[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:48.29 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கும் போது முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
யுத்தத்தின் பின்னர் நாட்டில் நல்லிணக்கம் தொடர்பில் குறைபாடுகள் ஏற்பட்டதாக குறிப்பிட்டார். எனினும் அவை உரிய முறையில் தீர்க்கப்படவில்லை. அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
இதன்காரணமாகவே இன்று கட்சி மாறல்களும் இடம்பெறுகின்றன. எனினும் தமது கட்சி இந்த விடயத்தில் உடனடியான தீர்மானத்துக்கு வராது.
இன்னும் இரண்டு நாட்களில் தமது தீர்மானம் வெளியாகும் என்று ஹக்கீம் குறிப்பிட்டார்.
இன்றைய கண்டி நிகழ்வில் தமக்கு அருகில் அமர்ந்திருந்த பிரதமர் டி.எம்.ஜெயரத்னவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதை சீர்தூக்கி பார்க்குமாறு தம்மிடம் வலியுறுத்தினார்.
எனினும் தாம் தனிப்பட்ட முடிவை எடுக்கமுடியாது. முஸ்லிம் மக்களின் அபிலாசைகள், தமது கட்சியின் அபிலாசைகள் என்பன தமது தீர்மானத்துக்கு முன்னர் முக்கியத்துவப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இலங்கையில் நீதித்துறையில் குறைப்பாடுகள் உள்ளன. நல்லாட்சி தேவை மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தநிலையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல்; விஞ்ஞாபனம் வெளியாகவுள்ளது.
எனவே தமது தீர்மானத்தின்போது இந்த இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களும் சீர்தூக்கி பார்க்கப்படும் என்றும் ரவூப் ஹக்கீம் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajs2.html
மகிந்தவின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திய வடக்கு இ.போச. பேருந்துகள்! 60லட்சத்திற்கு மேல் நஷ்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:51.19 PM GMT ]
இலங்கை ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் குறித்த தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்காக சுமார் 62 லட்சத்து 70ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் குறித்த நஷ்டத்தை தாங்களே பொறுப்பேற்கும் மிக மோசமான நிலமையில் தாங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 17ம் திகதி அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்காக வடமாகாணத்தின் 7 சாலைகளிலிருந்து பேருந்துகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அடுத்து 18ம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்திற்காகவும் மேற்படி 7 சாலைகளிலிருந்தும் பேருந்துகள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.
இதனால் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண கிளைக்கு சுமார் 62லட்சத் து 70ஆயிரம் ரூபா நஷ்டம் உண்டாகியிருப்பதாகவும், மேற்படி இரு தினங்களும் பிரசாரத்திற்காக கொண்டு சென்றமையினால் வடக்கில் 40 வீதமான போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டே கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த நஷ்டத்தை நாங்களே ஏற்றுக்கொள்ளும் நிலையில் தாம் இருப்பதாக போக்குவரத்துச் சபை அதிகாரிகள் மேலும் கவலை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 18.12.2014 மட்டக்களப்பு பிரசாரத்துக்கு பயன்படுத்திய பேருந்துகள்
சாலைவிபரம் பேருந்து எண்ணிக்கை ஏற்பட்ட நட்டம்
கோண்டாவில் 10 330,000- ரூபா
காரைநகர் 05 165,000- ரூபா
பருத்தித்துறை 05 165,000-ரூபா
கிளிநொச்சி 05 165,000-ரூபா
முல்லைத்தீவு 05 165,000-ரூபா
மன்னார் 10 330,000-ரூபா
வவுனியா 10 330,000-ரூபா
காரைநகர் 05 165,000- ரூபா
பருத்தித்துறை 05 165,000-ரூபா
கிளிநொச்சி 05 165,000-ரூபா
முல்லைத்தீவு 05 165,000-ரூபா
மன்னார் 10 330,000-ரூபா
வவுனியா 10 330,000-ரூபா
மொத்தம் 1650,000-ரூபா
17.12.2014 அனுராதபுரம் பிரசாரத்துக்கு பயன்படுத்திய பேருந்துகள்
சாலைவிபரம் பேருந்து எண்ணிக்கை ஏற்பட்ட நட்டம்
கோண்டாவில் 20 660,000-ரூபா
காரைநகர் 05 165,000-ரூபா
பருத்தித்துறை 10 330,000-ரூபா
கிளிநொச்சி 05 165,000-ரூபா
முல்லைத்தீவு 05 165,000-ரூபா
மன்னார் 10 330,000-ரூபா
வவுனியா 10 330,000-ரூபா
காரைநகர் 05 165,000-ரூபா
பருத்தித்துறை 10 330,000-ரூபா
கிளிநொச்சி 05 165,000-ரூபா
முல்லைத்தீவு 05 165,000-ரூபா
மன்னார் 10 330,000-ரூபா
வவுனியா 10 330,000-ரூபா
மொத்தம் 2145,000-ரூபா
17.12.2014 கிளிநொச்சி பிரசாரத்துக்கு பயன்படுத்திய பேருந்துகள்
சாலைவிபரம் பேருந்து எண்ணிக்கை ஏற்பட்ட நட்டம்
கோண்டாவில் 15 495,000-ரூபா
காரைநகர் 10 330,000-ரூபா
பருத்தித்துறை 05 165,000-ரூபா
கிளிநொச்சி 10 330,000-ரூபா
முல்லைத்தீவு 05 165,000-ரூபா
மன்னார் 15 495,000-ரூபா
வவுனியா 15 495,000-ரூபா
காரைநகர் 10 330,000-ரூபா
பருத்தித்துறை 05 165,000-ரூபா
கிளிநொச்சி 10 330,000-ரூபா
முல்லைத்தீவு 05 165,000-ரூபா
மன்னார் 15 495,000-ரூபா
வவுனியா 15 495,000-ரூபா
மொத்தம் 2475,000-ரூபா
http://www.tamilwin.com/show-RUmszCRVKajs3.html
தபால்மூலம் வாக்களிக்கும் படையினரைக் கண்காணிக்க 250 பேர் வடக்கிற்கு விஜயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 04:18.42 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பினை மேற்கொள்ளவுள்ள படையினரைக் கண்காணிப்பதற்காக தெற்கிலிருந்து 250 சிங்கள ஊழியர்களை வடமாகாணத்திற்கு தேர்தல் திணைக்களம் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 23ம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வக்களிப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போது வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள படையினர் தபால்மூல வாக்களிப்பினை செய்யவுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வாக்களிப்பின்போதுதான, கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவே மேற்படி 250 சிங்கள ஊழியர்களையும் முன்னாள் வடமாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் ஒருவருடைய மேற்பார்வையின் கீழ் தேர்தல் திணைக்களம் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மேற்படி ஊழியர்கள் குழு படையினரின் முகாம்களுக்குள் சென்று வாக்களிப்பு நடவடிக்கைகளை நேரடியாக அவதானிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இம்முறை படைமுகாம்களுக்குள் முறைகேடுகள் நடக்க சாத்தியமில்லை எனவும் தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajs4.html
யாழில் இளைஞர் குழு அட்டகாசம்! பொலிஸார் அசமந்தம்! மக்கள் விசனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 04:39.38 PM GMT ]
இதுகுறித்து தெரியவருவதாவது,
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீடுகளுக்கு நேற்று சனிக்கிழமை நள்ளிரவு கல் வீசியதுடன் வீட்டு கேற் மற்றும் கதவுகளையும் கால்களால் உதைந்து சுமார் அரை மணிநேரமாக அப் பிரதேசத்தில் நடமாடி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
இதனால் வீடுகளில் இருந்தவர்கள் பீதியடைந்தது பொலிசாரின் அவரச அழைப்பிலக்கமான 119 க்கும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கும் தொலைபேசி மூலம் அறிவித்தனர்.
இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த பொலிசார் வீட்டு உரிமையாளர்களை பொலிஸ் நிலையத்தில் வந்து முறைப்பாடு பதிவு செய்தால் மட்டுமே தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
அதற்கு உரிமையாளர்கள் தாம் நள்ளிரவு நேரம் பொலிஸ் நிலையத்திற்கு வர முடியாது காலையில் வந்து முறைப்பாடு செய்கின்றோம். தற்போது விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், குறித்த இளைஞர் குழு அப் பிரதேசத்தில் நடமாடும் வாய்ப்புள்ளதால் தேடி பார்க்கும் மாறும் வீட்டு உரிமையாளர்கள் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்க மறுத்த பொலிசார் முறைப்பாடு பதிவு செய்தால் மாத்திரமே விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.
முறைப்பாடு இல்லாமல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.
பொலிசாரின் இந்த நடவடிக்கை வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajs6.html
Geen opmerkingen:
Een reactie posten