தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 december 2014

"மாமா" தமிழன் ஆகிவிட்டது தந்தி TV: நிருபரும் மகிந்தரும் சேர்ந்து நடத்திய நாடம் என்ன ? உண்மை என்ன ??

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் புகழ்பெற்ற ஊடகங்களில் ஒன்றான "தந்தி" யில் மகிந்த ராஜபக்ஷவின் பேட்டி ஒன்று வெளியானது. இந்த தந்தி பத்திரிகைக்கு இனரர் நெட் TV ஒன்றும் உள்ளது. இதில் பல பரபரப்பான செய்திகளை இவர்கள் அவ்வப்போது போடுவது வழக்கம். ஆனால் அதுபோலத் தான் நாங்கள் ராஜபக்ஷவின் பேட்டியும் போட்டோம் என்று இவர்கள் கூறுவது முழு பூசனிக்காயை சோற்றில் புதைக்க நினைப்பது போல உள்ளது. 2009ம் ஆண்டு இக்கட்டான காலம், அதற்கு முன்னர் 2005 மகிந்தரின் வெற்றிக்காலம், பின்னர் காமன் வெலத் மாநாடு இலங்கையில் நடந்தவேளை, என்று பல சந்தர்பங்கள் இருக்கிறது. இந்த ஏதாவது ஒரு சந்தர்பத்தில் மகிந்தரை இவர்கள் பேட்டி எடுத்து முன்னரே போட்டு இருந்தால், அது "பத்திரிகை தர்மம்" என்று நாம் கூற வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்றைய தேதிக்கு தேர்தலில் தான் தோல்வியடைந்து விடுவோமோ என்று அவரே திண்ட்டி தெருப்பொறுக்கிக்கொண்டு உள்ள நேரம் தந்தி TV அவரின் நேர்காணலை போட்டு, மகிந்தருக்கு கை கொடுத்துள்ளது !
இலங்கையில் உள்ள வட கிழக்கு தமிழர்கள், யாழில் இயங்கிவரும் "டான் TV" ஐ பார்கிறார்களோ இல்லையோ, இணையம் (இன்ரர் நெட்) ஊடாக வரும் தந்தி TV ஐ பார்ப்பது அதிகம். இதனை மகிந்தர் நன்றாக அறிந்து வைத்திருந்துள்ளார். இதன் காரணமாகவே குறித்த அந்த TV ஐ அழைத்து மகிந்தர் சூட்கேஸ் ஒன்றையும் கொடுத்து பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார். சுமார் 12 C கை மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தந்தி TV இன் நிருபர் முதலில் ஏதோ தாறு மாறாக கேள்விகளை கேட்ப்பது போல நன்றாக நாடகமாடியுள்ளார். பின்னர் மகிந்தருக்கு சாதகமான கேள்விகளை கேட்டு, அந்த நேர்காணலை நல்லபடியாக முடித்துக்கொடுத்து, அனைவர் காதிலும் பூ சுத்தி இருக்கிறார். இதனைத்தான் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்பார்கள்.
"நான் முதலில் அப்படி தான் கேள்விகளை கேட்ப்பேன்" பின்னர் நல்ல கேள்விகளை கேட்ப்பேன் என்று சொல்லிவைத்தால் போல தந்தி TV நிருபரும் மகிந்தரும், இணைந்து நாடகமாடியுள்ளமை சாதாரண மக்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால் சக ஊடகங்களுக்கு புரியாமல் போய்விடுமா என்ன ? தந்தி TV இன் பேட்டி ஒளிபரப்பாகி முடிந்து மறு நாள் மகிந்த விட்ட அறிக்கை என்ன தெரியுமா ? மைத்திரியை விட நான் யாழ்ப்பாணத்தில் கூட வாக்குகளை பெறுவேன் என்பது தான். காலத்திற்கு காலம் டெல்லியில் உள்ளவர்கள் ஈழத் தமிழர்களின் காலை வாருகிறது என்றால், தமிழ் நாட்டிலும் சில ஈனப் பிறவிகள் இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள் காலை வார என்று. ராஜபக்ஷ பேட்டியை ஒளிபரப்ப கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் மற்றும் ஈழ உணர்வாளர் அண்ணன் வைகோ அவர்கள் போராட்டம் நடத்தினார்.
உடனே சென்னை பத்திரிகையாளர் சங்கம் அறிவித்தல் ஒன்றை விட்டார்கள். வைகோ அவர்கள் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என்று. பத்திரிகை சுதந்திரம் என்று வாய் கிழிய பேசிவரும், நபர்களுக்கு ஈழத்தின் சுதந்திரத்துக்காக 44,000 ஆயிரம் போராளிகள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போனார்கள் என்பது தெரியாத விடையமா ? இறந்து போனவர்கள் உங்கள் தொப்புள் கொடி உறவுகள் அல்லவா ? அவர்களையாவது ஒரு கணம் நினைத்துப் பார்த்தீர்களா ? ராஜபக்ஷவை பார்கும்போது செருப்பை களற்றி அடித்திருந்தால் நீங்கள் ஒரு மானமுள்ள தமிழன் வரலாற்றில் உங்கள் பெயர் பதிந்து இருக்கும்.
ஆனால் இன்று "மாமா தமிழன்" ஆகிவிட்டது தந்தி TV.
2009ஐ மறந்துவிட்ட தந்தி TV க்காக சில புகைப்படங்களை நாம் பிரசுரிக்கிறோம்.





Geen opmerkingen:

Een reactie posten