[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 03:02.35 AM GMT ]
இந்த அழைப்பை அமைச்சர் டலஸ் அழகப்பெரும நிராகரித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் என்று மைத்திரிபால தம்மை தொடர்ந்தும் அழைத்துக்கொள்கிறார்.
இந்தநிலையில் அவர் எதிரணி வேட்பாளராக நினைத்து எவ்வாறு ஜனாதிபதியை விவாதத்துக்கு அழைக்கிறார் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மைத்திரி, ஜனாதிபதியை சந்திக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் அழகப்பெரும இந்த தகவலை வெளியிட்டார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRWKaju2.html#sthash.1CAqK8Qb.dpufஇதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் என்று மைத்திரிபால தம்மை தொடர்ந்தும் அழைத்துக்கொள்கிறார்.
இந்தநிலையில் அவர் எதிரணி வேட்பாளராக நினைத்து எவ்வாறு ஜனாதிபதியை விவாதத்துக்கு அழைக்கிறார் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மைத்திரி, ஜனாதிபதியை சந்திக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் அழகப்பெரும இந்த தகவலை வெளியிட்டார்.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் நாடு அபிவிருத்தி அடையவில்லை: அர்ஜூன ரணதுங்க
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 03:09.33 AM GMT ]
நிட்டம்புவ கலகெடிஹென குருந்துவத்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டு கால போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதாகும். போர் நிறைவின் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்தி எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவ்வாறான அபிவிருத்தி எதுவும் இடம்பெறவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களை ஏமாற்றி தனது பதவிக் காலத்தை நீடித்துக்கொள்ளவே முயற்சிக்கின்றார். அரசாங்கத்தினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் முற்று முழுதாக லஞ்ச வரவு செலவுத் திட்டமாகும்.
தேர்தல் காலத்திலேயே எரிபொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைவடையும். பாதைகள் சீரமைக்கப்படுவது நல்ல விடயம் எனினும் பாதைகள் அமைக்கும் பணிகளில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
போர் நிறைவடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சிற்கான செலவுகள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாற்றத்தைக் கொண்டு வர ஆட்சி மாற்றமொன்று அவசியம் என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRWKaju3.html#sthash.E4Vfr5Nu.dpuf30 ஆண்டு கால போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதாகும். போர் நிறைவின் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்தி எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவ்வாறான அபிவிருத்தி எதுவும் இடம்பெறவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களை ஏமாற்றி தனது பதவிக் காலத்தை நீடித்துக்கொள்ளவே முயற்சிக்கின்றார். அரசாங்கத்தினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் முற்று முழுதாக லஞ்ச வரவு செலவுத் திட்டமாகும்.
தேர்தல் காலத்திலேயே எரிபொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைவடையும். பாதைகள் சீரமைக்கப்படுவது நல்ல விடயம் எனினும் பாதைகள் அமைக்கும் பணிகளில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
போர் நிறைவடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சிற்கான செலவுகள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாற்றத்தைக் கொண்டு வர ஆட்சி மாற்றமொன்று அவசியம் என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
யாழில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 03:33.17 AM GMT ]
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த நிஷாந்தினி (வயது 24) என்பவரே வாள் வெட்டுக்கு இலக்காகி உள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் இவர், இன்று காலை கடமைக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
இவ்வாறு சென்றவரை யாழ். நகர்ப்பகுதியில் வைத்து வாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
படுகாயமடைந்தவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
படுகாயமடைந்த பெண் திருமணம் செய்து கடந்த 5 வருடங்களாக கணவனைப் பிரிந்து வாழ்கின்றார்.
குடும்பத்தகராற்றின் காரணமாகவே வாள்வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் அப்பெண்ணின் கணவனே வாளால் வெட்டிக்காயப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRWKaju4.html#sthash.aYMmXkQ3.dpufயாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் இவர், இன்று காலை கடமைக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
இவ்வாறு சென்றவரை யாழ். நகர்ப்பகுதியில் வைத்து வாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
படுகாயமடைந்தவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
படுகாயமடைந்த பெண் திருமணம் செய்து கடந்த 5 வருடங்களாக கணவனைப் பிரிந்து வாழ்கின்றார்.
குடும்பத்தகராற்றின் காரணமாகவே வாள்வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் அப்பெண்ணின் கணவனே வாளால் வெட்டிக்காயப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு அணை உடைப்பெடுப்பு! மூதூர் நீரில் மூழ்கும் அபாயம்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 03:47.44 AM GMT ]
சேருவில பிரதேசத்திலுள்ள வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் தாங்கி என்னும் பகுதியிலேயே பாதுகாப்பு அணை நேற்றிரவு அல்லது இன்று அதிகாலை வேளையில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும் சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பாரிய அணையொன்று சுமார் 60 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பாதுகாப்பு அணையே தற்போது உடைப்பெடுத்துள்ளது. இதனால் கங்குவேலி, படுகாடு. நிலாபொளை பிரதேச வயல் நிலங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கையில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்ததன் விளைவாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKaju5.html
வெள்ளக்காடாகியுள்ள கிழக்கு மாகாணம்: மக்கள் பாடசாலைகளில் தஞ்சம்- 3,874 வீடுகள் பாதிப்பு
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 04:47.08 AM GMT ]
பிரதான போக்குவரத்துபாதைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள களுதாவளை, செட்டியாளையம், தேற்றாத்தீவு, எருவில், மாங்காடு, போன்ற பல கிராமங்களிலும், போரதீவுப்பற்று பிரதேசத்தில் கோவில்போரதீவு, முனைத்தீவு, பட்டாபுரம், பழுகாமம், வேத்துச்சேனை, றாணமடு. போன்ற கிராமங்கிலும், பட்டிப்பளை பிரதேசத்தின் அம்பிளாந்துறை, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, மகிழடித்தீவு போன்ற அனைத்து கிராமங்களும் நீரில் மூழ்கி காணப்படுவதனால் உடனடியாக முகத்துவாரம் வெட்டும் நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் மேற்கொண்டு வருகின்றார்.
இதேபோன்று அம்பாறை மாவட்டங்களில் உள்ள துறைவந்தியமேடு, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை, பாண்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை மாவட்டங்களில் தற்போது பெய்துவரும் கடும் மழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அபாய நிலை தோன்றியுள்ளது.
தொடர்ந்து மூன்று தினங்களுக்கும் மேலாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் கடும் மழை பெய்துவருவதுடன் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டு மக்கள் தங்களது இருப்பிடங்களில் தங்கி வாழமுடியாமல் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களுக்காக அனைத்து தேவைகளையும் பிரதேச செயலாளர்கள் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் வெள்ளத்தால் இதுவரை 3,874 வீடுகள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரையில் 981 வீடுகள் முழுவளவிலும் 3,874 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 110 வீடுகள் முழுவளவிலும் 149 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 548 வீடுகள் முழுவளவிலும் 1,333 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகள் முழுவளவில் சேதமடைந்துள்ளன.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 241 முழுவளவிலும் 329 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. எறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 58 வீடுகள் முழுவளவிலும் 757 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 11 வீடுகள் முழுவளவிலும் 1,239 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுவளவில் சேதமடைந்துள்ளது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகள் முழுவளவிலும் 42 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகதாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது!
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மூன்று நாட்களாக பெய்து வருகின்ற மழையினால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தாழ்வான பல கிராமங்கள் மழை நீரினால் மூள்கியுள்ளன. குறிப்பாக மண்டூர் பிரதேசத்தை உள்ளடக்கிய கிராமங்களான மண்டூர் வேத்துச்சேனை, தம்பலவத்தை, மருங்கையடிப்பூவல், சங்கர்புரம் கணேசபுரம், வெல்லாவெளி, போன்ற கிராமங்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
நேற்று இரவு தொடச்சியாக பெய்த மழையினால் மருங்கையடிப்பூவல் கிராமத்தில் உள்ள தாழ்வான பல வீடுகள் நீரில் மூள்கியுள்ளன. வீதியால் பெருக்கேடுத்த வெள்ள நீர் கட்டுக்கடங்காது வீதிகளை உடைத்து பல வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளது.
இது தொடர்பாக பிரதவாசிகள் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் நிலையம், கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோருக்கு அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்கு பிரதேச செயலகத்திலிருந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வருகைதந்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவுகள் சமைக்கப்பட்டு பாலர் பாடசாலையில் வைத்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் குறிப்பிட்டிருந்தார். மண்டூரில் இருந்து வெல்லாவெளியினுடாக செல்லும் பிரதான கோசுகையினுடாக வெள்ள நீர் பெருக்கேடுத்து செல்வதால் மக்கள் போக்குவரத்தில் ஈடுபடமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு மண்டூரில் இருந்து தம்பலவத்தையீனூடக செல்லும் பாலத்தடி மதகுகினூடகவும் நீர் பாய்ந்து செல்வதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி இரு இடங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்தோடு மண்டூர் குருமன்வெளி ஊடான படகுச் சேவையும் அதிக காற்று மழையினால் தாமதமாகவே நடைபெறுகின்றது. இதனால் மக்களின் போக்குவரத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர் மழையினால் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் வீட்டுத்தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பல வீதிகளில் போக்குவத்து செய்ய முடியாத நிலையில் வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளது. தொடந்து மழை பெய்யுமானால் பல கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலமை ஏற்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய மழை வாககேரியில் பதிவு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (22) காலை. 8.30 மணிவரையான கடந்த 24 மணிநேரத்துக்குள், வாககேரியில் அதிகளவு மழை வீழ்ச்சியாக 145.2 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.
இதன்படி தும்பங்கேணி 104.7 மி.மீ, மட்டக்களப்பு 65.4 மி.மீ, நவகிரி 19.0 மி.மீ, வாகரை 72.2 மி.மீ, உன்னிச்சை 51.0 மி.மீ, றூகம் 64.4 மி.மீ, மயிலம்பாவெளி 59.8 மி.மீ, பாசிக்குடா 107.3 மி.மீ என மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு நகரம், தாழங்குடா மற்றும் புதுக்குடியிருப்பு மற்றும் கிரான்குளம் பகுதிகளில் குடியிருப்பகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKaju6.html
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?: மலையக மக்கள் முன்னணிக்குள் மோதல்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 05:38.00 AM GMT ]
கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் முடிவின்றி நிறைவு பெற்றுள்ளது.
தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வி.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவியும் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் மனைவியுமான சாந்தினி சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின் தோட்ட தொழிற்சங்க தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், அமைப்பாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற்ற மண்டபத்திலிருந்து வெளியேறிய மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவுத் தலைவர் வி.இராதாகிருஷ்ணனுக்கு, சாந்தினி சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் எதிர்ப்பினை வெளியிடும் வகையில் கோஷமெழுப்பினர்.
சாந்தினி சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு வெளியிடும் வேளையில் இலங்கை தொழிலாளா் காங்கிரஸின் ஆதரவாளா்கள் அவ்விடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி
மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு மைத்திரிக்கு!
மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு மைத்திரிக்கு!
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajvy.html
Geen opmerkingen:
Een reactie posten