.
மகிந்த ராஜபக்வை எதிர்த்து அவரோடு கூட இருந்த மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதன் காரணமாக தேர்தல் களம் விறுவிறுப்பாகவிருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
குத்து வெட்டுக்கள், பணப்பரிமாற்றங்கள், தில்லு முல்லுக்கள், அடிதடிகள், ஆர்ப்பாட்டங்கள் எனப் பலதும் நடந்தாகும்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் நிறுத்தியுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக எதிர்க்கட்சிகள் கடுமையாகப் பாடுபடும்.
இதில் மைத்திரியின் தேரோட்டும் சந்திரிகா குமரதுங்க ஒரு பார்த்த சாரதியாக இருப்பார் என்று முன்னரே இவ்விடத்தில் கூறியிருந்தோம்.
இதை நாம் கூறும்போது, சந்திரிகா பார்த்தசாரதி என்றால் ஏற்கெனவே நீங்கள் குறிப்பிட்ட பரம்பொருள் யார் என்ற கேள்வி எழும்.
பரம்பொருள் இல்லாமலா மைத்திரிபால சிறிசேன மகிந்தவை எதிர்த்து வெளிக்கிட்டார். ஆகவே அவசரப்பட்டு பரம்பொருள் யார் என்று தேடுவது அவசியமற்றது.
இப்போது போரில் என்னென்ன தந்திரோபாயங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது பற்றியே நாம் ஆராய வேண்டும்.
அந்த ஆய்வுக்காக பாரதப் போரில் வெல்ல பார்த்த சாரதி செய்த தந்திரோபாயங்களை ஒரு கணம் மீளவும் சிந்திப்பது பொருத்துடையது.
கெளரவர் பக்கம் இருக்கக்கூடிய விதுரன் வில் வித்தையில் மகாவிற்பனன். வில்லுக்கு விதுரன் என்றே கூறப்பட்டு வந்தது.
வில்வித்தையில் விற்பனன் ஆகிய விதுரன் கெளரவர் பக்கத்தில் நின்று போர் புரிவானாயின் அருச்சுனன் உயிர் துறப்பது உறுதி. ஆகையால் கெளரவர் சபையில் வைத்து விதுரன் தன் வில்லை உடைக்குமாறு கண்ணன் சூழ்ச்சி செய்தான்.
இதனால் கெளரவர் சேனை மிகப்பெரும் பலத்தை இழந்தது.
இப்போது பீஷ்மர் போர்க்களத்தில் நிற்கிறார். உடம்பால் துரியோதனுக்காகப் போரிட்டாலும் பீஷ்மரின் மனம் பாண்டவரின் வெற்றிக்காகப் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தது.
பீஷ்மரின் இந்த பிரார்த்தனையே பாண்டவரின் வெற்றிக்கு மூல காரணம் எனலாம்.
அப்படியானால் நம்நாட்டில் நடக்கப் போகும் தேர்தல் களத்தில் யார் பீஷ்மர் என்று கேட்டால் பலரைக் காட்ட முடியும்.
கட்சி ஒன்றாகவும் ஆதரவு இன்னொன்றுக்காகவும் இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருப்பதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பீஷ்மர் களுக்குப் பஞ்சமேயில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfx1.html
மைத்திரியினால் கொடுக்கப்பட்ட 800 நியமனங்கள் ரத்து!
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 04:22.22 AM GMT ]
முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிரணியின் பொது வேட்பாளரருமான மைத்திரிபால சிறிசேனவினால் அவர் பதவி விலகும் முன் கொடுக்கப்பட்ட சுகாதார திணைக்கள நியமனங்கள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும் புதிதாக பதவியேற்றுள்ள சுகாதார அமைச்சர் நேற்று மீண்டும் 1800 பேருக்கு புதிதாக நியமனங்கள் வழங்கியுள்ளார்.
நேற்று நியமன கடிதம் மைத்திரி மூலம் பெற்றவர்கள் கடமைக்கு சென்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfx2.html
ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 04:42.14 AM GMT ]
ராஜபக்சவின் குடும்ப ஆட்சியின் மேல் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பை அறுவடை செய்வாரா சிறிசேன? இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
நகர்வுகள், திருப்பங்கள், திடீர் செய்திகள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கிடையே போரொன்று வெடித்திருப்பதையே நிரூபணம் செய்கின்றன. அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது அபேட்சகராக (வேட்பாளர்) வெளிப்பட்டிருப்பது மகிந்த ராஜபக்சவுக்கு பலத்த சவாலாகியுள்ளது.
இதுவரை ராஜபக்ச அரசிலிருந்து அமைச்சர்கள் மூவர், பிரதியமைச்சர் ஒருவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பதவி விலகியுள்ளனர். இன்னும் 20 பேர் அளவில் விலகிச் செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றுக்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நாள் டிசம்பர் 8 என்றும், வாக்கெடுப்பு 8 ஜனவரி 2015-ல் என்றும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆசிர்வாதத்துடன் அரசின் எதிரணி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராகக் களமிறங்குகிறார். இதனை அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, 21 நவம்பர் அன்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
சரியும் சீட்டுக்கட்டு வீடு
மைத்திரிபால சிறிசேனவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன்னதாகவே அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய அரச பொறுப்புகளிலிருந்து வெளியேறியிருந்தது. இன்னும் அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் பலரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பாக இருந்து கொண்டிருக்கிற பெருந்தலைகளும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகருக்கு ஆதரவளிக்கக் கூடுமான சூழ்நிலைகள் எழுந்துள்ளன.
ஜாதிக ஹெல உறுமய, பத்தொன்பது அம்சக் கோரிக்கைகள் கொண்ட அரசியலமைப்புத் திருத்தத்தை முன்மொழிந்திருந்தது. இந்தக் கோரிக்கைகள் மறுதலிக்கப்படுமானால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்றும், ராஜபக்சவைத் தோற்கடிப்போம் என்றும் அந்தக் கட்சி பகிரங்கமாகவே சவால் விடுத்திருந்தபோதும் அரசு பொருட்படுத்தியிருக்க வில்லை.
ஆகவே, முன்னர் கூறிய விதமாக ஜாதிக ஹெல உறுமய அரச பொறுப்புகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் வெளியேற்றம் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாதிருந்ததுடன், அனுமானத்துக்குக் கூட இடமளிக்காதிருந்தது. 1989-ல் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்த மைத்திரிபால சிறிசேன 1994-ல் அமைச்சராகப் பதவிவகிக்கத் தொடங்கியதுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்கவின் வலக்கரமாகவும் இருந்துவந்தவர். எனவேதான், சந்திரிக்கா பண்டாநாயக்க இவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் நியமித்திருந்தார்.
பொது அபேட்சகருக்கு ஆதரவு கிடைக்குமா?
இத்தகைய பின்னணிகளில் இடம்பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அரசியல் விமர்சனங்கள் பல தளங்களிலிருந்தும் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடுமளவு மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பது தெளிவானது. ஆனால், பொது அபேட்சகர் என்கிற அடிப்படையில் எதிர்க் கட்சிகளின் கூட்டு ஒருங்கிணைப்பு பலம்பெற்றதாகியுள்ளது.
இந்தக் கூட்டணியில் ஜாதிக ஹெல உறுமய, மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளும் இணைந்து கொள்ளக்கூடும். சிங்களக் கடும் போக்குவாதிகளின் ஆதிக்கமிக்க இந்தக் கட்சிகள் பொது அபேட்சகருக்கு ஆதரவாக இணையும்போது இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்துக்கான முஸ்தீபுகளாக இவை பார்க்கப்படுகின்றன.
20 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டாட்சி இத்தோடு முடிவுக்கு வந்துவிடக்கூடும் என்பதான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
பாராமுகம் கொண்ட சிறிசேன
இலங்கை அரசியலில் என்றென்றைக்குமானதாக இருந்து கொண்டிருக்கும் இனப் பிரச்சினையை இந்த மைத்திரிபால சிறிசேன தீர்த்துவைப்பார் என்பதற்கான எந்த உத்தரவாதமுமில்லை.
மைத்திரிபால சிறிசேன, கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தவரோ கிளர்ந்தெழுந்தவரோயில்லை. அநீதிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருட்படுத்தியவரும் இல்லை. ஆக, அரசிலிருந்து வெளியேறியவர் என்ற தகுதி கொண்டு சிறுபான்மை மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுத்தருவார் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.
தமிழ் மக்களின் செல்வாக்கைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம்களின் செல்வாக்கைப் பெற்றிருக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மைக் கட்சிகள் இதுவரை எந்த முடிவுகளையும் அறிவிக்கவில்லை. பொது அபேட்சகர்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை (தேர்தல் அறிக்கை) வெளியிட்டதன் பின்னதாக, அதன் அடிப்படையிலேயே தமது ஆதரவைத் தெரிவிப்பதென்று இவ்விரு சிறுபான்மைக் கட்சிகளும் தீர்மானம் எடுத்திருக்கின்றன. இந்தக் கட்சிகளின் தீர்மானங்கள் நிர்மாண சக்திகளாக விளங்க இடமிருக்கிறது.
�யுத்த வெற்றி' என்ற மாயை
ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு மேலும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில், தேர்தலுக்கு அறிவிப்பு செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசியல் கணக்கு பிழைத்துவிடுமோ (பிழையாகிவிடுமோ) என்கிற பதற்ற நிலையையே அடைந்துள்ளார்.
2009-ல் புலிகளை இல்லாதொழித்துப் பெற்ற �யுத்த வெற்றி�யைத் தேர்தல் வெற்றியாகச் சந்தைப்படுத்தியே இரண்டாவது முறையாக இவர் ஜனாதிபதியாகியிருந்தார்.
இன்னும் இரு ஆண்டுகளில் தமது பதவிக் காலம் முழுவதும் முடிவடைந்த பின்னர் இன்னொரு தேர்தலை எதிர்கொள்வதற்கு �யுத்த வெற்றி�யைச் சந்தைப்படுத்தும் தந்திரம் சிங்களப் பெரும்பான்மை மக்களிடையே எடுபடாதென்றும், அதற்குள்ளாக இந்த மாயை காலாவதியாகிவிடும் என்பதையும் அனு மானித்தே தேர்தலை அறிவித்தார்.
சட்டத் திருத்தம்
1978-ல் ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் பிரகடனம் செய்யப்பட்ட அரசியலமைப்பில் இருந்த �நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையியலிலும், �ஒருவர் இரு முறைகள் மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்� என்பதையும் �ஒருவர் எத்தனை முறையும் பதவி வகிக்கலாம்� என்பதாக மாற்றியமைத்து 18-வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார் மகிந்த ராஜபக்ச.
எனினும், திருத்தத்தை மொழிந்தவர் என்ற வகையில் அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி அபேட்சகராகக் களமிறங்க முடியாதென்ற சட்டச் சிக்கல்கள் எழுந்தன. இது குறித்த சட்டச் சிக்கல்களை ஆராய்ந்து ஆலோசனை தரும்படியாக நீதித்துறையை மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதுக்கு அமைய அதி உயர்நீதிமன்றத்தில் கூடிய பத்து நீதிபதிகள் அடங்கிய குழு, மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகராகக் களமிறங்க முடியும் என்பதாக ஒருமித்த அபிப்பிராயத்தை வெளியிட்டது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசானது சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதி (ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள்) மற்றும் சிறு கட்சிகளின் கூட்டணியே ஆகும். இதே விதமான அரசியல் கூட்டுச் சித்தாந்தமொன்றைப் பிரதியீடு செய்கின்ற நடவடிக்கையினூடாகவே, மகிந்த ராஜபக்சவின் குடும்பத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும் என்பது போன்ற வியூகத்துடன் அட்டவணைப்படுத்தப்பட்ட நிரல்களாகவே அரசியல் நிகழ்ச்சிகள் யாவும் அமைந்துள்ளன.
எதிர்க் கட்சி தலைமையில் உருவாகிக்கொண்டிருக்கின்ற கூட்டணியை இந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியுள்ளது. இதற்கமைய, எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சியானது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியையும், சிறு கட்சிகளையும் கொண்ட பலம் பொருந்திய கூட்டணியாக உருமாறிக்கொண்டிருக்கிறது.
சந்திரிகாவின் மறுபிரவேசம்
ஜனாதிபதிப் பதவியிலிருந்தும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் தூக்கி வீசப்பட்ட சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமைதியாகக் கழித்த அஞ்ஞாதவாசத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறார்.
தனது தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தோற்றுவிக்கப்பட்டு, பிரதமராக இருந்த தனது தாய் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் வளர்த்தெடுக்கப்பட்டு, தன்னை ஜனாதிபதியாக உயர்த்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தான் ஒழித்துக்கட்டப்பட்டதால் அதற்குக் காரணமான துரோகிகளைக் களையெடுக்கவும், பலிதீர்க்கவும் இப்படியொரு ஜனாதிபதித் தேர்தலுக்காகவே காத்திருந்தவர் போல உற்சாகமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார் சந்திரிக்கா பண்டாரநாயக்க!
இந்தப் பின்னணியில் சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு இது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மகிந்த ராஜபக்சவிடமிருந்து மீட்பதற்கான போராட்டம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டம்.
-தமிழ் ஹிந்து-
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfx3.html
Geen opmerkingen:
Een reactie posten