தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 november 2014

ஜாதில ஹெல உறுமயவின் யோசனைக்கு அரசாங்கத்திடம் இருந்து எழுத்து மூலம் பதில்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மஹிந்த ராஜபக்சவும் எதிர்க்கிறார்!
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 03:19.19 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை எதிர்க்கிறார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போர் ஒன்று இடம்பெற்றமை காரணமாகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மஹிந்த ராஜபக்சவினால் ஒழிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்;ட ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறைமை ஆகியவற்றை அரசாங்கம் உரியவகையில் மாற்றம் செய்யும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlt2.html
ஜாதில ஹெல உறுமயவின் யோசனைக்கு அரசாங்கத்திடம் இருந்து எழுத்து மூலம் பதில்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 03:27.33 PM GMT ]
ஜாதிக ஹெல உறுமய, அரசாங்கத்துக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அரசாங்கத்திடம் இருந்து எழுத்து மூலம் பதில் கிடைத்துள்ளது
இந்தநிலையில் எதிர்வரும் 18ஆம் திகதியன்று அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் இருந்து கிடைத்துள்ள எழுத்துமூல பதில் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் வர்ணசிங்க கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தரப்பு தகவல்களின்படி, ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பில் திருத்தம் கொண்டு வர முடியாது.
எனினும் மஹிந்த ராஜபக்சவின் மூன்றாம் தவணைக்காலத்தின் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவுக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlt3.html

Geen opmerkingen:

Een reactie posten