தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 november 2014

தமிழர் பிரச்சினையை தீர்க்கக்கூடிய பொதுவேட்பாளருக்கு ஆதரவு!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு


பெரும்பான்மையினருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சிறுபான்மையினருக்கு சலுகை வழங்க வேண்டும்!- பொதுபல சேனா
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 12:13.33 AM GMT ]
சிங்கள பௌத்த பெரும்பான்மையினருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலேயே சிறுபான்மை மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சி தூர நோக்குடன் செயற்பட வேண்டும்.
அதுரலிய ரத்ன தேரரை அரசியலுக்கு அழைத்துவர நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
2004ம் ஆண்டில் ரதன தேரருக்கு வாக்களித்தோம் என்பதனை விடவும் வாக்குகளை காணிக்கையாக்கினோம் எனலாம்.
எங்களது இளமைக்காலத்தை அர்ப்பணித்தே அவர்களை அரசியலில் ஈடுபடுத்தினோம்.
இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுக்கääஅதற்காக குரல் கொடுக்கவே இவர்களை அரசியலில் களமிறக்கினோம்.
யார் முஸ்லிம் கடும்போக்குவாதம் பற்றி பேசியது. யார் மத மாற்றம் பற்றிய சட்ட மூலத்தை கொண்டு வந்தது.
அவ்வாறான ஓர் பின்னணியில் நிர்மால் ரஞ்சித்துடன் ரத்ன தேரருக்கு உட்கார முடியுமா?
அரசியலமைப்பை ரத்து செய்யுமாறு மாதுலுவாவே சோபித தேரர் கோருகின்றார். அதுரலிய ரதன தேரர் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமென கோருகின்றார்.
என்ன இவர்கள் செய்கின்றார்கள், அவரவருக்கு பைத்தியம், விளையாட இடமளிக்க முடியாது.
அனைவரும் ஜனாதிபதி குடும்ப அரசியல் பற்றி பேசுகின்றனர். ஜனாதிபதி தேர்தல் பற்றி அறிவிக்கப்பட்டது முதல் மிருகங்களைப் போன்று அங்குமிங்கும் ஓடித் திரிகின்றார்கள்.
நாம் ஒன்றை மட்டுமே கேட்கின்றோம்.  பௌத்த அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டமைந்த அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இந்தக் காலத்தில் எம்மையும் பணம் கொடுத்து மடக்கப் பார்க்கின்றார்கள். இந்த நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எமக்கு சிறந்த மக்கள் சக்தி காணப்படுகின்றது. தேர்தல்களின் போது மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கருதுகின்றோம்.
அதுரலிய ரத்ன தேரர் அரசியல் அமைப்பை மாற்றுவதற்கு முன்னதாக பௌத்த மதக் கொள்கைகள் கோட்பாடுகள் குறிப்பாக தம்மபதம் பற்றி தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டுமென ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnu0.html


தமிழர் பிரச்சினையை தீர்க்கக்கூடிய பொதுவேட்பாளருக்கு ஆதரவு!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 12:37.27 AM GMT ]
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய பொதுவேட்பாளர் ஒருவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 8வது சிரார்த்த தின நிகழ்வுகள் நேற்று நடைபெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றல், காணி சுவீகரிப்பை நிறுத்தல், வலிகாமம் வடக்கு - சம்பூர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதிகளை மீளக்குடியேற்றல் உட்பட்ட விடயங்களில் உறுதியை வழங்கக்கூடிய பொதுவேட்பாளர் ஒருவருக்கே கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று சுரேஸ் குறிப்பிட்டார்.
அந்த வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவாக, ரணில் விக்கிரமசிங்கவாக அல்லது கரு ஜெயசூரியவாக இருக்கலாம். எவரானாலும் தமிழ் மக்களுக்கு இந்த உறுதிமொழியை வழங்கவேண்டும் என்றும் சுரேஸ் தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியதாகவும் சுரேஸ் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnu2.html



Geen opmerkingen:

Een reactie posten