தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

உண்மையான அறிக்கையை கொடுத்து ஜனாதிபதியிடம் மீண்டும் அடிவாங்க முடியாது: அரச புலனாய்வு சேவை தலைவர்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை நியாயமாக நடத்த வலியுறுத்தி பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்!
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 06:46.00 AM GMT ]
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் நடத்துமாறு வலியுறுத்தி பிரான்ஸில் நாளை செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டம் பாரிஸில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு எதிரில் நடைபெறவுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கையில் மேற்கொள்ளப்படும் தேர்தல் வன்முறைகளுக்கு எதிராக ராஜபக்ச அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் வெளியிடப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRWKajv5.html#sthash.vH2grUj9.dpuf

மூட நம்பிக்கையில் மைத்திரிபாலவும் விதிவிலக்கல்ல
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 07:18.07 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூட நம்பிக்கை பழக்கம் குறித்து பரவலாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது தெரியவந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது கையில் வைத்திருப்பது போன்ற தங்கத்திலான வசிய பொருள் ஒன்றை வைத்திருந்ததை காணமுடிந்தது.
வஜ்ர என்ற இந்த தங்கத்தினால் ஆன வசிய எந்திரம் மூலம் மக்களை தம்வசம் ஈர்க்க முடியும் என நம்பிக்கை உள்ளது.
எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேன ஜோதிடர்கள் மற்றும் குறி சொல்பவர்கள் மீது தனக்கு நம்பிக்கையில்லை என பகிரங்கமாக கூறியிருந்தார்.
எனினும் பொது வேட்பாளரும் மந்திர சக்திகளை நம்புகிறார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRWKajv6.html#sthash.HFQkMbAQ.dpuf

தபால் மூல வாக்களிப்பு நாளை! எங்கே மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம்: மங்கள கேள்வி
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 07:43.18 AM GMT ]
தபால் மூல வாக்களிப்புகள் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை கேகனதுர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே இதனை கூறியுள்ளார்.
5 லட்சத்து 47 ஆயிரம் தபால் வாக்காளர்கள் நாளையும் நாளை மறுதினமும் வாக்களிக்க உள்ள நிலையில் மகிந்தவினால் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட முடியாது போயுள்ளது.
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் வெடித்துள்ளதன் காரணமாகவே அவரால், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட முடியவில்லை.
தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்காது மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க கூடியளவில் அரசாங்க ஊழியர்கள் மந்த புத்தியுள்ளவர்கள் என ராஜபக்ஷவினர் நினைக்கின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடவிருந்ததுடன் அது திடீரென ஒத்திவைக்கப்பட்டதுடன் 26 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRWKajv7.html#sthash.dVTCvC02.dpuf

யாழில் மறைத்தும் மறையாத கட்டவுட்டுகள்!
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 07:54.59 AM GMT ]
வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் சட்டவிதிகளின் படி முறையற்ற பாதாகைகள் நீக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கும், ஆளுநர் அலுவலகத்திற்கும் அருகில் உள்ள பதாதைகள் அகற்றப்பட்டும், அகற்றப்படாமலும் மறைக்கப்பட்டுள்ளன.
இதில் வேடிக்கை என்னவெனில் ஜனாதிபதி மகிந்த ராஜபகசைவின் படங்கள் மறைக்கப்பட்டுள்ளதோடு, அவர் யாழ் போதனா வைத்தியசாலையைத் திறந்து வைத்த படத்தில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நிற்பதனை எல்லோரும் கூர்ந்து கவனித்துச் செல்வதனை அவதானிக்க முடிகின்றது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRWKajwy.html#sthash.NGPwiMpi.dpuf

மஹிந்தவின் ஊழலை நிறுத்துவோம்: மைத்திரிபால
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 08:23.08 AM GMT ]
இந்த நாட்டில் பணக்காரர்களாக மாத்திரம் ஒரு அரசாங்கம் இருக்கின்றது என்றால் அது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம். அவருடைய ஊழலை நிறுத்தி அந்த பணத்தை மிச்சப்படுத்தினால் சாதாரண மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்ல கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து நேற்று கினிகத்தேனை நகரில் ஜக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தொகுதியின் அமைப்பாளர் கே.கே. பியதாஸ ஏற்பாடு செய்திருந்த பொது கூட்டம் கினிகத்தேனை பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது.
அதன்போதே பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
மலையகத்தில் தோட்ட தொழிலாளிகளுக்கு 7 பேர்ச் காணியுடனான வீடுகள் அமைக்க நாம் தீர்மானம் எடுத்திருக்கின்றோம்.
அதுமட்டுமில்லாமல் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவும், சுகாதாரத்துறையை மேம்படுத்தவும், இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
மக்களின் பிரச்சினைகளை அறிந்து செயற்பட வேண்டும். வருமானத்தை அதிகரிப்பதற்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய வகையில் விலைகளை குறைப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
இந்த சூழ்நிலையில் ஒரு மாற்றத்ததை நாம் ஏற்படுத்த வேண்டும். ஆடம்பரமான பிரச்சாரங்கள் தேவையில்லை.
உங்கள் மத்தியில் வருகை தந்து ஆடம்பரமான பிரச்சாங்கள் செய்வது யார் என்று உங்களுக்கு தெரியும்.
அந்த பிரச்சாரத்தை விட மக்களின் தேவைகளை யார் பூர்த்தி செய்வார்கள் என நினைத்து பாருங்கள் மக்களின் வறுமை நிலையினை போக்குவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ தலைவர் கரு ஜயசூரிய, ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் பிரதி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRWKajw0.html#sthash.cuJ1Ne05.dpuf

சரத் பொன்சேகா அரசாங்கத்துடன் இணைவாரா..
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 09:20.04 AM GMT ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கட்சித் தாவல்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
அரசியல்வாதிகள் கட்சி தாவி வருவதை கடந்த சில நாட்களாக காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் கயான் விதானகே, எச்சந்தர்ப்பத்திலும் அரசுடன் இணையப் போவதில்லை எனவும் மேலும் எக்காலத்திலும் பணத்திற்கு விலைபோக மாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRWKajw1.html#sthash.ZzqGQkA7.dpuf

மகிந்தவின் ஒரு நாள் செலவீனம் 2கோடியே 65லட்சம் ரூபா! இந்த அநீதியான ஆட்சி தேவை தானா? - விஜித ஹேரத்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 09:21.25 AM GMT ]
இலங்கையில் 40வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா சம்பாதிக்க முடியாமலும், 50வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா செலவிட முடியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஜனாதிபதியின் ஒரு நாள் செலவீனம் 2கோடியே 65லட்சம் ரூபா. இத்தகைய அநீதியான ஆட்சி தேவை தானா? என தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டது.
அதிலும் குறிப்பாக வடமாகாண தமிழ் மக்கள் போர் நிறைவடைந்த பின்னரும் சொந்த நிலங்களக்கு திரும்ப முடியாமலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் விடுதலை செய்யப்படாமலும் உள்ள நிலையில் இத்தகைய சர்வாதிகார, இராணுவ ஆட்சி தேவையா? என்பதை தீர்மானிக்கவேண்டும்.
மேற்கண்டவாறு ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) கட்சியின் பிரசாரச் செயலாளரும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் நேற்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படிப் பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறமையினை ஒழிக்கவேண்டும். என நாங்கள் சந்திரிக்கா காலத்திலும் பின்னர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த காலத்திலும் கேட்டிருக்கின்றோம். இவர்கள் அவ் வப்போது வாக்குறுதிகளை வழங்கி பின்னர் மறந்துபோனார்கள்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த எமக்கு வழங்கிய வாக்குதியையும் மறந்து 18ம் திருத்தச்சட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக தன்னிடமிருந்த நிறைவேற்று அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொண்டதுடன், நாட்டை மிகமோசமான பாதைக்கும் கொண்டு சென்றிருக்கின்றார்;. இவருடைய ஆட்சியின் நாடாளுமன்றம், நீதிமன்றம்,
சட்டம் ஒழுங்கு மற்றும் அரசதுறைகள் முழுமையாக சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன. இதனைவிட வடமாகாணத்தை பொறுத்தவரையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இவ்வாறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக தமிழ் மக்கள் இன்னமும் பல சிக்கல்கள் அல்லது அசௌகரியங்கள் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் உண்மையில் 2010ம் ஆண்டு இந்த நிலைமையினை மாற்றியமைக்க கூடிய சந்தர்ப்பம் அரசாங்கத்திற்கு கிடைத்தது.
ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாமல் மக்களை மேலும் துண்டாடி இனங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகளை இந்த அரசாங்கம் வளர்த்து விட் டிருக்கின்றது. மேலும் அண்மையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்குள் வந்தார்கள்.
அவர்களை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருக்கும் இந்த ஜனாதிபதி சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை எதற்காக விடுவிக்கவில்லை? இதனை விட மோசமான விடயம் இலங்கையில் 40 வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260 ரூபா சம்பாதிக்க முடியாமலும், 50 வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260 ரூபா செலவிட முடியாமலும்,
இருக்கும் நிலையில் ஜனாதிபதியின் ஒரு நாள் செலவீனம் 2 கோடியே 65லட்சம் ரூபா, ஒரு மாதச் செலவீனம் 936 கோடி ரூபா. இது ஒரு நியாயமான அரசாங்கம் செய்யும் செயலாகுமா?
எனவே நாம் வெளிப்படையாக கூறுகின்றோம். பொது வேட்பாளர் மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தமிழ் மக்களிடம் பல குறைகள் உள்ளன. ஆனால் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது.
ஆனால் மோசடி மிக்க ஊழல் பேர்வழிகளாக இருக்கும் இந்த மஹிந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும். அதனை தமிழ் மக்கள் உங்களுடைய தலைமைகள் என்ன தீர்மானத்தை எடுத்தாலும் அதனை தாண்டியும். நீங்கள் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRWKajw2.html#sthash.5b3qhjw3.dpuf

உண்மையான அறிக்கையை கொடுத்து ஜனாதிபதியிடம் மீண்டும் அடிவாங்க முடியாது: அரச புலனாய்வு சேவை தலைவர்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 09:41.38 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் உண்மையான களநிலவர அறிக்கையை கொடுத்து மீ்ண்டும் அடிவாங்க தயாரில்லை என அரச புலனாய்வு சேவையின் பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்திரா நிமல் வாகிஷ்ட புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளிடம் அண்மையில் கூறியுள்ளார்.
குறைப்பாடு உள்ள இடங்களில் காணப்படும் தவறுகளை திருத்திக் கொள்ளவே ஜனாதிபதிக்கு நாங்கள் உண்மையான அறிக்கைகளை வழங்கிறோம். எனினும் நாங்கள் தவறான வேலை ஒன்றை செய்கிறோம் என ஜனாதிபதி நினைக்கின்றார்.
ஜனாதிபதியை சுற்றியுள்ளவர்களை போல் 65 சத வீத வாக்குகளை பெறுவார் என்று எங்களாலும் அறிக்கை வழங்க முடியும். இறுதியில் ஜனாதிபதிக்கே அது பிரச்சினையாக முடியும்.
நாங்கள் வழங்கும் அறிக்கைகளை ஜனாதிபதியை சுற்றியிருப்பவர்களே ஊடகங்களுக்கு கசிய விடுகின்றனர். சில நேரம் பொலிஸ்மா அதிபரும் அதனை கசிய விடலாம். நல்ல வேலை செய்தும் நாங்கள் அடிவாங்க வேண்டியுள்ளது எனவும் வாகிஷ்ட கூறியுள்ளார்.
நாட்டில் காணப்படும் நிலைமைகளை எப்படி ஜனாதிபதிக்கு அறிக்கையிடுவது என புலனாய்வு அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே வாகிஷ்ட இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் காணப்படும் நிலைமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாக இல்லை என புலனாய்வு அதிகாரிகள் இதன் போது வாகிஷ்டவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் காணப்படும் உண்மையான நிலைமை குறித்து ஜனாதிபதியிடம் அறிக்கை கொடுத்தால், அவர் மீண்டும் தம்மை தாக்கக் கூடும் என்ற அச்சம் புலனாய்வு அதிகாரிகளிடம் காணப்படுகிறது.
நாட்டில் எப்படியான நிலைமை இருந்தாலும் உண்மையை கூறி அடிவாங்க முடியாது. இலக்கங்களை அங்குமிங்குமாக மாற்றி அறிக்கை ஒன்றை தயாரித்து ஜனாதிபதியிடம் கொடுப்போம்.
செய்வதற்கு எதுவுமில்லை. முடியும் வரை நாமும் தாலாட்டு பாடுவோம் எனக் கூறி வாகிஷ்ட கூட்டத்தை முடித்து கொண்டனர்.
இதனடிப்படையில் அரச புலனாய்வு சேவையினர் தயாரித்த அறிக்கை இன்று அல்லது நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajw3.html

Geen opmerkingen:

Een reactie posten