தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

இரணைமடு வான்கதவுகள் இன்று காலை திறப்பு- கிளிநொச்சியில் பெருமழை வெள்ளக்காடாய் நகரம்

பாதுகாப்பு அணை உடைப்பெடுப்பு! மூதூர் நீரில் மூழ்கும் அபாயம்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 03:47.44 AM GMT ]
சேருவில பிரதேசத்திலுள்ள வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் தாங்கி என்னும் பகுதியிலேயே பாதுகாப்பு அணை நேற்றிரவு அல்லது இன்று அதிகாலை வேளையில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும் சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பாரிய அணையொன்று சுமார் 60 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பாதுகாப்பு அணையே தற்போது உடைப்பெடுத்துள்ளது. இதனால் கங்குவேலி, படுகாடு. நிலாபொளை பிரதேச வயல் நிலங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கையில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்ததன் விளைவாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
 http://www.newstamilwin.com/show-RUmszCRWKaju5.html

இரணைமடு வான்கதவுகள் இன்று காலை திறப்பு- கிளிநொச்சியில் பெருமழை வெள்ளக்காடாய் நகரம்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 05:28.23 AM GMT ]
பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதன் காரணமாக இரணைமடு பெருங்குளத்தின் வான் கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது.
இரணைமடு பெருங்குளத்தின் நீர் மட்டம் 31 அடியை கடக்கும் நிலையை எட்டியுள்ளதால், குளத்தின் அணைகளின் நிலை மற்றும் விளைச்சல் வயல்களின் நன்மையை கருத்திற்கொண்டு வடமாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு இன்று காலை வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
வடமாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர்கள் விவசாய சம்மேளன தலைவர் சிவமோகன் விவசாயிகள் இன்று காலை இரணைமடுக்குளப்பகுதியில் பிரசன்னமாகியிருந்தனர்.
கிளிநொச்சியில் பெருமழை: வெள்ளக்காடாய் நகரம்
நேற்று இரவு முதல் கிளிநொச்சியில் கடும் மழை பெய்துவருகின்றது. இதன் காரணமாக கிளிநொச்சி நகரம் மற்றும் கிராமங்கள் பல வெள்ளப்பெருக்கு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
குளங்கள் நீர் நிரம்பி வான் பாய ஆரம்பித்துள்ளதால் வான் பாயும் பகுதிகளை அண்டிய கிராமங்களை சேர்ந்த மக்கள் இடம்பெயரவேண்டிய சூழ்நிலை எதிர்கொள்ளப்படுகின்றது.
 http://www.newstamilwin.com/show-RUmszCRWKaju7.html

Geen opmerkingen:

Een reactie posten