தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

கண்காணிக்க வந்த குழுவினர் யார்? யாழ்.மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்ட படையினர்

வந்துரம்ப பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஜினாமா
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 05:15.24 PM GMT ]
காலி, வந்துரம்ப பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரதேச அரசியல்வாதி ஒருவரினால் பிரயோகிக்கப்படும் அழுத்தம் காரணமாக இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வந்துரம்ப பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக ஜீ.எல்.கீர்த்திசிங்க கடமையாற்றி வந்தார்.
அண்மையில் வந்துரம்ப பிரதேசத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவிருந்த தேர்தல் மேடை தாக்கி உடைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமவின் பாதுகாவலர்கள் மூன்று பேரை வந்துரம்ப பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட பாதுகாவலர்களை பிரதி அமைச்சர் பலவந்தமாக பொலிஸ் நிலையத்திற்குள் பிரவேசித்து தனது சொந்த வாகனத்தில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சருக்கு எதிராகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அழுத்தங்களை தாங்கிக் கொள்ள முடியாது தாம் பதவியை ராஜினாமா செய்வதாக வந்துரம்ப பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் பிரயோகிக்கும் அழுத்தங்கள் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaip5.html
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சட்டவிரோத ஆயுதங்களைக் களைய விசேட நடவடிக்கை
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 11:13.09 PM GMT ]
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சட்டவிரோத ஆயுதங்களைக் களைவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோத ஆயுதப் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் பொலிஸ் நிலையங்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சிலரிடம் சட்டவிரோத ஆயுதங்கள் பல இருப்பதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சட்டவிரோத ஆயுதங்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் உயிர் பலிகளோ ஆயுத பயன்பாடோ இடம்பெறுவதனை தவிர்க்கும் வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பற்றி தேடுதல், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள் உண்டா என சோதித்தல், திடீர் சோதனைகளை நடாத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சட்டவிரோத
ஆயுதப் பயன்பாட்டை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaiqy.html

கண்காணிக்க வந்த குழுவினர் யார்? யாழ்.மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்ட படையினர்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 04:49.35 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பினை மேற்கொள்ளவுள்ள படையினரை கண்காணிக்க வந்த குழுவினர் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எங்கே தங்கியிருக்கிறார்கள்? என யாழ்.மாவட்டச் செயலகத்தினையும், யாழ்.தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினையும் இன்றைய தினம் முற்றுகையிட்ட படையினர் மேற்கண்டவாறு விசாரித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015ம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் தபால்மூல வாக்களிப்பு நாளை 23ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த தபால்மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்காக தேர்தல் திணைக்களத்தின் 250 உத்தியோகஸ்த்தர்கள் கொண்ட குழு வடக்கிற்கு வருகை தந்துள்ளது.
தபால்மூல வாக்களிப்பில் வடமாகாணத்திலுள்ள சகல படைமுகாம்களிலும் கடமையாற்றும் படையினரும் வாக்களிப்புச் செய்யவுள்ளனர்.
இந்நிலையில் படைமுகாம்களில் வாக்களிப்பினை ஒழுங்குபடுத்துவதற்கும், கண்காணிப்பதற்குமாக, மேற்படி 250 உத்தியோகஸ்த்தர்கள் வடக்கிற்கு வந்திருந்தனர்.
குறித்த செய்தி நேற்றைய தினம் வெளியான நிலையில் இன்றைய தினம் காலை யாழ்.மாவட்டச் செயலகத்திற்குச் சென்ற படையினர், விசாரணைகளை நடத்தியிருக்கின்றனர்.
இதன் போது விடயத்தை அதிகாரிகள் தெரியப்படுத்தியதையடுத்து, மேற்படி குழுவினரை சந்திப்பதற்காக படையினர் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் குறித்த குழுவினரை படையினர் சந்தித்தனரா? அங்கே என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இல்லை
http://www.tamilwin.com/show-RUmszCRWKaip4.html

Geen opmerkingen:

Een reactie posten