தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததால் மு.கா எதிரணிக்கு தாவியது!- அரசாங்கம்

தேர்தல் பிரச்சாரத்திற்காக தேசிய கீதத்தின் வரிகள் பயன்படுத்தப்படுகின்றன!– ரணில்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 11:25.32 PM GMT ]
ஆளும் கட்சி, தேர்தல் பிரச்சாரத்திற்காக தேசிய கீதத்தின் வரிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தாயை கௌரவப்படுத்தும் நோக்கிலேயே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேசிய கீதத்தின் வரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
“எங்கள் சக்தி நீயே!  எங்கள் ஒளி நீயே! எங்கள் ஜீவனும் நீயே” தேசிய கீதத்தின் வரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த தேசிய கீதத்தை பயன்படுத்திக் கொள்கின்றமை தேசிய கீதத்திற்கு மட்டுமன்றி தாய் நாட்டையும் அவமரியாதை செய்யும் செயலாகும்
தேசிய கீதத்தின் வரிகள் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவது அரசியல் அமைப்பிற்கு முரணானது.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையானது அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரக்கூடிய அளவிற்கு பாரதூரமானது
நாட்டின் வளங்கள், நாட்டின் சொத்துக்களை கொள்ளையிட்டு வந்த அரசாங்கம் இறுதியில் தேசிய கீதத்தையும் கொள்ளையிட்டுள்ளது.
தேசிய கீதமும் தேசிய கொடியும் நாட்டு மக்களுக்கு சொந்தமானது.
எனவே தேசிய கீதத்தை பயன்படுத்துவது பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதற்கு நிகரானது.
இலங்கை தாய்க்கு நிகராக தாம் இருப்பதாக காண்பிக்க ஜனாதிபதி எடுக்கும் முயற்சியானது தேசத்துரோக செயலாகும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பதென்ன மற்றும் உக்குவெல பிரதேசங்களில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கீதத்தை இழிவுபடுத்தியமைக்காக வழக்குத் தொடர்வது குறித்தும் எதிர்க்கட்சிகள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafu6.html
கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததால் மு.கா எதிரணிக்கு தாவியது!- அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 11:59.56 PM GMT ]
அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியை ஆதரிக்க தீர்மானித்திருப்பதாக ஆளும்கட்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 
இதே கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட போது, ஐக்கிய இலங்கைக்குள் பிரிவினை வாதத்தை உருவாக்கக் கூடிய எந்தவொரு செயற்பாட்டையும் வாக்குகளுக்காக தன்னால் அனுமதிக்க முடியாது என ஜனாதிபதியவர்கள் உறுதியாக மறுத்து விட்டதாகவும் அமைச்சர் சுசில் நேற்று கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ. ல. மு. கா. வின் ஆதரவு இல்லாமலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 18 லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருந்ததனால் இவர்களது ஆதரவின்மை வாக்கு வங்கியில் பாரிய சரிவினை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
அம்பாறையில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர வேண்டுமென்பதே ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த கோரிக்கையாகுமென சுட்டிக்காட்டிய அமைச்சர் சுசில், இதே போன்றதொரு வடிவத்திலேயே எல். ரீ. ரீ. ஈ. யினரும் வடக்கு கிழக்கில் தனியானதொரு நிர்வாக மாவட்டம் கோரியிருந்தனரெனவும் தெரிவித்தார்.
ஆனால் ஜனாதிபதியவர்கள் நாட்டை மட்டுமல்ல மாவட்டத்தைக்கூட பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்பதில் உறுதியாகவிருந்தார். அதன் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலக நேரிட்டது.
எனினும், எதிரணியினர் அவர்களை அணைத்துக்கொண்டுள்ளதன் மூலம் ஸ்ரீ ல. மு. கா.வின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளதெனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களை மையப்படுத்தி தனியானதொரு நிர்வாக மாவட்டம் உருவாக்க அனுமதித்தால், அங்கு வாழும் தமிழர்களின் நிலைப்பாடு என்னவாகும் எனவும் அமைச்சர் சுசில் கேள்வியெழுப் பினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரையில் அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்காத போதிலும் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையே இது பாரதூரமான விளைவினை ஏற்படுத்தக்கூடும் என்ற தூரநோக் குடனேயே நாம் சிந்தித்து செயற்பட்டோம். 
http://www.tamilwin.com/show-RUmszCRcKafu7.html

Geen opmerkingen:

Een reactie posten