தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 december 2014

ஹக்கீம் – சம்மந்தனிடம் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை! யாழில் மைத்திரி

மன்னார் ஆயர்; இல்லத்தில் மைத்திரி அணி…



இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக, ரிஷாத் பதியுதீன், காலஞ்சென்ற ஜயலத் ஜயவர்தனவின் புதல்வரும் அரசியல்வாதியுமான காவிந்த, மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை, ஆயரின் செயலாளர் அருட்பணி முரளி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்maiththiri-aayar-01maiththiri-aayar-02maiththiri-aayar-03maiththiri-aayar-04maiththiri-aayar-05
http://www.jvpnews.com/srilanka/92187.html

18 மாவட்டங்களில் மக்கள் பஞ்சத்தில்! மகிந்த குடும்பம், சல்மான்கான் கும்மாளமாம்….

அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதுர்தீன்,ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே கிழக்கு மாகாண சபை ஐ.தே.க.உறுப்பினர் இம்றான் மஹ்ருப்,கிழக்கு மாகாண சபை மு.கா. உறுப்பினர் சட்டத்தரனி ஏ.ஜே.எம்.லாகிர், கிண்ணியா நகரசபைத்தலைவர் டாக்டர் ஹில்மி மஹ்ருப்,மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர். மக்கள் காங்கரசின் தலைவர்.
வேற்பாளர் மைத்திரி பால சிரிசேன இங்கு உரையாற்றுகையில். நான் இங்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடவே வந்துள்ளேன். 18 மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டு பல அனர்த்தங்களுக்கு உள்ளான நிலையில் பல கஸ்ட்டங்களை அனுபவித்து உண்ண உணவில்லை உடுக்க உடையில்லை இவ்வாறான நிலையில் 700 மில்லியன் செலவு செய்து இந்திய சினிமா நட்சத்திரம் சல்மான் கானை அழைத்து தலை நகரில் களியாட்ட நிகழ்ச்சியை மகிந்த ராஜபக்ச நடாத்திக் கொண்டிருக்கிறார்.
கிழக்கு மாகாணம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இந்த அரசாங்கம் அபிவிருத்தியை மேற் கொண்டார்கள் ஆனால் அவர்கள் அதில் பெரும் பகுதியை கொள்ளையடித்தார்கள் என்ற உண்மையை இங்கு கூறிக்கொள்ள வேண்டும்.
அபிவிருத்தியில் ஒதுக்கப்படும் நிதியில் நூற்றுக்கு 60 வீதம் தங்களது சாக்குகளில் போட்டுக்கொண்டார்கள்.
இந்த நாட்டின் அரச சேவை,பொலிஸ் சேவையைச் சீரழித்தார்கள், முப்படைகளை ராஜபக்ஸ குடும்பம் அடிமைகளாக்கிக் கொண்டார்கள்,பாராளுமன்றம், மற்றும் அமைச்சரவைகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாமல் ஆக்கிக் கொண்டார்கள்,கட்சித்தலைவர்கள் கூறுவதை எதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை பெண்கள் வல்லுறவு,சிறுவர் துஸ்ப்பிரயோகம்,மதுபானம்,போதை வஸ்த்து,கசினோக்களை ஊக்குவித்தார்கள்.
சர்வ சமயங்களும் நல்லாட்சியைத்தான் வளியுறுத்துகின்றன.ஆனால் மகிந்த ராஜபக்ச பூத்தட்டுக்களைத் தாங்கிக் கொண்டு மக்களை ஏமாற்றுவதற்காக சமயத்தளங்களில் ஏறி இறங்குகின்றார்.இந்த நாட்டிலே மூன்று இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பட்டினியால் வாடுகின்றார்கள்.
திவுநெகும வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்கம் இன்று மக்கள் காலடிக்குக் கொண்டு சென்று கொடுக்கின்றார்கள்.இவைகள் தெர்தலுக்காக மாத்திரமே நாளை மறு தினம் கைக்கடிகாரம் ,பெண்களுக்கான சேலைகள்,மொபைல் போன்கள் கண்டைனர்களில் வருகின்றன.உங்களுக்கு நான் கூறுகின்றேன் தருவதையெல்லாம் முன்டியடித்துக் கொண்டு வாங்குங்கள்.
ஆனால் தேர்தல் தினத்தன்று மகிந்த ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்புவதற்கு அன்னச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.
அரசாங்கத்துக்கு வந்ததும் முதல் வேலையாக கிண்ணியாவில் உடைந்துள்ள இரண்டு பாலங்களையும் கட்டித்தருவதாகஉறுதியளித்தார். வேளையற்ற இளைஞர்கள் 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம்.ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் மாற்றத்தக் கொண்டு வருவோம்,பாராளுமன்றத்தை சக்தியுள்ளதாக மாற்றுவோம்.

அமைச்சரவைக்கு அதிகாரத்தைக் கொடுப்போம்,நீதித்துறையை சக்திமயப்படுத்துவோம்.ஏழு ஜனாதிபதிமாளிகை உருவாக்கியுள்ளார்கள் அதில் எந்த ஒரு மாளிகைக்கும் நான் செல்ல மாட்டேன்.
அந்த மாளிகைகளை இரன்டு வாரத்திற்குள் மக்கள் பார்வைக்காகத் திறந்து விடுவோம். எனவே ஊழல் நிறைந்த இந்த ஆட்சியை விரட்டி அடிப்பதற்கு மக்கள் அணி திரண்டுள்ளார்கள்.​Salman-08Salman-10Salmain
http://www.jvpnews.com/srilanka/92196.html

வெள்ளைவேன் தாக்குதலை மறைக்கும் பிள்ளையான்….

கடத்தி அடிதடி செய்வது தொடர்பாக அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது அரசியலில் இது சகயம் என்றும் தமது ஓட்டுக்குளுவை நியாயப்படுத்திகருத்து தெரிவித்தார்.
குறுக்கிட்டு கேள்விகளை கேட்டால் தமக்கும் ஏதும் நடந்துவிடும் என அஞ்சியி ருந்த ஊடகவியலாளர்கள் ஐனாதிபதி தேர்தலில் பிள்ளையானின் அட்டகாசங்களை மறைத்து தம்மை உத்தமன்போல் காட்டவே இந்த ஊடக சந்திப்பை நடாத்தயது என தமக்குள்ளே பேசுனர்.
தமிழ்தேசியகூட்டமைப்பு மைத்துரிக்கு ஆதரவு வழங்கினால் படுகொலைக்குசமமானது என பிள்ளையான் கூறியபோது இவர் படுகொலைசெய்யாத உத்தமனா என அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மற்றய ஊடகவியலாளருடன் சம்பாசனை செய்தையும் அவதானிக்கமுடிந்தது.
http://www.jvpnews.com/srilanka/92202.html

ஹக்கீம் – சம்மந்தனிடம் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை! யாழில் மைத்திரி

யாழ்ப்பாணம் கிட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கத்தினால் எனக்கெதிராக சேறுபூசும் பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. நான்; யாருடனும் இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொள்ளவில்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டவர்களே என்னுடன் இணைந்துகொண்டனர்.

விசேடமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் எவ்விதமான ஒப்பந்தங்களையும் நான் செய்துகொள்ளவில்லை என்றார்.Unp-01Unp-02Unp-03Unp-04Unp-05Unp-06
http://www.jvpnews.com/srilanka/92205.html

Geen opmerkingen:

Een reactie posten