தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 november 2014

வட மாகாணத்திற்கான பயணத் தடை அரசியலமைப்புக்கு முரணானது: கே. வி தவராசா

தேர்தலுக்கு முன் அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடு
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 10:20.58 AM GMT ]
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்றை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக கபே அமைப்பு அறிவித்துள்ளது.
அவ்வமைப்பு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பதுளை, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தியதாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனையடுத்து, ஏனைய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரும்.
இந்த பாரிய செயற்திட்டத்தை ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் அமைப்பு என்பனவற்றுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfv4.html
சிறுமியை பலியெடுத்த டிப்பர் வாகனம்: மட்டக்ளப்பில் பரிதாபம்
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 10:56.38 AM GMT ]
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
தனது வீட்டிலிருந்து கிழங்கு வாங்குவதற்காக கடைக்குச் சென்ற சிறுமி மீது டிப்பர் வாகனம் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய ஜெயசித்ரா என்ற சிறுமியே இந்த சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
டிப்பர் சாரதி ஏறாவூர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfv5.html

வட மாகாணத்திற்கான பயணத் தடை அரசியலமைப்புக்கு முரணானது: கே. வி தவராசா
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 01:25.44 PM GMT ]
இலங்கை அரசாங்கம் வடமாகணத்திற்கான பயணத் தடையினை விதித்துள்ளமையானது அரசியலமைப்புக்கு முரணானதாக அமைந்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரனி கே. வி தவராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு வட மாகாணத்திற்கான பயணத் தடையை விதித்தது மட்டுமல்லாமல், ஒருவர் ஆறு மாத கால பகுதிக்குள் இலங்கையில் இல்லாத பட்சத்தில் அவருடைய தேசிய அடையாள அட்டை வலுவற்றதாகிவிடும் என இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக லங்காசிறி வானொலிக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரனி கே. வி தவராசா,
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfwz.html

Geen opmerkingen:

Een reactie posten