தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 november 2014

வெளிநாட்டில் உள்ள காதலி ஆட்டையைப்போட: தமிழ் மகன் வீட்டில் தூக்கைப் போட்டார் !

வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் வசித்துவந்த தாயார் ஒருவர், காலையில் எழுந்து வந்தபோது தனது மகன் தூக்கில் தொங்குவதைப் பார்த்து பதறிப்போனார். 30 வருடங்களாக பாலும் தேனூம் ஊட்டி வளர்த்த மகன். இவருக்கு பெற்றோர் பெரிதாக தெரியவில்லை. வெளிநாட்டில் வசிக்கும் காதலி தான் பெரிதாக இருந்திருக்கிறார்போலும். டிசாந்த் மொரிஸ் என்னும் 30 வயது இளைஞரே மேற்படி தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட நபர் ஆவார். கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதற்கு முன்னைய நாள் வெளிநாட்டில் உள்ள காதலியோடு முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்றும், அதன் பின்னரே அவர் தூங்கச் சென்றதாகவும் தாயார் கண்ணிர் மல்க தெரிவித்துள்ளார்.
வீட்டின் தாவரப் பகுதியில் கட்டப்பட்டிருந்த உடுப்பு போடுவதற்கான கொடி கயிற்றினால் தூக்கிட்டு, மேற்படி இவர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார். வவுனியா பொலிசார் இதுதொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். இக்கால இளைஞர்களுக்கு பேஸ் புக், சட்டிங், தொலைபேசி காதல் என்று காதல் தான் கண்ணை மறைத்து நிற்கிறது. சிறிய சிறிய பிரச்சனைக்கு எல்லாம் அவர்கள் தற்கொலைதான் முடிவு என்று எண்ணும் அளவு நிலைமை மாறிப்போய் உள்ளது. வெளிநாட்டில் உள்ள காதலி என்ன, இவரை நினைத்து காலம் முழுக்க ஏங்கிக் காத்திருப்பாரா ? அடுத்த மாதமே வேறு ஒரு பையனைப் பார்த்து திருமணம் செய்துகொண்டு சென்றாலும் செல்லலாம். ஆனால் இதுவரை காலமும் பாலூட்டி வளர்த்த தாய் என்ன செய்வார். இன்று வாய்கரிசி தான் போட முடியும் !
http://www.athirvu.com/newsdetail/1502.html

Geen opmerkingen:

Een reactie posten