[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 06:01.56 AM GMT ]
இந்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஹரின் பெர்ணான்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அது வெற்றியளித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள அரசியல் பயணத்தின்படி மகிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்துவதே செய்ய வேண்டியது எனவும் பின்னர் தான் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக ஹரின் பெர்ணான்டோ தன்னிடம் கூறியதாகவும் குட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் முதலில் தன்னை அரசாங்கத்தில் இணையுமாறு ஹரின் கூறியதாகவும் குட்டியாராச்சி கூறியுள்ளார்.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajvz.html
எதிரணியுடன் இணைந்தார் அமைச்சர் ரிஷாத்! மைத்திரிக்கு ஆதரவு
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 06:05.08 AM GMT ]
தீர்மானம் ஒன்றை தான் எடுக்கும் முன்னர் எமது பிரதேச மக்களின் கருத்தை அறியும் நோக்கில் வவுனியா மற்றும் மதவாச்சி பிரதேசங்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா ஸ்ரீ போதிதக்ஷினாராம விகாரையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிற்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்களின் நிலைப்பாடுகளுக்கு அமைய தனது தீர்மானம் இருக்கும் என கூறியுள்ளார்.
எதிரணியுடன் இணைந்தார் அமைச்சர் ரிஷாத்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியூதின், பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி உள்ளிட்ட குழுவினர் தற்போது எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளின் கூட்டணியில் பங்கேற்கும் நோக்கில் அவர்கள் எதிர்கட்சி அலுவலகம் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் அவர்கள் தங்களது அறிவிப்பை வெளியிடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
வவுனியா ஸ்ரீ போதிதக்ஷினாராம விகாரையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிற்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்களின் நிலைப்பாடுகளுக்கு அமைய தனது தீர்மானம் இருக்கும் என கூறியுள்ளார்.
எதிரணியுடன் இணைந்தார் அமைச்சர் ரிஷாத்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியூதின், பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி உள்ளிட்ட குழுவினர் தற்போது எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளின் கூட்டணியில் பங்கேற்கும் நோக்கில் அவர்கள் எதிர்கட்சி அலுவலகம் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் அவர்கள் தங்களது அறிவிப்பை வெளியிடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajv0.html
ஹக்கீம் இறுதியில் மைத்திரியை தெரிவு செய்தார்?
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 06:12.20 AM GMT ]
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரளிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸில் இரு வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்த நெருக்கடி காரணமாக இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரண்டு தரப்பினரின் பெரும்பான்மையானவர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை தெரிவு செய்ய ஹக்கீம் தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில் இம்முறை தேர்தலில் ராஜபக்ஷவினருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு தலைவணங்கி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பொது எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க ஹக்கீம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நெருக்கடி காரணமாக இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரண்டு தரப்பினரின் பெரும்பான்மையானவர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை தெரிவு செய்ய ஹக்கீம் தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில் இம்முறை தேர்தலில் ராஜபக்ஷவினருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு தலைவணங்கி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பொது எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க ஹக்கீம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
: http://www.newstamilwin.com/show-RUmszCRWKajv1.html
வாகன விபத்தில் ஒருவர் பலி!
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 06:25.54 AM GMT ]
கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதனால் இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்திற்கு காரணமான பஸ் சாரதியை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்திற்கு காரணமான பஸ் சாரதியை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajv2.html
கடற்படையின் விபரீத செயலே மீனவரின் உயிரைப் பறித்தது! எழுவைதீவு மீனவர்கள் விசனம்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 06:29.26 AM GMT ]
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினருடன் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் நேரடியாக எழுவைதீவுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் உயிர் நீத்த மீனவரின் மரணக் கிரியைகளுக்காக ஒரு தொகை நிதியுதவியினையும் குடும்பத்தாரிடம் வழங்கி வைத்தனர்.
பின்னர் மரணம் சம்பவிப்பு தொடர்பாக மீனவர்கள் தெரிவித்த கூற்றுக்களின் பிரகாரம், உயிரிழந்த அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசன் மனைவியை இழந்த நிலையிலும் தன் பிள்ளைகள் அறுவரையும் கடின உழைப்பால் அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளார்.
அது மட்டுமல்ல இவருடைய சகோதரர்களில் ஒருவர் எழுவைதீவில் 22 பேர் கடலில் கொல்லப்பட்டபோது அதில் கொலையுண்டார்.
மற்றவர் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். அதன் பின்னர் தான் பெற்ற பெண் பிள்ளைகள் நால்வருக்குமான வரனைத் தேடுவதற்காக தன் முதுமையை பொருட்படுத்தாமல் அயராது பனியிலும் மழையிலும் புயலிலும் கடலன்னையையே தொடர்ச்சியாக வலம் வந்த பொறுப்பு வாய்ந்த சுயநலமற்ற, சோர்வடையா ஓர் கடற்றொழிலாளராக எழுவைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் அமரர் அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசனைப் பார்க்கிறோம்.
சம்பவம் நடந்த 19ம் திகதி அதிகாலை 5 மணியளவில் காரைநகருக்கும் எழுவைதீவுக்கும் இடையில் இருக்கும் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் கடற்படையின் படகு மோதியதில் கடுமையான காயங்களுக்குள்ளாகியிருந்தார்.
அவரை மோதிய கடற்படைப் படகும் தப்பிச் சென்று விட்டது. கடுமையான காயங்களோடு படகும் சேதமடைந்த நிலையில் தன் கழுத்திலே தொங்கவிடப்பட்ட கைத்தொலைபேசி வாயிலாக தன் நிலைமையை தன்னுடைய பிள்ளைகளுக்குத் தெரிவித்த வேளை, சக மீனவர்களின் துணையோடு கரையேற்றப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது அவரின் ஆத்மா தன் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு பற்றிய சிந்தனையோடு அவர் உடலை விட்டு நீங்கியது.
கடற்றொழிலையே ஜீவாதாரமாக கொண்டு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளும் தீவக வாழ் மீனவர் சமூகத்துக்கு அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசனின் இழப்பு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
யுத்தம் முடிவுற்று 6 வருடங்களைக் கடந்த நிலையில் கூட மீனவர்கள் பயமின்றி தொழில் செய்ய முடியாத நிலமை தோன்றியிருக்கின்றது. இதற்கு சான்றாக அப்பாவி மீனவரின் மரணம் சான்றாக அமைகிறது.
முறையற்ற விதத்தில் தம் சாகசங்களை நிகழ்த்த கடலில் தம் உடலை வருத்தி பிழைக்கும் ஏழை மீனவர்களா? கடற்படையினர்க்கு கிடைத்தது.
சம்பவம் நடந்த சமயத்தில் காயமடைந்த அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசனை கடற்படையினர் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லத்தவறி விட்டனர். என்பதும் எமக்கு மன வேதனையைத் தருகின்றது.
அபிவிருத்தி எனும் கோசம் போடுபவர்கள் தீவகத்தின் அபிவிருத்தியில் எதைச் செய்தார்கள். ஒழுங்கான முறையில் போக்குவரத்து சீராக இருந்திருந்தால் நாமே அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசனின் இழப்பைத் தவிர்த்திருப்போம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோரை கடற்படையினர் பின்தொடர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajv3.html
மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழருக்கு ஏமாற்றம் கிடையாது
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 06:40.47 AM GMT ]
இதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நூறு நாளில் புதிய தேசம் என்ற தொனிப்பொருளினை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்கள் எதுவும் இடம்பெறாமை பலத்த ஏமாற்றத்தைத் தருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழர்களின் விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கும் என்று நாங்கள் யாரேனும் எதிர்பார்த்திருந்தால் தான் அது ஏமாற்றமாக இருந்திருக்கும்.
ஆனால் எங்களைப் பொறுத்தவரை மைத்திரியும் மகிந்தவும் உடலால் வேறுபட்டவர்களே அன்றி பேரின வாதத்தால் - பெளத்த மத வாதத்தால் ஒன்றுபட்டவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆக, நடக்கப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் பிரச்சினையை எந்தத் தரப்பும் முன்னிலைப்படுத்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்க முடியாது.
அவ்வாறான எதிர்பார்ப்புகள் முன்பும் நடந்த வரலாறும் இல்லை.
எனவே தமிழர்களைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை தேர்தல் விஞ்ஞாபனங்கள் தீர்மானிக்க மாட்டாது.
மாறாக நாட்டின் ஜனநாயகப் பண்பை ஓரளவேனும் காப்பாற்றக் கூடியவர் யார் என்பதைப் பொறுத்தே தமிழர்களின் வாக்களிப்பு அமையும், அமைய வேண்டும்.
எனவே மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்து விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை விடுவதானது உள் நோக்கம் கொண்டதாகவே இருக்கும்.
அதாவது மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்து விட்டதெனக் கூறுவதனூடாக, மைத்திரியை தமிழர்கள் ஆதரிக்கலாகாது என்ற செய்தி மறைமுகமாகக் கூறப்படுகிறது.
தமிழர்களைப் பொறுத்தவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தத்தம் அறிவியலுக்கு ஏற்ற தீர்மானத்தை எடுப்பர். இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலையிடாக் கொள்கையைப் பின்பற்றுவதே பொருத்தமானது.
எனினும் நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருநிலைத் தன்மை இருப்பதைக் காணமுடிகிறது.
அதாவது கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு தரப்பினர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இன்னொரு தரப்பினர் மகிந்த ராஜபக்வை ஆதரிக்க வேண்டுமென நிற்கின்றனர் என்பது புலனாகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கக் கூடிய இரட்டைத் தன்மை நிலைமையை, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வெளியிடும் அறிக்கைகளும் கருத்துக்களும் சான்றுப்படுத்தி நிற்கின்றன.
சுகாதார அமைச்சராக இருந்த போது மைத்திரிபால சிறிசேன நமக்குச் செய்த உதவியை மறக்கலாகாது என்கிறார் வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவர்.
அதேநேரம் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளதென்கிறார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
ஆக, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒரு நிதானமான போக்கு காணப்படவில்லை என்பது உறுதியாகிறது.
கட்சி என்பதைக் கடந்து தனி மனித விருப்பு வெறுப்புக்கள் மேலோங்கும் போது ஏகமனதான முடிவிற்கு வருவது கடினமானது என்ற உண்மையின் அடிப்படையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தாமாகவே சிந்தித்து வாக்களிப்பர் என்று கூறுவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமையாக இருக்கும்.
: http://www.newstamilwin.com/show-RUmszCRWKajv4.html
Geen opmerkingen:
Een reactie posten