[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 03:50.20 AM GMT ]
வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டின் விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு விட்டாலும் அதன் ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றது. எங்களது அரசாங்கம் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களுடன் எதுவித தொடர்புகளையும் வைத்துக் கொள்வதில்லை.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் பயங்கரவாதிகளுடன் தொடர்பைக் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகள் வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கூட புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களைச் சந்தித்திருந்தார்.
இன்று நம் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீனாவும், இந்தியாவும் நிதியுதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் நிதி முழுவதும் வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கே செலவழிக்கப்படுகின்றது.
நாட்டின் அபிவிருத்தி என்று வரும்போது நாங்கள் பூகோள அமைவிடம் பார்த்து முடிவுகள் எடுப்பதில்லை. எங்களைப் பொறுத்தவரை அபிவிருத்திக்கு யார் உதவியளித்தாலும் அதனைப் பெற்றுக் கொள்வோம். அது சீனாவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் சஜின் வாஸ் குணவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlv1.html
புலித்தடையை நீக்குவதற்கு கே.பி.யின் மருமகனே வழக்குத் தாக்கல் செய்தார்!- பாராளுமன்றில் ஜே.வி.பி. எம்.பி
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 04:38.17 AM GMT ]
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான வெளிவிவகார அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே விஜித ஹேரத் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டதென்பது இலங்கையின் இறையாண்மையுடன் தொடர்புபட்டது.
அதனை உள்நாட்டு விவகாரம். எனவே ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வது நாட்டை காட்டிக்கொடுப்பதென்பது அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
புலிகளின் தடை நீக்கத்தை எதிர்த்து அந்த நீதிமன்றத்தில் வாதாடாது சும்மா இருந்து விட்டு இன்று கதை சொல்கின்றார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தில் புலிகளின் தடையை நீக்குவதற்கான வழக்கை தொடர்ந்தவர் யார்?
கே.பி. யின் அக்காவின் மகளை திருமணம் செய்த மாப்பிள்ளை தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
அத்தோடு புலித்தடை நீக்கத்தை அரசு தேர்தலுக்கான பிரசாரமாக பாவிக்கின்றது. தமக்கு சாதகமாக உள்ளதால் தடை நீக்கத்தை எதிர்க்கவில்லை. உள்நாட்டில் அமெரிக்காவுக்கு எதிராக பேசி தம்மை தேசப்பற்றாளர்கள் எனக்காட்டிக்கொள்ளும் அரசாங்கம்.
இரகசியமாக அமெரிக்காவின் முப்படைகளும் எமது பூமியை படை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது. இதுதான் அரசின் இரட்டை வேடம் தேசப்பற்று.
எமது வெளிவிவகார அமைச்சு கௌரவமிக்க அமைச்சாக இயங்கி வந்தது. ஆனால் இன்று எமது வெளிவிவகார அமைச்சு சொத்தி உபாலியின் கைகளில் சிக்கி கௌரவத்தை இழந்துள்ளது என்றும் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlv4.html
Geen opmerkingen:
Een reactie posten