தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 december 2014

மகிந்தர் சுட்டால் கொலை ! நாட் சுட்டல் அது ரோசாப் பூவாக மாறும்: மைத்திரியின் வீடியோ கலக்குகிறது !

இலங்கையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், சமூக வலையத்தளங்கள் மற்றும் இன்ரர் நெட் ஊடாக பல பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக எதிர்கட்சிகளின் பொதுவேட்ப்பாளரான மைத்திரி பால சிறிசேனாவின் வீடியோக்கள் சக்கை போடு போடுகிறது. பல விளம்பர வீடியோக்களை மைத்திரி ஆதரவாளர்கள் களமிறக்கியுள்ளார்கள். துப்பாக்கி சுடுவதுபோலவும், ஆனால் அதில் இருந்து தோட்டாவுக்கு பதிலாக ரோசா பூ வருவதுபோலவும் செய்துள்ளார்கள். மகிந்தர் சுட்டால் கொலை... ஆனால் நான் சுட்டால் ரோசா பூ என்பது போல இது அமைந்துள்ளது.
இதேவேளை, மகிந்த ராஜபக்ஷ மேடைகளில் பேசும்போது வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் மைத்திரி அப்படி அல்ல என்கிறார்கள். எந்த மாவட்டத்திற்கு பேசச் செல்கிறோம் என்று பார்த்து, மிகவும் அவதானித்து அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சனை தொடர்பாக அவர் பேசி வருகிறார்.

Geen opmerkingen:

Een reactie posten