தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

நாட்டில் 100 லட்சம் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்: மைத்திரிபால சிறிசேன!



தொடரும் சீரற்ற காலநிலையால் உழவனூரில் 210 குடும்பங்கள் இடம்பெயர்வு
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 05:48.42 PM GMT ]
அண்மைய நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வட கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றனர்.
இன்று காலை மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் தருமபுரம் உழவனூர், தம்பிராசபுரம், நாதன் திட்டம் ஆகிய கிராமங்களில் வாழும் 210 குடும்பங்களைச் சேர்ந்த 762 பேர் தற்போது இடம்பெயர்ந்து தம்பிராசபுரம் பாடசாலைக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். இதுவரை அனர்த்த முகாமைத்துவப்பிரிவினரால் பொருட்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடுமையான குளிர் நிலவுவதால் சிறு குழந்தைகள் கர்ப்பிணித்தாய்மார், முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உறங்குவதற்கு பாய் கூட இல்லாத நிலையில் மக்கள் தங்கியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafu3.html
நாட்டில் 100 லட்சம் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்: மைத்திரிபால சிறிசேன
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 05:39.11 PM GMT ]
நாட்டில் 100 லட்சம் மக்கள் வறுமையில் வாடி வருவதாக எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் மக்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதார பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஹக்மன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படும்.
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை மேம்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இந்த அரசாங்கம் மக்களின் பொருளாதாரம் பற்றி கவனம் செலுத்தத் தவறியுள்ளது.
100 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் காலத்தில் மட்டும் நிவாரணங்களை வழங்க உத்தேசித்துள்ளார்.
அபிவிருத்திக்காக சகல விடயங்களும் அர்ப்பணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் உண்மையில் அவ்வாறான நிலைமை கிடையாது.
அபிவிருத்தி என்று பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும் பணம் முழுவதும் ஆட்சியாளர்களின் பொக்கட்களுக்கே சென்றது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafu2.html

Geen opmerkingen:

Een reactie posten