தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

டக்ளஸ் தேவானந்தாவுடன் கைக்குலுக்கிய இயக்குனர் பாரதிராஜா!



புதல்வர்கள் மகிந்தவுடன்! குழப்பத்தில் குடும்பம்..?? - வெளிவராத உண்மைகளுடன் தயாபரன்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 12:32.04 AM GMT ]
இன்றைய ஜனாதிபதியின் தேர்தல் பரப்புரைகளில் இரு புதல்வர்களை தவிர ஜனாதிபதி மகிந்தவின் சகோதரர்கள் கூட மனக்கசப்பான சூழலில் உள்ளதுடன், ஏனைய பலரும் குழப்பத்தில் இருப்பதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயாபரன் தெரிவித்தார்.
இராணுவ ஆட்சியை நோக்கி நகரக் கூடிய வாய்ப்பு இலங்கையில் உள்ள நிலையில் இது விடயத்தில் பொது எதிரணி உசார் நிலையில் உள்ளது என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் தயாபரன் தெரிவித்தார்.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajt1.html
சீனாவுடனான நட்புறவு தொடரும்!– ரணில், மைத்திரி செவ்வி
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 01:05.26 AM GMT ]
தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவை ஓரம்கட்டி விட்டு, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவோம் என்று கூறிய, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தப் போவதாக, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், தெரிவித்துள்ளார்.
சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்துள்ள செவ்வியில், இலங்கையின் உண்மையான நண்பன் சீனா என்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் சீனாவுடனான உறவுகள் தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இலங்கையின் பிரதான அபிவிருத்திப் பங்காளராக சீனாவே உள்ளது.
சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட போது, அப்போது ஆட்சியில் இருந்த எ.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐதேக அரசாங்கமே அதற்கு அங்கீகாரம் அளித்திருந்தது.
அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் சீன மக்கள் குடியரசு மீது தடைகளை விதித்திருந்த போதிலும், 1952ம் ஆண்டு இறப்பர் – அரிசி உடன்பாட்டில், ஐதேக அரசாங்கம் தான் கையெழுத்திட்டது.
இது தான், இலங்கை – சீன உறவுகளுக்கு அடித்தளமாக உள்ளதுடன் அதற்குப் பின்னர் சிறிலங்காவில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சீனாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் காரணமாகியது.
இந்த உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட பிரதான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகளில் தரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனவா என்பது குறித்து மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால் பரிசீலிக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், தாம் தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், நட்புறவு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும், ஒத்துழைப்புகள் வலுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajt2.html
எதிரணியின் வரவு செலவுத் திட்டம் ஜனவரி 29ம் திகதி
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 02:03.13 AM GMT ]
இலங்கையின் எதிரணிக் கூட்டணி தமது இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை ஜனவரி 29ம் திகதியன்று சமர்;ப்பிக்க தீர்மானித்துள்ளது. 
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால், இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என்று அந்த அணி தீர்மானி;த்துள்ளது
இதேவேளை, 18வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் போது அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும்.
இது தற்போதைய நிலையில் எதிரணிக்கு இல்லை.
எனினும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் இதன்போது ஆதரவளிப்பர் என்று எதிரணி நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 http://www.newstamilwin.com/show-RUmszCRWKajt6.html

ஹம்பாந்தோட்டையில் கலைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கத்தின் பதில் என்ன?: சஜித் கேள்வி
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 02:04.23 AM GMT ]
ஹம்பாந்தோட்டையில் கலைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கத்தின் பதில் என்ன என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நிராயுதபாணிகளான வீதி நாடகக் கலைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக அவர் நேற்று குற்றம் சுமத்தியிருந்தார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை மக்கள் ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஹம்பாந்தோட்டை நகரில் கலைஞர்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
சர்வாதிகார வெறியை அடக்க வேண்டுமென்ற நோக்கில் இந்த முறைமை அமுல்படுத்தப்பட்டது.
மாற்றுக் கொள்கைகள் மாற்றுச் சிந்தனைகளை வெளிப்படுத்தப்படுவதனை முற்று முழுதாக தடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அரசாங்கத்தின் குண்டர் கூட்டங்கள் அடக்குமுறைகளை பிரயோகிப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 http://www.newstamilwin.com/show-RUmszCRWKajt7.html
தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள்: மங்கள சமரவீர குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 02:18.38 AM GMT ]
இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 
இளைஞர் விவகார அமைச்சின் தென் மாகாண அதிகாரிகள் இன்று மாத்தறையில் வீடு வீடாக சென்று ஜனாதிபதியின் சார்பில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
தேர்தல் சட்டங்களை முழுக்க முழுக்க மீறி 50 பஸ்களில் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளனர்.
இந்த அரசாங்க அதிகாரிகளுக்கு அரசாங்கம் மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்க உள்ளது.
மாத்தறையில் ஆளும் கட்சியின் சகல தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் வீட்டுக்கு வந்தால், மஹிந்த சிந்தனையின் ஊடாக அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என மக்கள், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
மாத்தறையில் அமைந்துள்ள மங்கள சமரவீரவின் வீட்டில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 http://www.newstamilwin.com/show-RUmszCRWKajuz.html

டக்ளஸ் தேவானந்தாவுடன் கைக்குலுக்கிய இயக்குனர் பாரதிராஜா!
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 02:46.18 AM GMT ]
யாழ்ப்பாணம் சென்ற இயக்குனர் பாரதிராஜா, இலங்கை அமைச்சரும், தமிழகத்தில் கொலை வழக்கில் சிக்கியவருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கைக்குலுக்கி பேசியுள்ள படம் வெளியாகியுள்ளது. 
யாழ்ப்பாணம் சென்றுள்ள இயக்குனர் பாரதிராஜாவை கௌரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ. சேனாதிராஜா, சி.சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினரான பா.கஜதீபன், இந்திய பிரதி தூதுவர் மூர்த்தி மற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இயக்குனர் பாரதிராஜாவை நட்பின் நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது, டக்ளஸ் தேவானந்தா, எதிர்ப்பு அரசியலால் எதையும் செய்ய முடியாது. இணக்க அரசியல் மூலமே எதையும் சாதிக்க முடியும். 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே நாம் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். அத்துடன் அப்போது அதனை எதிர்த்தவர்கள் இப்போது மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டதானது காலம் கடந்த ஞானமாகும்.
அரசில் அங்கம் வகித்திருப்பதன் காரணமாக நான் எதையும் நியாயப்படுத்தவில்லை. பிழைகள் இருப்பின் அதை தெரியப்படுத்துமிடத்து அதனை சரிசெய்யவும் நாம் தயாராகவிருக்கின்றோம்.
கடந்த காலங்களில் எதிர்ப்பு அரசியலால் எமது மக்களுக்கு எவையும் கிடைக்கவில்லை. அந்த நிலையில் தான் நாம் இணக்க அரசியலை தெரிவு செய்து அரசுடனான நல்லுறவைப் பயன்படுத்தி மக்களுக்கானவற்றை பெற்றுக் கொடுத்து வருகின்றோம். இது இணக்க அரசியல் மூலம் எதையும் செய்ய முடியுமென்பதுடன் செய்யலாம் என்பது குறித்தும் நாம் நம்புகிறோம்.
ஐ.நாவில் தமிழ் மொழியில் பேசிய ஒரேயொரு ஜனாதிபதி ராஜபக்ச. அவர் இதன் மூலம் அவரது உணர்வு வெளிப்படுகிறது என்றார்.
இதற்கு குறித்து கருத்துத் தெரிவித்த பாரதிராஜா, யுத்தத்திற்குப் பின்னர் வடபகுதி முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
புழு கூட புலியானது ஈழத்தமிழ் மண்ணில்: யாழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா
தமிழர்கள் என்ற இனம் தனித்துவத்தோடு உலகமே வியந்து நின்ற அளவில் சாதனைகளைப் புரிந்திருக்கிறது. இப்பூமிப்பந்திலே உலகெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்ந்தாலும் ஈழத்திலே வாழ்கின்ற உத்தமர்கள் செய்த தியாகங்கள் விடுதலை வேண்டிய அர்ப்பணிப்பான பயணங்கள் கட்டுக்கோப்பான தலைமைத்துவத்தில் தலை நிமிரச் செய்த ஆட்சி முறை என்பவற்றால்தான் தமிழர்களை பற்றிய எண்ணத்தால் உலகத்தவர்கள் உவகை கொள்கிறார்கள் என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று யாழ் மாவட்ட கலைஞர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.
இவருடன் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத்துணைத்தூதுவராலயத்தின் தூதுவர் மூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா,பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் லண்டன் வோல்தம்ஸ்ரோவ் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கொடைவள்ளல் கோபாலகிருஸ்ணன், வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் ரில்கோ விடுதி உரிமையாளர் திலகர் எனப்பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா மேலும் தெரிவிக்கையில்
புழுகூட புலியான ஈழத்தமிழ் மண்ணில் என் பாதங்கள் படும் போது தமிழன் என்ற நிலையின் நான் பரவசமடைகிறேன்.
உலகத்தமிழருக்கு தமிழன் என்ற அடையாளத்தை தந்தவர்கள் ஈழத்தமிழர்கள்.
நீங்கள் கடந்து வந்த பாதைகளை, வாழ்ந்த வாழ்க்கை முறைகளை எண்ணிப்பார்க்கிற போது எங்கள் ஒவ்வொருவரின் இதயவேதனையை யாராலும் இலகுவில் மாற்றமுடியாது.
எதிர்ப்பு சக்தி இல்லாத எந்த உயிரினமும் இந்த உலகில் வாழமுடியாது என்பது கூர்ப்புக்கொள்கையாகும். புழு பூச்சி கூட எதிர்க்கும் ஆற்றலை பெறுகின்ற போதுதான் தன் வாழ்வியலை பெற்றுக்கொள்கிறது.
ஈழத்தமிழர்களும் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருந்தமையால்தான் தம் வாழ்வியலுரிமைக்காக யாரையும் எதிர்க்கும் சக்தியாக அவர்கள் உருவெடுத்தார்கள். எனவும் தெரிவித்தார்.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKaju1.html

Geen opmerkingen:

Een reactie posten