தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 november 2014

மாகாணசபை திறம்பட செயலாற்ற 13ம் திருத்தச் சட்டம் பலமாக உள்ளதா?: சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி கேள்வி!



வறுமைப்பட்ட சிறுநீரக நோயாளிகளை புறக்கணிக்கும் அரசாங்க வைத்தியசாலைகள்!: வினோதலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 05:31.16 PM GMT ]
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட வறிய மக்கள் அரசாங்க வைத்தியசாலைக்கு செல்லும் புறக்கணிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வினோதலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், தனியார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்து கொண்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அரசாங்க வைத்தியசாலைக்கு செல்லும் போது அந்த நோயாளிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலை மாற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்த குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் வினோதலிங்கம் முன் வைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkq0.html
மாகாணசபை திறம்பட செயலாற்ற 13ம் திருத்தச் சட்டம் பலமாக உள்ளதா?: சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி கேள்வி
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 05:15.37 PM GMT ]
மாகாண சபையை திறம்பட வழி நடத்திச் செல்ல 13ம் திருத்தச் சட்டம் பலமாக உள்ளதா என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனப்பிரச்சினைக்காக மாகாணசபை முறைமை தீர்வாக அமையுமானால் மாகாண சபைக்குரித்தான அதிகாரங்கள் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, சுரேஸ் பிரேமசந்திரன் இந்த கேள்விகளை எழுப்பினார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkqz.html

Geen opmerkingen:

Een reactie posten