தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 december 2014

எங்கள் ஆட்சியிலும் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது!- மைத்திரி!

25 நாட்களில் 155 அரசியல்வாதிகள் கட்சித் தாவியுள்ளனர்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 01:06.54 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் 25 நாட்களில் 155 அரசியல்வாதிகள் கட்சித் தாவியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டு, இந்த கட்சித் தாவல் நடவடிக்கையை ஆரம்பித்தார்.
இதுவரையில் 155 மக்கள் பிரதிநிதிகள் ஆளும் கட்சியுடனும் எதிர்க்கட்சியுடனும் இணைந்து கொண்டுள்ளனர்.
அதிகளவான ஆளும் கட்சி மக்கள் பிரதிநிதிகள், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவுடன் 111 பேர் இணைந்து கொண்டுள்ளதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் 44 பேர் இணைந்து கொண்டுள்ளனர்.
அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, நவீன் திஸாநாயக்க, துமிந்த திஸாநாயக்க,ரிசாத் பதியூதின், சம்பிக்க ரணவக்க, பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன உள்ளிட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயகக் கட்சியின் பிரதித் தலைவர் ஜயந்தகெட்டகொட உள்ளிட்ட இரண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKags7.html
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை: சரத் என் சில்வா
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 01:32.52 AM GMT ]
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பொறிமுறையில் பங்களிப்பு வழங்கப் போவதில்லை.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் அளிக்கப்பட முன்னதாக, ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது சட்டவிரோதமானது என சுயாதீனமாக கருத்து வெளியிட்டிருந்தேன்.
எனினும், நீதிமன்றின் சட்ட விளக்கத்தைத் தாண்டி கருத்து வெளியிட அவகாசம் கிடையாது.
அரசியல் அமைப்பு தொடர்பிலான பிரச்சினை ஒன்றையே நான் எழுப்பியிருந்தேன்.
உச்ச நீதிமன்றம் தீர்மானித்ததன் பின்னர் அது குறித்து பேச முடியாது.
கட்சி அரசியலில் ஈடுபடும் உத்தேசம் கிடையாது என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagt0.html

கட்டாரில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தல்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 04:19.07 AM GMT ]
கட்டாரில் ஆழிப்பேரலையான சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் கட்டாரில் வாழும் ஈழத் தமிழர்களால் நினைவு கூரப்பட்டது.
உலகலவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் உலகம் முழுவதும் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையில் சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் கட்டாரில் வாழும் ஈழத்தமிழர்களால் நினைவுகூரப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagt2.html
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு! மீண்டும் ஒன்றுகூடும் முஸ்லிம் காங்கிரஸ்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 04:31.20 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கட்சியின் உயர் மட்டக்குழு இன்று சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னரும் குறித்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பல சந்திப்புக்கள் இடம்பெற்ற போதும் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagt3.html
11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 04:45.32 AM GMT ]
இலங்கை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிவிரின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிடுகின்றார்.
மாத்தளை, பதுளை, கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மண்சரிவு அபாயம் அதிகளவில் காணப்படுகின்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்கள், அங்கிருந்து தற்காலிகமாக வெளியேறுவது பாதுகாப்பான நடவடிக்கையாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்றிரவு அறிவித்தல் விடுத்துள்ளது.
இத்தகைய பிரதேசங்களில் அதிக மழை பெய்கின்றமையே கூடுதல் மண்சரிவு அபாயம் நிலவுவதற்கு காரணமாகும் என்றும் மண்சரிவு ஆய்வுப் பிவிரின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்தார்.
இதேவேளை இலங்கைக்கையை அண்மித்த பகுதியில் மற்றுமொரு தாழமுக்கம் ஏற்பட்டுள்ளால், காற்றுடன் கூடிய கடும் மழை காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து 400 கீலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagt4.html
எங்கள் ஆட்சியிலும் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது!- மைத்திரி
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 05:25.35 AM GMT ]
எமது ஆட்சி வந்தால் ஒருபோதும் வட கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படமாட்டாது என்பதை மிகவும் ஆணித்தரமாக தெரிவிக்க விரும்புகின்றேன் என்று மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தத்தை வெற்றி பெறச் செய்த பல இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்களையும் நாட்டுக்கு வரவழைத்து மென்மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் .
இன்னுமோர் பயங்கர வாதத்துக்கு நான் இடமளிக்கப் போவதில்லை. இந்த நாட்டை துண்டாடுவதர்க்கும் இடமளிக்கப் போவதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
சுனாமி அழி­வு­களின் வடுக்கள் அர­சினால் இன்னமும் மாற்­றப்­ப­ட­வில்லை! எனது ஆட்­சியில் மாற்றம் உண்டு!- மைத்­திரி
நாட்டில் இயற்கை அனர்த்­தங்கள் மூலம் பேர­ழி­வு­களை நாம் சந்­திப்­பதற்கு காரணம் இங்கு ஒரு சிலரால் மேற்­கொள்­ளப்­படும் திட்­ட­மி­டாத அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களேயாகும். ஒரு தசாப்­தத்­திற்கு முன்னர் ஏற்­பட்ட அழி­வு­களின் வடுக்கள் அர­சாங்­கத்­தினால் இன்னமும் மாற்­றப்­ப­ட­வில்லை. எனது ஆட்­சியில் அனைத்­திற்கும் மாற்றம் உண்டு என மைத்­திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு காக்­கை­தீவு பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற சுனாமி நினைவு தின நிகழ்வில் கலந்­து­ கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
ஒரு தசாப்­தத்­திற்கு முன் நாட்டில் ஏற்­பட்ட மிக மோச­மான சம்­பவம் மக்­களின் மனங்­களில் இருந்து இன்­னமும் நீங்­காது உள்­ளது. பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் இலங்­கையில் ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்­தினால் மக்கள் பலர் சுமார் 40 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் உயி­ரி­ழந்­தனர். மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்­கப்­ப­டா­மையும் மக்கள் எதிர்­பா­ராத ஒரு தரு­ணத்­திலும் இவ்­வா­றா­ன­தொரு மோச­மான சம்­பவம் இடம்­பெற்று விட்­டது.
எனினும் சுனாமி அனர்த்தம் இடம்­பெற்று இன்று பத்து வரு­டங்­களை கடந்து விட்­டது. எனினும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எந்­த­வொரு நிவா­ர­ணமோ தேசிய ரீதியில் எந்­த­வொரு பாது­காப்பு நட­வ­டிக்­கையோ இடம்­பெ­ற­வில்லை.
சர்­வ­தேச நாடு­களில் அனர்த்­தங்கள் ஏற்­ப­டு­மாயின் அதற்கு முன் எச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் அதற்­க­மைய தொழில்­நுட்ப அவ­தான செயற்­பா­டு­களும் பயன்­ப­டுத்தி அனர்த்­தங்­களை தவிர்த்து கொள்ள முடி­கின்­றது.
எனினும் இலங்­கையில் அவ்­வா­றா­ன­தொரு எச்­ச­ரிக்கை செயற்­பா­டுகள் இல்லை. மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்­டு­மாயின் அர­சாங்கம் எச்­ச­ரிக்கை செயற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும். அவ்­வாறு இல்­லா­மையே தற்­போதும் மலை­யக பகு­தி­களில் தொடர் அனர்த்­தங்கள் ஏற்­பட கார­ண­மா­கி­யுள்­ளது.
எனவே எதிர்­வரும் 8ம் திகதி இவை அனைத்­தையும் வெல்லும் எமது புதிய யுகத்­தினை ஆரம்­பிப்போம்.
ரணில் உரையாற்றுகையில், இலங்­கையில் இடம்­பெற்ற ஆயுத மோதல் மற்றும் கல­வ­ரங்­களில் உயி­ரி­ழந்த உயிர்­க­ளுக்கு சம­மான உயிர்­களை சுனாமி பேர­லையில் தொலைத்து விட்டோம். சுனாமி அனர்த்தம் இடம்­பெற்று பத்து ஆண்­டுகள் கடந்­துள்ள நிலையில் மக்கள் இன்­னமும் இவ்­வ­ழி­வினை மறக்­க­வில்லை. பலர் இன்றும் உள­வியல் ரீதியில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
ஆயினும் கவ­லைக்­கி­ட­மான நிலை என்­ன­வெனில் அந்த மஹிந்த ராஜபக்ச அர­சாங்கம் தமது பத்து ஆண்­டு­களை அர­சாட்­சியில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எவ்­வித நிவா­ர­ணங்­க­ளையோ உத­வி­க­ளையோ பெற்­றுக்­கொ­டுக்க மறந்து விட்டார்.
மக்­களை பற்றி சிந்­திக்­காது தமது குடும்ப அர­சி­யலை பற்றி சிந்­திக்கும் ஆட்­சிக்கு இனி­மேலும் இடம் கொடுக்­காது தூய்­மை­யா­னதும் மக்­களின் பாது­காப்­பினை பலப்­ப­டுத்தும் ஆட்­சியை உரு­வாக்க வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
இங்கு உரை­யாற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க குறிப்­பி­டு­கையில், 2004 ம் ஆண்டு சுனாமி அனர்த்­தத்­தினால் சுமார் 40 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான பொது­மக்­களும் 70 ஆயி­ரத்­திற்கு அதி­க­மான வீடுகள் மற்றும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெறு­ம­தி­யான சொத்­துக்கள் அழிந்­தன. அதேபோல் நாடும் மிக இறுக்­க­மான பொரு­ளா­தார வீழ்ச்சி கண்­டது.
ஆனால் அப்­போதே நாம் சர்­வ­தேச உத­வி­யுடன் நாட்­டினை மீட்­டெ­டுத்தோம். ஆனால் தற்­போது உள்ள நிலை­மையில் நாட்டில் அபி­வி­ருத்­தி­யினை கட்­டி­யெ­ழுப்­பவோ சர்­வ­தே­சத்­திடம் உத­வி­களைப் பெற்று பொரு­ளா­தார சமூக அபி­வி­ருத்­தி­யினை மேற்­கொள்ள முடி­யாத நிலை­மைக்கு நாடு மாற்­றப்­பட்டு விட்­டது.
உதவும் ஹம்­பாந்­தோட்டை எனும் திட்டம் உரு­வாக்­கப்­பட்டு சுனாமி உதவிகளை மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்து இறுதியில் ஒரு சிலர் மட்டுமே அதில் பலனடைந்து கொண்டனர்.
உதவிக்காக சேகரிக்கப்பட்ட நிதி ஒரு சிலரின் பைகளை நிறைத்து விட்டது. இப்போதும் அதேநிலைமையே நாட்டில் தொடர்கின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டும். அதற்காக வேண்டியேனும் மக்கள் இந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagt6.html

Geen opmerkingen:

Een reactie posten