தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

அரச சார்பற்ற அமைப்பின் ஆய்வில் மஹிந்த முன்னிலை

ளனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகினார் மேர்வின் சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 04:42.16 PM GMT ]
களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து அமைச்சர் மேர்வின் சில்வா விலகிக் கொண்டுள்ளார்.
கிரிபத்கொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி அமைப்பாளர் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னிடம் கோரினார்.
இந்தக் கோரிக்கைக்கு அமையவே தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்கின்றேன்.
அமைச்சர் பசில் ராஜபக்ச களனி தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் விதித்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
களனி தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக கம்பஹா அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சாலித விஜேயசூரிய கடமையாற்றவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajs7.html
அரச சார்பற்ற அமைப்பின் ஆய்வில் மஹிந்த முன்னிலை
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 04:50.53 PM GMT ]
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பி;ல் அரச சார்பற்ற அமைப்பு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலை வகிக்கிறார்.
ஆய்வின்படி அவருக்கு 57.62 வீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு 40வீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜதந்திரியான மங்கள முனசிங்கவின் வன் டெக்ஸ்ட் என்ற அமைப்பே இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
ஆய்வின்படி 8,658,977 சிங்கள பௌத்த வாக்குகளில் 63 வீதம் மஹிந்தவுக்கும் 36 வீதம் மைத்திரிக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,096,217 இலங்கை தமிழர் வாக்குகளில் 44 வீதம் மைத்திரிக்கும் 40 வீதம் மஹிந்தவுக்கும் கிடைக்கும்.
1,124,831 என்ற முஸ்லிம்களின் வாக்குகளில் 64 வீதம் மைத்திரிக்கும் 35வீதம் மஹிந்தவுக்கும் கிடைக்கும்.
493,911 எண்ணிக்கையான சிங்கள கத்தோலிக்கர்களில் 55 வீதத்தினர் மஹிந்தவுக்கும் 44 வீதத்தினர் மைத்திரிக்கும் வாக்களிப்பர்.
463,130 என்ற எண்ணிக்கையான இந்திய வம்சாவளி தமிழர்களில் 56.5 வீதத்தினர் மஹிந்தவுக்கும் 42.5 வீதத்தினர் மைத்திரிக்கும் வாக்களிப்பர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஏனையர்கள் வகுதியில் 54 வீதத்தினர் மைத்திரிக்கும் 45 வீதத்தினர் மஹிந்தவுக்கும் வாக்களிப்பர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அடிப்படை குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajty.html

Geen opmerkingen:

Een reactie posten